ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 24, 2025

“மாமகரிஷி ஈஸ்வரர்” தன இன மக்கள் பால் கொண்டுள்ள ஆசை

“மாமகரிஷி ஈஸ்வரர்” தன இன மக்கள் பால் கொண்டுள்ள ஆசை


விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம் அதிலே அஞ்ஞான வாழ்க்கையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்தின் துணை கொண்டு வாழ்ந்தாலும் ஞ்ஞானத்தின் வளர்ச்சியே அதிகரிக்கிறது மெய்ஞானத்தின் நிலைகள் மறைகின்றது…!
 
இதைப் போன்ற நிலையில் இருந்து மனிதர்கள் மீள வேண்டும் என்பதற்கே
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரர் தனது வாழ்க்கையில் கண்டறிந்த பேருண்மைகளை
2.மனிதனான தன் இன மக்கள் அறிதல் வேண்டும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும்
3.தன்னை அறியாது வரும் இருளை நீக்கிடும் அந்த ஆற்றல் பெற வேண்டும் என்ற இந்த ஆசையில்
4.தனக்குள் பெற்ற அருள் சக்தியை மக்கள் பெற வேண்டும் என்று அதற்கு வேண்டிய உணர்வுகளை வழி நடத்தினார்.
5.அதற்காக எம்மை அனுப்பினார்.. அவருடைய உணர்வுகளுடன் என்னை ஒன்றாக இணையச் செய்தார்.
6.உணர்வுகளை ஆழமாகப் பதியச் செய்தார் அவர் கண்ட பேருண்மைகளை எம்மையும் அறியும் படி செய்தார்.
7.அறிந்த உணர்வின் தன்மையை மக்களுக்கு நீ எடுத்துக்காட்டு என்று சொன்னார்.
 
அந்த உணர்வினை மக்களுக்கு எடுத்துக்காட்டு என்று சொன்னாலும் ஊழ்வினை என்ற வித்துக்களாக” முதலிலே அவர்களுக்குள் பதியச் செய். அவர்கள் மீண்டும் அதை எண்ணும் பொழுது அந்த அருள் வழியில் அந்த எண்ணமே அவர்களை மீட்ட உதவ வேண்டும்.
1.உன்னை நீ நம்புகின்றாய்…!
2.அதைப் போன்று அவர்கள் அவர்களை நம்ப வேண்டும்…”
 
அருள் உணர்வின் சக்தி எதையெல்லாம் உன்னிடமிருந்து அவர்கள் கேட்டு உணர்கின்றார்களோ நல்லது என்று உணர்ந்த பின் அந்த நல்லதையே கவரும் உணர்வுகளை நீ ஊட்ட வேண்டும்.
 
அதைக் கவர்ந்தால் அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் பெருகும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெறுகின்றார்கள்.
1.அதனை நீ செய்வாயாக…! என்று அருள் வாக்கினை வாங்கிக் கொண்டுதான்
2.எமக்குப் பல உண்மையின் உணர்வுகளை உபதேசித்தார்… ணர்வின் ஆற்றலைப் பெறும்படி செய்தார்.
 
உலக மக்கள் அனைவரும் நல்லவரே…!ன்று உலகெங்கிலும் மதம் இனம் என்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலையில் இருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்பதற்காக இதைச் சொன்னார் குருநாதர்.
 
அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).