
“உயிரிடமிருந்து” நற்றேன் பருகிடல் வேண்டும்
நரலாகும் பொருள்
உணவாகும் பொழுது அதைச் சுவைக்கின்றோம். எப்படி…?
மனிதன் எண்ணுகின்ற
எண்ண ஓட்டத்தில் உலகோதய நடைமுறைச் செயலுக்கு கவனத்தைச் செலுத்தி உணவை உட்கொண்டிடும்
பொழுது அது சுவைபட அருந்தும் நிலையன்றி இப்பரு உடலினுள் அமைவு பெற்றிருக்கின்ற பை “இரைப்பை…!”
அந்தப் பையினுள்
எரிகின்ற நெருப்பு தன்னில் இடப்படுகின்ற எரியைச் செரித்திடும் முன்பாக
1.நாசியில்… சுவாச ஓட்ட கதியில்…
எண்ண ஓட்ட வாசனைக்கொப்ப சமைப்பின் சமைப்பு தொடங்கப் பெற்றே
2.இரசமாகிய சக்தி நரம்புகளின் சுவாச ஓட்டச் செயலில் ஈர்த்துக் கொண்டிடும் துடிப்பு
அலைகளாக ஓடி
3.இரைப்பையில் இடப்பட்ட எரிவைப் பயனுறும் செயலாக்கி
4.கழிவையும் நீக்குகின்ற உடல் தொழில் சூட்சுமத்தில் “ஆத்ம
பலம் கூட்டுமப் பொருள் காண வேண்டும்…”
நரல் என்று தேனை
உரைத்தோம். முதல் பண்ணவன் (உயிர் – குரு)) இடத்தில் நற்றேன்
பருகிடல் வேண்டும். நேற்றைய பாடத்தின் தொகுப்பில் மறைபொருளாகக்
காட்டியதையே விண்டு உரைக்கின்றோம்.
நாத நாதாந்தம் காட்டிடும்
எண்ணக் குவிப்பாக உயிரான்ம சக்தியை ஜெபிக்கின்ற வழிதனில்
1.உயிரே குரு என அழைத்திடும் முதல் பண்ணவன்
2.”உயிரை எண்ணி,,,: அகம் விடாது ஜெபித்திடும் ஜெப நிலையில்
3.நாதவாகினி அமுதமாகப் பெருகிடும் ஜெபத்தின் சக்தியே “நாம்
கூற வந்த நரல்…” (உயிருடன் ஒன்றும் நாதம்)
புற உடல் பயனுறச்
செயல் கொள்ளும் நிலை போல் அக உடல் அருந்தும் ஞானத்தேன் எந்த நிலை பெறும்…?
அனைத்துமே அவரவர்களின்
எண்ணத்தின் செயல்பாட்டில் இயங்குகின்றதப்பா…!
காட்சி:- வெற்றிடமான இடம்… பின்பு
தென்னங்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து தோப்பாகின்றது. தன் இனத்தைக்
கூவி அழைத்து உணவு உண்ணும் காக்கை. உணவினை எடுத்துச் செல்கின்ற
சிற்றெறும்புகளும்.
இதன் பொருளைக் கூறும்
முன் தெரிய வேண்டியது… எரிகின்ற அக்கினியில் போடப்படுகின்ற
பொருள்கள் எல்லாமே ஒரு நிலை பெற்று “கனன்று…” உருமாறி பொருள் தன்மையே மாறி விடுகின்றது.
ஆனால் பரு உடலில்
இயங்கிடும் மறைமுக அக்கினி பொருளின் ரசத்தினைப் பிரித்து உடல் செயல் கொண்டிடச் சேமிப்பாக்குகின்றது.
சேமிப்பின் நிலையைப்
பற்றிக் காட்டிடவே காட்சியின் விளக்கம்…!
நீர் நிலை கொண்ட
இடமாகத் தேர்வு செய்து பயிர் வளர்த்து வளர்ந்த பின் அது தோப்பாகின்றது. அதையே தனக்கு உகந்த இடம் எனத் தேர்வு செய்து கூடு
கட்டுகின்றது காகம்.
தன் இனத்திற்கு
உணவை ஊட்ட… அரற்றியே கரைகின்றது… உணவை உண்கின்றது… தன் குஞ்சுகளுக்கும் ஊட்டுகின்றது. உணவாம் சேமிப்பு செயல் கொண்டிட அது கொண்டிட்ட உணர்வால் சேமிப்பின் வழிமுறைகள்
இன்றி உலவுகின்றது.
ஆனால் எறும்போ ஊர்ந்து
கொண்டிருக்கும். தன் தொழிலின் நிலையில் தன் இனத்திற்கு
ஊட்டும் சேமிப்பையும் பெற்று விடுகின்றது.
அப்படி என்றால்
நமக்கு இனமூட்டும் சேமிப்பு எது…?
ஜீவ ஆதார சக்தி
வலு கொண்டிடும் ஜெபமாக…
1.சரீர உயிரணுக்கள் அனைத்திலும் ஒளியை ஊட்டமாகப் பெற்று
2.அதை வழி நடத்தும் தன்மையாக தொழில் படவே இனமூட்டும் சேமிப்பை உரைத்தோம்.