ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 17, 2018

தற்கொலை செய்து இறந்த ஒரு பெண்ணை எழுப்பியது – நடந்த நிகழ்ச்சி


குருநாதர் காட்டிய வழியில் திருத்தணிக்குப் போய்க் கொண்டிருக்கும் வழியில் ஒரு இடத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

ஒரு புருஷன் பெண்டாட்டி இரண்டு பேருக்குள்ளும் தகராறு ஆகி அதனால் மனைவி தூக்குப் போட்டு இறந்துவிட்டது. அந்த இடத்திற்கு எம்மைக் (ஞானகுரு) கூப்பிட்டுக் கொண்டு போனார்கள்.

அந்த இறந்த பெண்ணை அங்கே தூக்கி வைத்துக் கொண்டு செத்தவர்களை நீங்கள் எழுப்புவீர்கள் அல்லவா...! எழுப்புங்கள்...! என்று என்னிடம் சொல்கிறார்கள்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்ட மாதிரி இருந்தது...! யார் ஐயா.. “இப்படிச் சொன்னது...?” என்று நான் கேட்டேன்.

1.எங்கள் உணர்வில் தெரிந்தது...
2.நீங்கள் அந்த அம்மாவை எழுப்புங்கள் ஐயா...! என்று அங்கிருந்த ஒரு பெரியவர் சொல்கிறார்.
அவருடைய மருமகள் போலிருக்கின்றது.

அப்புறம்... “இது என்னடா விவகாரமாக இருக்கின்றது...?” என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

நம்மை முதலில் அங்கே கூட்டிக் கொண்டு போனவர்கள் “அது எப்படி ஐயா இறந்தவர்களை எழுப்ப முடியும்..?” என்று கேட்கின்றார்கள்.

எங்கள் உணர்வுக்குத் தெளிவாகத் தெரியுதுங்க...! அவர் எழுப்பட்டும். நீங்கள் ஏன் தடையாக இருக்கின்றீர்கள்..? நீங்கள் பேசாமல் இருங்கள்...! என்று அந்தப் பெரியவர் சொல்கின்றார்.

அப்பொழுது அங்கே கூட்டம் கூடிவிட்டது.

சரி என்று சொல்லி விட்டு.. இது என்னடா விவகாரமாக இருக்கிறது....? என்று அப்புறம் குருநாதர் சொன்னபடி சில நிலைகளைச் சொன்னதும் அந்த அம்மா எழுந்தது. சரியாக ஆனது.