
வராமல் வந்துற்ற மாமணியை… (உயிராத்மாவை) அறிந்து கொண்ட பின் அதைச் சாராமல் போவாயா…!
குணங்களை உள் அடக்கும் மறை பேராம்
1.மனித ஆற்றலின் மகோன்னத சக்தியாக
வழியறிந்து கொண்டவன்
2.அவன் வழிப்பயணாமாகும் செயலில் தடை
எதுவும் கிடையாது.
ஆசையும் மோகமும்
வாழ்க்கை அனுபவத்திற்குள் அடங்கும். அவைகளைக் காட்டிலும் சினத்தின் குணமே வலிமை உடையது. மனிதன்
சினத்தின் வசம் ஆட்படும் போதெல்லாம் உலக சிருஷ்டியை பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.நாம் ஏனையோரை வழி நடத்த வந்துள்ளோம் அல்லவா…?
2.நாமே கோபப்பட்டால் தகுமா…? என எண்ணிடல் வேண்டும்.
யானைக் கூட்டங்களை வழி நடத்தும் வலிமை
கொண்ட மன்மத யானை பக்குவமாக மேய்ச்சல் இடம் காட்டி… அருந்துவதற்கு
நீர் நிலையையும் காட்டித் தன் குழுவைப் பாதுகாப்பது போல்… நல்
நிலையில் செயல்படுவோம்… உயர்வோம்…! என்ற
சிந்தனை கொள்ளல் வேண்டும்.
சகல சிருஷ்டிகளும்
அணுத் திறளால் ஆனது. மனிதனும் ஓர் பொருள். “வளர்ந்து கொண்டிருக்கும் உயிராத்ம சக்தியால்…” மனிதன்
உயர் நிலை பெறுகின்றான்.
1.மரணத்தை வென்றிடும் மனோதிடம் கொள்ளுதல் தான்
2.சித்தனாகும் உயர்வுக்குப் படிக்கட்டு.
மனத்தினை மெய்ஞானத்தின்
பால் செலுத்திவிட்டால்… அது மீண்டும் மாற்று நிலை பெற்றிடா
வலிமை கொண்டு விடும்… “பஞ்சு திரி ஆவதைப் போல்…!”
காற்றினால் உந்தப்படும்
பஞ்சு அலைக்கழிந்து ஓடுகிறது. அந்தப் பஞ்சானது
நீரினை உண்டு விட்டால் விழும் நிலையும்… அதே பஞ்சு நெருப்பினை
உண்டு விட்டால்… தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு
விடுகிறது.
1.இதை அழியும் நிலை பாடம் என்று எண்ண வேண்டாம்
2.வானுறப் பறக்கும் பருந்துக்கும் பாடமுண்டு
3.சுட்டிக் காட்டுதல் எல்லாமே மனத்தின் பக்குவத்திற்கே.
“வராமல் வந்துற்ற மாமணியை… உயிராத்ம சக்தியை… மெய் உணர்வால் அறிந்து கொண்டிட்ட பின்… அதைச் சாராமல்
நீ போவாயோ…?”
இரு வித செயல்நிலைகள்
ஒவ்வொரு குணத்தின் செயல்படு நிலையில் சாந்த குணத்தை வளர்க்க… சமமான நிலை நிலைக்க… யாம்
சுட்டிக் காட்டிடும்
1.மனத்தின் கரு விழித்து விட்டால்
2.சித்தன் நிலை (உன்) கை வசமே…!
ஆற்றெடுத்த மன வாழ்வில்
இரு நிலை தவிர்த்திருத்தல் (நன்மை/ தீமை…
இன்பம்/துன்பம்) என்பது
1.ஞானத்தின் பால் திருப்பப்படும் மனமே திரியான பஞ்சு.
2.எண்ணத்தை மறைந்திருக்கும் மாயை எனும் மூட மேக இருள் நீக்கப்படும் போது தான்
மனிதன் உயர்கின்றான்.
சூரியனை மறைத்திடும்
மேகக்கூட்டம் விலகிடும் செயலில்
1.முன்பாகவே ஒளிக்கதிர்கள் காட்டிடும் அவ்வாதவனின் நிலையை
2.மனத்தின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்.
மேக இருள் விலக்குதல்
என்பதே முயற்சி…!
ஞானச்சுடராம் ஞானச்
செல்வங்கள் (நீங்கள்) இந்தச்
சூட்சமப் பொருளைச் சுவாசித்திடும் பொழுதே “உணர்ந்து கொள்வீர்கள்…”