ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 11, 2018

நம் எதிரி எங்கும் இல்லை…! நமக்குள்ளேயே உண்டு – “ஊழ் வினை”


 1.பல கோடிச் சரீரங்களில் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது “ஊனாகி…”
2.விலா எலும்புக்குள் பதிவாகும் பதிவின் வித்தாக பாதுகாப்பான நிலையில் அதை வைத்துள்ளது.
3.”ஊழ் வினை…!” என்று இதைத்தான் சொல்வது.

ஒருவன் ஏசுகின்றான்… பழி தீர்க்கின்றான்…! என்ற உணர்வினை நாம் கவர்ந்து கொண்டால் அது ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது. (நிலத்திற்குள் எப்படிப் பதிவாகின்றதோ அது போல எலும்புக்குள் பதிவாகின்றது?

கூர்மையாக அவரை உற்று நோக்கும் பொழுது கண்களின் கரு விழியால் தான் விலா எலும்புக்குள் பதிவாகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தறிந்த பின் யாரை உற்றுப் பார்த்தோமோ மீண்டும் அதே கரு விழியால் அவரை எண்ணப்படும் போது அதே உணர்ச்சிகள் உந்துகின்றது.

கரு விழியுடன் சேர்ந்த காந்தப்புலன் அறிவு அவர் நம்மை ஏசிப் பேசிய உணர்வுகளைக் கவர்ந்து நுகரச் செய்கின்றது. உணர்ச்சியின் தன்மை கொண்டு நம்மை இயங்கச் செய்கின்றது.

அதே போன்று ஒருவன் நம்மை வேதனைப்படுத்தினான் என்று பதிவாக்கிக் கொண்டால் அவனை எண்ணும் போதெல்லாம் நம்மை அறியாமலேயே அந்த வேதனை உணர்ச்சிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

அவனை மீண்டும் மீண்டும் எண்ணினால் அன்று செயல்படும் காரியங்கள் அனைத்தையும் சரியாகச் செய்ய முடியாதபடி நீங்களே (அந்த எண்ணம்) தடையாக ஆக்கி விடுகின்றீர்கள்.

நாம் நுகர்ந்த உணர்வு உடலுக்குள் இருந்து அவ்வாறு இயக்கத் தொடங்கிவிடுகின்றது. ஆகவே
1.எதிரி எங்கு இருக்கின்றான் என்றால்
2.நமக்குள்ளேயே உண்டு….!

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.

இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஏக்கத்தில் எவர் ஒருவர் அருள் ஞானத்தின் உணர்வைத் தனக்குள் பெருக்க வேண்டும் என்று நுகர்கின்றனரோ அவர்கள் அந்த ஆற்றலைப் பெறுகின்றார்கள்.

வாழ்க்கையில் தீமைகளைக் கண்டுணர்ந்தால் அஞ்சும் நிலையை மாற்றி விட்டுத் அந்தத் தீமைகளை நீங்கள் பதிவு செய்யாது மகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஓங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

பின்பு…
1.என் பார்வை மற்றவர்களை நல்லவராக்க வேண்டும்
2.நல்ல செயல்களை மற்றவர்கள் செயல்படுத்த வேண்டும் என்று
3.இந்த உணர்வினைக் கவர்ந்து விட்டால் மற்றவர்களின் தீமைகள் நமக்குள் வளராது.
4.அவ்வப்போது வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்.
5.உங்கள் நினைவாற்றல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில் இணையச் செய்யும்.

நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த அருள் ஞானத்தைக் கொண்டு வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் கஷ்டங்களையும் போக்கிவிடலாம்.

ஆகவே யாம் உபதேசிக்கும் உணர்வை உற்று நோக்கி கூர்மையாகப் பெற வேண்டும் என்று எவர் ஒருவர் ஏங்கி அதைப் பெறுகின்றனரோ அவர் உடல்களில் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினால் அந்த அருள் ஒளியை நீங்கள் பெறுகின்றீர்கள்.
1.உங்களுக்குள் இருள் சூழச் செய்யும் நிலைகளை நீக்கி
2.உங்கள் மனதைத் தெளிவாக்கி
3.உங்கள் உடலிலுள்ள அணுக்களைத் தெளிவாக்கி
4.இந்த உடலை விட்டு எந்த நேரம் பிரிந்து சென்றாலும்
5.பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.