ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 23, 2018

ஆஸ்துமா… டி.பி. மூச்சுத் திணறல்.. சளித் தொல்லை… உள்ளவர்கள் நுரையீரலுக்குத் தியானிக்க வேண்டிய முறை


நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்ட உணர்வுகளைச் சுவாசிக்கின்றோமோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் தான் நுரையீரலில் கலக்கின்றது.

உதாரணமாக வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகள் அதிகமாக நம் நுரையீரலுக்குள் செல்லும் போது அவைகளை நுரையீரல் ஈர்ப்பாக எடுத்து அதன் வழி கொண்டு செயல்படுத்தும் போது சளித் தொல்லையும் ஆஸ்த்மா போன்ற நோயும் உருவாகக் காரணமாகின்றது.

ஆஸ்த்மா முதிர்ந்தால் டி.பி. என்ற விஷ அணுக்களை உருவாக்கும் நிலை ஆகிவிடுகின்றது. அப்பொழுது அது நுரையீரலையே உணவாக உட்கொள்ளும் அணுவாக மாற்றப்படும் பொழுது நுரையீரல் பலவீனமடைகின்றது.

ஏனென்றால் உப்புச் சத்து என்ற நிலை வரப்படும் போது உப்புச் சத்து அதிகரித்தால் நுரையீரலில் சளி அதிகரிக்கும். சளியின் தன்மை அதிகரித்தால் மூச்சுத் திணறல் ஏற்படும்.

அதனால் டி.பி. அதிகமாகி அத்தகைய அணுக்கள் மோதும் போது நுரையீரலுக்குள் கசிவாகி இரத்தத்தைக் கக்கும் தன்மை வருகின்றது. இதைப் போன்ற பலவீனமான அணுக்கள் உருவாகி அதனால் நமக்குள் பலவிதமான நோய்கள் வருகின்றது.

வேதனை வேதனை என்று வேதனையைச் சுவாசித்தால் சுவாசப்பைகளில் விஷத் தன்மை கொண்ட அணுக்கள் படர்ந்து அது நுரையீரலை வலு இழக்கச் செய்கின்றது. சுவாசித்த உணர்வுகள் உமிழ் நீராகி குடல் பாகங்களையும் பாதிக்கின்றது.

இதை எல்லாம் மாற்றிக் கொள்வதற்கு நாம் எப்படித் தியானம் செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வின் தன்மையைச் சுவாசித்து உங்கள் சுவாசப்பைக்குள் செலுத்துங்கள்.

நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை நுரையீரலுக்குள் செலுத்தி அதை வீரியமடையச் செய்யுங்கள்.

உங்கள் சுவாசத்தைச் சீராக இயக்கும் அந்த அணுக்களை வீரியமாக்கி தெளிந்த உணர்வின் தன்மையை அது உங்களுக்குள் பெறக்கூடிய தகுதி பெறச் செய்வதே இந்தத் தியானம்.
1.நுரையீரல் இப்பொழுது நல்ல உற்சாகம் அடையும்
2.சளி இருந்தாலும் அது குறையும்.
3.ஆஸ்த்மா இருந்தாலும் அல்லது டி,பி இருந்தாலும் கேன்சருக்குண்டான அணுக்கள் இருந்தாலும் அதையெல்லாம் மாற்றி
4.நுரையீரலைத் தெளிவாக்கும் தன்மை வருகின்றது.

ஆஸ்த்மா டி.பி. உள்ளவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு ஒரு ஐம்பது தடவையாவது செய்ய வேண்டும்.

அந்த எண்ணத்தை ஏங்கி வலுப் பெறச் செய்து மேலே சொன்ன நோய்களை எல்லாம் நீக்கிவிடலாம். மேலும் வராது தடுக்கவும் முடியும்.