ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2024

ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்.. ஓமுக்குள் ஓம் என்றால் பொருள் என்ன…?

ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்.. ஓமுக்குள் ஓம் என்றால் பொருள் என்ன…?

 

உதாரணமாக மிளகாயை அரைத்து சப் என்று இருக்கும் மாவிற்குள் இணைத்து விட்டோம் என்றால் மாவின் சுவை காரமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான்
1.ஒரு புலி மானின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்த சாந்த உணர்வுகள் இதற்குள் அடங்கி விடுகின்றது.
2.ஆனால் சாந்த குணம் கொண்ட மானோ புலியின் உணர்வை நுகரப்படும் பொழுது
3.மானின் சாந்த உணர்வுகள் அந்தப் புலியின் கடுமையான கார குணத்திற்குள் ஒடுங்கி விடுகின்றது அதன் வழியே அது அடக்கம் ஆகின்றது.

அது தான் மூஷிக வாகனா…!

மானோ புல்லைப் பார்த்து அதன் மணத்தை நுகர்ந்து… அதனின் உணர்வு கொண்டு அதே மணம் இதற்கு வாகனமாக அமைந்து புல் இருக்கும் இடத்திற்கு இந்த உடலை நகர்த்திச் செல்கின்றது.

புலியோ கடினமான உணர்வு கொண்ட நிலையில் மானை நுகர்ந்த பின் மானின் சாந்த உணர்வு இதற்குள் ஒடுங்கினாலும்… மான் புலியை நுகரப்படும் பொழுது இதனுடைய கடுமை மானின் சாந்த உணர்வுக்குள் சேர்த்துக் கொண்ட பின் கணங்களுக்கு அதிபதியாகி அதை அடக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.

ஏனென்றால்
1.சாந்த உணர்வின் தன்மை அணுவாக “ஓ…” என்று இயக்கினாலும்
2.ஓமுக்குள் ஓம் - புலியின் உணர்வுகள் அது கடுமையாக்கப்படும் பொழுது சாந்த உணர்வுக்குள் நின்று
3.அதன் அணுவின் தன்மையை இது இயக்கி இதை அடக்கும் போர் முறை கொண்டு
4.இந்த அணுத் தன்மை அதற்குள் துடிப்பின் வேகத்தை அதிகமாகக் கூட்டுகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தவர்களை டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்தால் “துடிப்பு நிலையும்… கொதிப்பின் நிலையும்” அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்.

காரணம்… சாந்த குணங்கள் கொண்ட நாம் பிறரைக் கோபிக்கும் உணர்வு கொண்டு அவர்கள் செயல்படும் நிலையோ அல்லது நாம் செயல்படும் எண்ணத்தை சீராக அமைக்கவில்லை என்றால் எதிர்மறையாக தாக்கப்பட்டு விடுகிறது (ஒரு பொருளுடன் ஒரு பொருள் தாக்கப்படுவது போல்)

1.சாந்த உணர்வு கொண்டு மிருதுவான பொருள் மற்றொன்றுடன் மோதினால் அதனில் வேகத்தடிப்பு வருவதில்லை.
2.ஆனால் கடினமான பொருள் மற்றதுடன் தாக்கப்படும் பொழுது துடிப்பாகி வெப்பம் உருவாகின்றது

அதைப் போல் மனிதருக்குள் கடினமான உணர்வு மோதினால் அதனால் உணர்ச்சியின் வேகமும் (துடிப்பு வெப்பம்)… வலியும் வேதனையும் அதிகரிக்கிறது.
1.வேக உணர்வு கொண்டு தாக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்குள் ஊடுருவி
2.அணுவின் தன்மை அடைந்து இதை அடக்கும் வல்லமை பெறுகின்றது.
3.அதாவது அந்த அணுவிற்குள் ஓமுக்குள் ஓமாக மாறி இதனை அது அடக்கிடும்… அதற்குள் இது அடங்கி இதனின் செயலாக்கத்தைக் குறைக்கின்றது.

“சாந்த குணமும் சாந்த எண்ணங்களும் அதை வளர்க்கும் தன்மை இழந்து” இந்தக் கோபமான (காரத்தின்) உணர்வை வளர்க்கப்படும் பொழுது… அதற்குள் நாம் பார்க்கும் மற்ற நல்ல குணத்தை எல்லாம் அடக்கிவிடும்.

1.ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்…! என்ற நிலைகளில்
2.இந்தக் கார உணர்வுகள் அதற்குள் ஒடுக்கி விடுகின்றது
3.நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

நல்ல மனத்தை உருவாக்காத நிலையினைக் கொண்டு வரப்படும் பொழுது மனிதனுக்கு “இரத்தக் கொதிப்பாக” வருகிறது.

ஆசைகளை நிறைவேற்றத் தான் ஆண்டவனை எண்ணுகின்றோம்… “அவனுடைய அருளைப் பெற” ஆசைப்படுகின்றோமா…?

ஆசைகளை நிறைவேற்றத் தான் ஆண்டவனை எண்ணுகின்றோம்… “அவனுடைய அருளைப் பெற” ஆசைப்படுகின்றோமா…?

 

இன்றுள்ள உலக நிலை அனைத்திலுமே
1.தன் புகழ் உயர வேண்டும்
2.புகழ் உயரச் செல்வம் வேண்டும்
3.செல்வம் சம்பாதிக்க இவ்வுடல் எனும் கூடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற
4.ஆசை நிலைக்காகத் தான் அநேகம் பேர் பல வழிகளில் ஆண்டவனை வணங்குவதுவே.

ஆண்டவனிடம் தன் ஆசைக்கும் தன் புகழுக்கும் வேண்டக்கூடாது என்பவர்களை எல்லாம் இன்றைய உலகம் “பெரும் பைத்தியமாக” எண்ணுகின்றது.

ஆண்டவன் எங்குள்ளான்…? என்ற கேள்விக்கும் இன்றைய உலகில் அறிந்து பார்க்கும் தன்மை இல்லையப்பா. ஆண்டவனிடம் வேண்டிக் கேட்காவிட்டால் இவ் உடலுக்கு ஆகாரம் வேண்டியதில்லையா…?

ஆண்டவன் தான் பசி என்ற பெரும் பசியை இவ் உடலுக்கு அளித்துள்ளானே. அப்பசியே அடக்க நாம் உண்டு வாழ்வதற்கு அவ்வாண்டவனை வேண்ட வேண்டாமா…? என்றெல்லாம் பல நிலைகளில் எண்ணுகிறார்கள்.
1.இவ்வெண்ணப் பசியை பேராசை கொண்ட பசியாக அலையவிட்டு
2.அதனால் வரும் பல இன்னல்களுக்கு நாம் அடிபணிகிறோம் என்பதை
3.நம் எண்ணப் பசியில் எண்ணிப் பார்த்தால் புரிந்துவிடும்.

இவ்வாத்ம பசியை யாரும் எண்ணுவதில்லை. இவ்வுடல் பசிக்குத் தான் இவ்வுலகமே இன்றுள்ளது இவ்வுடல் பசியினால் தான் வரும் நிலைகள் எல்லாமே நமக்கு நடப்பவை.

இவ் உடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவும் பிற நிலைகளும் நம் ஆத்மாவிற்கு எந்த நிலையில் ஏற்கிறது…? என்று எண்ணி இவ்வுடல் என்னும் பசியை “மனம் எனும் பசியால்” அடக்கி ஆண்டிட முடியுமப்பா.

இவ்வுலகில் உதித்த எல்லோருமே ரிஷிகளைப் போலவும் ஞானிகளைப் போலவும் இவ் உடலுக்கு உணவு உண்ணாமல்… உடல் பசியை அடக்கி ஆளுங்கள் என்று சொல்லவில்லையப்பா.

என் வழியில் இயற்கையில் நம் உடலின் தன்மையைத்தான் நம் உடல் எந்தெந்த நிலையை ஏற்கிறது…? எந்த நிலையில் உண்டு வாழ்ந்திடலாம்…? என்பதுதான் எல்லோரும் அறிந்ததுவே.

அன்ன ஆகாரம் இல்லாமல் வாழ்ந்திடுங்கள். என்று சொல்லவில்லை.
1.இவ்வுடல் என்னும் கூட்டை
2.”எண்ணம் என்ற ஏவலனால்” எந்த நிலைக்கும் வைத்திருக்க முடியுமப்பா.

உண்ணும் உணவிலிருந்து இவ்வுடலுக்கு எப்படிப் பல நிலைகள் கிடைக்கின்றதோ அதே போலத்தான் அவ்வாத்மாவிற்கும் கிடைக்கின்றது.

நாம் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்ந்திடத் தான் வேண்டும் ஆனால் அந்நிலைக்காகப் பேராசை நிலை கொண்டு “தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும்… தனக்குத்தானே எதிரியாகின்றான்…”

இன்று இவ்வுலகில் பெருகி உள்ள மக்கள் நிலையில் அன்பும் ஆதரவும் காட்டி வாழும் நிலைமை மறைந்து விட்டது. தன் உடல் பசி ஒன்றுதான் ஓங்கி நிற்கிறது.

நல்ல உபதேசங்களைக் கேட்பதும் நல்லோர் வழி சொல்வதும் நம் ஆத்மாவிற்குச் செய்யும் நற்பணிகளை நாம் இன்று ஏற்று நடக்கவில்லை. நம் எண்ணங்கள் எல்லாம் இவ்வுடல் என்னும் பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆண்டவனை எண்ணுவதாகவே உள்ளது.

தன் எண்ணமும் செயலும் அமைதி கொண்டு தன் ஆத்மாவை அடக்கி ஆள்பவனுக்கு தன் நிலையில் பதட்டத்தை வளர விடாமல்… தான் என்ற எண்ணம் கொள்ளாமல்… நல்லுணர்வுடன் நம் வாழ்க்கையை நாம் அமைதியுடனும் அன்புடனும் நடத்திச் செல்லும் மனப்பக்குவம் பெற்று… நாம் வாழத்தான் “இன்று நாம் செய்யும் ஜெபமும் தியானமும் இவ்வுபதேசச் சொற்களும்…”

1.இவ் உடல் வேறு என் ஆத்மா வேறு
2.இவ்வுடலில் இவ்வாத்மா தங்கி இருப்பதுவே நாம் பெற்ற பாக்கியமாகக் கொண்டு
3.இவ்வுலக நிலையில் இவ்வியற்கையில் கலந்துள்ள உண்மைகளை அறிந்தே மகரிஷிகளின் சக்தி பெற்று வாழ்ந்திட வேண்டும்.

அச்சத்தி நிலை ஒரே நிலையில் தான் உள்ளது. நாம் எந்த நிலை கொண்டு ஏற்கின்றோமோ அந்த நிலைக்குத்தான் அச்சத்தி நிலை நம்முடன் வரும்.

இன்று வீசும் இக்காற்றையே நாம் எண்ணிப் பார்த்தால் நம் நிலைக்கு எல்லாம் விளங்கும்.
1.கொதிக்க வைத்த தண்ணீரை ஆற்றுவதும் இக்காற்றுதான்
2.அனல் கொண்டு எரியும் விறகை எரிய விடுவதும் அக்காற்று தான்.

ஒரே நிலை கொண்டு வீசும் காற்று தான் இவ்வனலையும் எரிக்க உதவுகின்றது. கொதிக்கும் நீரையும் குளிர வைக்கின்றது அச்சக்தி நிலையும் நம் நிலைக்கு அப்படித்தான் வருகிறது.

1.எந்த நிலை கொண்டு நாம் எங்கு செல்கின்றோமோ அந்த நிலை கொண்டு தான் அச்சக்தி நமக்கு உதவி புரிகின்றது
2.நம் எண்ணத்திற்கு உகந்தபடி தான் ஆண்டவனின் சக்தியையும் நாம் பெற முடியும்.

ஆனால் இவ்வுலகமே இவ் எண்ணம் என்ற பசி நிலையைக் கொண்டு தான் இன்று சுற்றி வருகின்றது

August 30, 2024

உயிரிலே பட்ட பின் “உணர்வின் ஒலிகள்” எப்படி எழும்புகிறது…?

 

உயிரிலே பட்ட பின் “உணர்வின் ஒலிகள்” எப்படி எழும்புகிறது…?

 

உதாரணமாக ஒரு கடலைச் செடியில் விழுந்த உயிரணு அதனின் உணர்வின் சத்தை நுகர்ந்தால் அந்தச் சாந்த குணத்தின் அணுக்களாக உருவாகும்… மற்றொன்றைக் கொல்லும் தன்மை இழந்து விடுகின்றது.
1.அணு செல்களாக இருப்பதை ஜீவணுக்களாக இந்த உயிரணு மாற்றப்படும் பொழுது
2.அதனின் அணுவின் மலமாக புழுவின் உடலாக வளர்கின்றது
3.உணர்வின் எண்ணங்களாகத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.

இப்பொழுது மைக் இல்லாமல் நான் (ஞானகுரு) பேசினால் உங்களால் கேட்க முடியுமா…? சப்தம் வராது. மைக் ஆக “எது” அமைகின்றது…?

சூரியணிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் அதற்குள் (செடிக்குள்) வளர்கின்றது அதே வெப்பத்தையும் காந்தத்தையும் ஈர்த்து எந்த மணத்தின் தன்மை வருகின்றதோ செடிக்குள் வருகின்றது.

இந்தச் செடியின் மணம் (சத்து) வெளிவரப்படும் பொழுது
1.சூரியனுடைய காந்த சக்தி அதை எடுத்துக் கொண்டால் தான்
2.இதில் உள்ள விஷத்தின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டவும்
3.வெப்பம் அதனின் உணர்வின் மணத்தைக் கூட்டவும் அது செயல்படும்.

அப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு மைக்கிலே காந்தப் புலனறிவு இல்லை என்றால் ஓசை கேட்குமா…?
1.அந்த காந்த அலைகளின் தன்மைகள்
2.அந்த மேக்னட் இரும்பால் இருந்தாலும்
3.அதிர்வின் ஒலி அலைகளை எளிதாக மெதுவாக (ஒலிகளை வெளிக்கொண்டு வருவதற்காக) ஊட்டுவதற்காக
4.அந்த ஸ்பீக்கரில் காகிதத்தை வைப்பார்கள் அல்லது மெலிதான தகடை வைப்பார்கள்.
5.அந்த காந்தப் புலனை இழுத்து ஒலியின் ஓசையைத் தெளிவாக்குவதற்கு

இது விஞ்ஞான அறிவால் செயல்படும் நிலை.

இதைப் போன்றுதான் இயற்கையின் நியதிகளில் அது எடுத்து வைத்த பின்
1.இந்த உணர்வின் தன்மை (கடலையின் மணத்தை) உயிரணு நுகர்ந்தால் “ஓசையின்” உணர்வாக இயக்கத் தொடங்குகின்றது.
2.செடியாக இருந்தால் இந்த உணர்வின் தன்மைக்கொப்ப அந்த ரூபத்தை அமைக்கும் தன்மை வருகின்றது.
3.ஆனால் மணத்தின் தன்மை கொண்டு அது வெளிப்படும் தன்மை வருகின்றது.

இப்படிப் பல பல உணர்வின் சத்தை எது நுகர்ந்ததோ அதற்குத் தக்கவாறு அதனுடைய சுவைகளும் மாறும். ஆகவே அதனின் மணங்கள் வரும் போது
1.உயிரனங்கள் நுகரும் பொழுது எண்ணங்கள் சீதாராமா
2.அந்த எண்ணங்கள் தோன்றி அதனதன் தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.

இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்கிப் பதிவாக்கிக் கொடுக்கின்றேன் குருநாதர் எனக்குள் எவ்வாறு பதிவாக்கினாரோ அதனின் உணர்வின் செயலாக்கங்களை அறியும் ஆற்றல் பெற்றேன்.

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில்… தீமை என்று உணர்ந்து அறிந்தாலும்
1.அதிலிருந்து விடுபடும் வல்லமையை அதை அடக்கும் வல்லமை கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகளை நுகர்கின்றேன்.
2.அது வளர தீமைகள் அதற்குள் அடங்குகின்றது

விஷம் என்பது வலுக் கொண்டது அந்த விஷத்தை அடக்கியவன் அருள் ஞானி. விஷத்தை ஒளியாக மாற்றிக் கொண்டவன் துருவ மகரிஷி

அவன் வழியைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவினை ஏழாவது நிலையாக உருப் பெற்று ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் வருகின்றார்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பமும் நிகழ்ந்த சந்தர்ப்பத்திற்கொப்ப உணர்வின் தன்மை வரப்படும் போது
1.பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று மனிதனாக எப்படியெல்லாம் வந்தோம்…? என்ற நிலைகளை தெளிவாக்கி உள்ளார்கள் ஞானிகள்.
2.அதைத்தான் உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.

நமக்கு நல்லது செய்யப் “பல பெரியோர்கள் உள்ளனரப்பா…!”

நமக்கு நல்லது செய்யப் “பல பெரியோர்கள் உள்ளனரப்பா…!”

 

இவ்வுலக வாழ்க்கையிலே நமக்கு எஞ்சி நிற்பது எதுவப்பா…? இவ்வுலகம் என்ற மாயையையே எண்ணி “மயங்கி வாழும் வாழ்க்கை தான் வாழ்கின்றோம்…”

1.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…? சொத்தும் சுகமும் ஆளுவது யாரப்பா…?
2.இவ்வுலகில் பிறந்தால் நிலைத்திருப்பது பொருளல்ல. நாம் விட்டுச் செல்லும் நம்முடைய மக்கள் தான் (குழந்தைகள்) என்ற எண்ணம் பலருக்குண்டு.
3.நம் பெயர் சொல்ல மக்களின் நிலை எத்தனை காலங்களுக்கு…?
4.அக்குழந்தைக்குக் குழந்தை என்று இப்படி சுற்றிக் கொண்டு வரும் நிலையினிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…?

“பிறவிப் பயன்… பிறவிப் பயன்…” என்பதைப் புரிந்து வாழ எண்ணிடாமல் இப்புவியில் பிறந்த நாம் எல்லாம் புரிந்து நாம் வாழும் நாட்கள் எங்குள்ளது…? என்று புரிந்து வாழ்ந்திட வேண்டும்.

பூமியில் தோன்றிய “பல புண்ணியவான்கள்”
1.இன்றும் அவர்களுடைய பெயர்கள் நிலைத்திருக்க வாழும் நிலையை
2.நாமும் புரிந்து வாழ்ந்திட வேண்டும்.

இச் சுவாச நிலையில் இருந்து நாம் பெறும் பாக்கியங்களை நாம் பெறும் செல்வங்களை அழியாப் பொக்கிஷமான அச்செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திடப் “பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றார்கள் பல சித்தர்கள்…”

ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல சித்து நிலைகளைப் பெற்று இன்றும் நிலைத்திருக்கவில்லையா…? அவர்கள் பிறந்த பூமியில் பிறந்த நாம் நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றார்கள்.
1.அன்று சித்து பெற்றவர்கள் இவ்வுடலை ஒரு கூடாக வைத்துத் தான்
2.தன் ஆன்மாவை உலகமெங்கும் இம்மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.

இந்நிலையில் வந்தவர் தான் பைரவர் என்னும் ராஜாவும். அவ் அரசர் தான் ஆளும் காலத்தில் தன் உடலை ஒரு கூடாக இருக்கும் நிலையை… தன் சித்து நிலையில் பெற்று அந்நிலையிலேயே பல உடல்களுக்குத் தன் ஆத்மாவைச் செலுத்தி அந்நிலை கொண்டு பல நன்மைகளைத் தன் நாட்டு மக்களுக்காகச் செய்து வந்தார்.

அந்த நிலை கொண்டு அவர் செய்த சித்து நிலை தான் அவர் உடலில் இருந்த ஆத்மா ஒரு நாயின் நிலைக்குச் சென்று அந்நாட்டைக் காவல் காக்கும் நிலையில் செயல்பட்டார்.

இருந்தாலும் அவர் இருந்த நிலையை அறிந்து அவர் உடல் என்னும் கூட்டை அன்று நயவஞ்சகம் படைத்தவர்கள் அழித்த நிலை கொண்டே நாயின் உருவிற்கு ஆத்மா வந்த அப்பைரவ மகாராஜா… இன்றும் அந்நிலை கொண்டே தன் ஆத்மாவை அழியா நிலை பெற்றுப் பிற ஜென்மம் எடுத்திடாமல் “சூட்சும உலகம் சென்று இன்றும் நிலைத்துள்ளாரப்பா…”

அவ் உடல் என்னும் மாயக் கூடு மறைந்தாலும் அவ்உயிர் ஆத்மாவைப் பிற ஜென்மம் எடுத்திடாத நிலை கொண்டு இன்றும் உலகினிலே பல உருவில் வந்து பல நிலையில் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகின்றார்.

நாம் இவ்வுலகினில் கலந்துள்ள பல சித்தர்களின் நிலையை அறிந்து… நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்துதவி… நம் எண்ணத்திற்கும் செயலுக்கும் நல்லணுவாக “நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் பல பெரியோர்கள் உள்ள பொழுது” நம் எண்ணமும் செயலும் பல ஆசை நிலை கொண்ட சுகபோகங்களுக்குத்தான் அடிமைப்பட்டு வாழும் நிலையில் உள்ளது இன்று இவ்வுலகமே.

1.அன்பென்னும் ஆசை வேண்டும்
2.அழியாச் செல்வமான இவ்வாத்மாவை அழித்தே நாம் வாழ்ந்திடாமல்
3.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி அடிபணிந்து வாழ்வதற்கு
4.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தியைக் கொண்டு
5.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே நம் வாழ்க்கை.

ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்… அன்புடன் வாழ்ந்திடுங்கள்… ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்.

August 29, 2024

“பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்

“பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்

 

அருள் ஞானிகள் உணர்வைப் பருகுவதற்குத் தான் ஆலயங்களில் விநாயகரை வைத்துக் காட்டினார்கள்.

உடலில் பட்ட அழுக்கினைத் துடைக்க நீரை ஊற்றிக் குளிக்கின்றோம். அதே சமயத்தில்
1.ஆன்மாவிலே பட்ட அழுக்கினைத் துடைப்பதற்கு “விண்ணை நோக்கி ஏகி”
2.உயர்ந்த சக்திகளை எடுக்கப் பழக்கினான் அன்று ஞானி.

அதற்குப்பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று “எந்த நேரம் நினைத்தாலும்” அந்தச் சக்திகள் கிடைக்கின்றது.

ஆலயத்தில் தீப ஆராதனை காட்டப்படும் பொழுதெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற நாங்கள் வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள். அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி அந்தச் சிலையை உற்றுப் பாருங்கள்.

அந்தச் சிலையில் காட்டப்பட்ட குணங்களை… காவியங்களாகத் தீட்டிய அந்த நற்குணங்கள் நாங்கள் பெற வேண்டும்… இதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எங்குங்கள்.

தெய்வத்தின் மேல் போட்டிருக்கும் மலரின் மணம் நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் அந்த முழுவதும் நறுமணங்கள் படர வேண்டும். என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த நறுமணங்கள் படர்ந்து அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்.

கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும். என் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெற வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் எல்லாம் தெய்வ நிலைகள் பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் அங்கே ஒற்றுமை ஏற்பட வேண்டும் அவர்கள் தொழில் வளர வேண்டும் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.
1.பிறரை நாம் வாழ வைக்க இவ்வாறு எண்ணும் பொழுது
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் வாழ்கின்றன.
3.அப்போது தீமையை அறிவிக்கும் உணர்வுகள் ஒடுங்குகின்றது… அந்தத் தீமையை அறிந்ததோடு அதை நிறுத்திடல் வேண்டும்.

ஆக “பிறரை வாழ வைக்க வேண்டும்” என்ற உணர்வை நாம் அதிகரிக்க வேண்டும்.

குழம்பு வைக்கப்படும் பொழுது காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு என்று பல நிலைகளை சேர்த்துத் தான் அதைச் சுவை மிக்கதாக உருவாக்கி உட்கொண்டு மகிழ்கின்றோம்.

இதைப் போன்றே மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். இது தான் ஆலயம்… நம் உடலே ஆலயம்.

நமக்குள் இருக்கும் நன்மை செய்விக்கும் நற்குணங்கள்… காலத்தால் நல்லதைக் காப்பதற்காக நாம் கேட்டறிந்த உணர்வால் தீமைகள் பல சேர்ந்து
1.நல்ல தெய்வமாக இருந்த நிலைகளை மாறுபடச் செய்யாது
2.நல்ல குணங்கள் இருண்டு விடாது… நஞ்சுக்குள் சிக்காது அதைத் துடைக்கும் மார்க்கமாகத்தான் ஆலயங்களிலே காட்டப்பட்டது.

நம் உடலை ஆலயமாக்கி
1.அந்த ஆலயத்திற்குள் ஈசனாக இருந்து உயிர் இயக்கும் நிலைகளையும்
2.எண்ணியதைப் பிரம்மமாக உயிர் படைத்துக் கொண்டிருப்பதையும்
3.அதைச் சிவமாக உருவாக்கி சிவத்திற்குள் சக்தியாக நம்மை இயக்கிக் கொண்டிருப்பதையும்
4.நம் உயிரை நாம் மதித்து நடக்க வேண்டும்.

காரணம்… நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உயிரே. நாம் எண்ணியதை இயக்கும் ஈசனாக இருப்பதும் உயிரே.

தீமைகளைக் கேட்டறிந்தால் தீமைகள் நுகரா வண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து தீமைகளை அப்புறப்படுத்திப் பழக வேண்டும். அதற்குத்தான் ஆலயம்.
1.ஆலயத்திற்குச் சென்றால் “பிறர் வாழ வேண்டும்” என்று எண்ணுங்கள்.
2.கீதையிலே இதைத்தான் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைக் காட்டினார்கள்.

ஞானிகள் உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன் இங்கே படர்ந்துள்ளது அவர்கள் சொன்ன முறைப்படி நாம் சென்றால் அவர்கள் வாழும் எல்லையை அடைகின்றோம்.

ஈஸ்வரபட்டரின் அருள் வாக்குகள்

ஈஸ்வரபட்டரின் அருள் வாக்குகள்

 

அகத்தினை அன்பு கொண்டால்
ஜெகத்தினை வென்று வாழ்ந்திடலாம்

தங்க வந்த கூட்டினில்
தரணி ஆண்ட வாழ்க்கையில்
தரணிதனில் நிலைத்திட
தவமிருந்தே வாழ்ந்திடுவோம்

ஆண்டவன் என்ற ஆத்மாவை
அடக்கி ஆளப் பார்க்காமல்
ஆத்ம லிங்க தேவனை
அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்

பகவான் படைத்த படைப்பே நாம்
பகவான் எங்கு உள்ளான் என்று
பகுத்தறியும் ஆற்றலைத் தான்
பகவான் அருளிலே பெற்றுள்ளோமே

உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்
உள்ள அழுக்கை போக்க எந்நீர்...?

திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்
திருநீறு அணிந்தே

ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாக
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்

நம்மை ஈன்றவர்… படைத்தவர் யார்…?
நம் முற்பிறவி… இப்பிறவி… மறுபிறவியில் யார்…?
நம்மில் பலரும் உள்ள பொழுது
நான் என்பது யார்…?

ஒன்றில்லாமல் ஒன்றில்லை
ஒன்றில் இருந்து ஒன்றாக
ஓங்கி நிற்கும் சக்தியிலே
ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்

பல ஆசை நிலைகளிலே
பல நிலை அடைவதற்கே
பயம் என்ற பேய்க்கு நாம்
பயந்து வாழ்வது எதற்காக…?

நிலையில்லா வாழ்வினிலே
நித்திய நிலை பெற்றிடவே
நிலையான அன்பைக் காட்டி
நிலை பெற்று வாழ்ந்திடுவோம்

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்
ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே

எண்ணும் எண்ணக் கூட்டினையே
எண்ணும் எண்ண வடிவினிலே
எண்ணப் பேயாய் அலையவிட்டும்
எண்ணத் தெய்வமாய் எண்ணுவதும் எண்ணமே தான்

வஞ்சனை என்ற உலகமென்று
வஞ்சனை என்று எண்ணிப் பார்த்தால்
வஞ்சனை வாழ்வே நமக்குக் கிட்டும்
வஞ்சம் கொண்டே வாழ்ந்திட்டால்…!

வாழ்க்கைப் பாதை வழியினிலே
வழியறிந்து செல்வதுவே
வழியனுப்பி வைத்தவனுக்கு
வழங்கிடும் வாழ்த்ததுவே

வண்டி என்ற கூடிருக்க
வரும் மழைக்குக் குடை எதற்கு
வழங்கியவன் அவன் இருக்க
வரும் வினையை எண்ணலாமோ…?

வல்லினம் மெல்லினம் கொண்டு பிறக்கவில்லை
வரும் வினைக்கு அஞ்சாதே…!

வரும் இடியும் மழையும்
வரும் காற்றும் மணமும்
வழங்கியவன் அவன்தானே

வழங்கியவன் அவனிருக்க
வரும் வினையை எண்ணலாமோ
வழியறிந்தே நீ வாழ்ந்திட்டால்…!

August 28, 2024

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொள்ள வேண்டிய “சரியான நேரம்”

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொள்ள வேண்டிய “சரியான நேரம்”

 

பல வகையிலும் இம்சைப்பட்டுத் தான் இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் தெரிந்து கொண்டேன் (ஞானகுரு). ஏனென்றால் இது அனுபவம்.

ஒவ்வொரு நேரத்திலும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை எனக்கு உருவாக்கினார் குருநாதர்… சிருஷ்டித்துக் கொடுத்தார்.
1.அந்தத் துன்பங்கள் வரப்படும் பொழுது உன் உடலுக்குள் அது என்ன செய்கின்றது…?
2.பின் விளைவு ஒரு வாரத்திற்குள் உன் உடலில் என்னென்ன வேலைகள் செய்கிறது…?
3.அடுத்து அதை நிவர்த்திப்பதற்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்.

தனித்து அழைத்துச் சென்று எனக்குக் கஷ்டங்களை உண்டு பண்ணி… அந்தக் கஷ்டம் எப்படி வேலை செய்கிறது…? அதை எப்படி மாற்ற வேண்டும்…? என்று தெரிந்து கொண்டு வந்தேன்.

அதே சமயத்தில்… உங்களுக்குக் கஷ்டம் சந்தர்ப்பத்திலே உண்டாகின்றது. அந்தக் கஷ்டத்தை உண்டாக்கக்கூடிய நிலைகளை நிவர்த்தி செய்வதற்கு உடனே கையிலே ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாகக் கொடுக்கின்றோம்.

காரணம்…
1.நாம் எதையுமே மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள் தான்
2.இந்த மனித உடலில் இருந்து நாம் அருள் ஒளியைப் பெருக்குதல் வேண்டும்.
3.இந்த உடலிலிருந்து இன்னொரு சரீரம் பெற்று விடக்கூடாது.
4.அது ஒளிச் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்.

ஆகவே முடிவாக “அந்த ஒளிச் சரீரம் பெற வேண்டும்” என்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகள் அருள் ஒளியைப் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை நீங்கள் ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது நம்முடைய உணர்வின் எண்ணங்கள் இந்தப் பூமிக்குள் சுழலாது.
1.அடிக்கடி இவ்வாறு எண்ணினோம் என்றால்
2.விண்ணின் சப்தரிஷி மண்டலங்களினுடைய உணர்வுகள் நமக்கு அதிகமாகக் கிடைக்கும்.

இதற்காக வேண்டி மணிக் கணக்கில் உட்கார்ந்து ஜெபமிருந்து… “சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்வேன்” என்ற நாள் கணக்கில் அமர்வது அல்ல.

இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் எப்பொழுது… எது… எதிர் கொண்டு
1.நம்மைக் கடுமையான எண்ணங்கள் கொண்டு தாக்குகின்றதோ அப்பொழுது
2.நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் வலுக் கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன் என்ற வலுவைக் கூட்ட வேண்டும்.

காரணம் கோபம் வந்து விட்டால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேக உணர்வு நம்மை இயக்குகிறது. “அதே உணர்ச்சியைத் தூண்டி” அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உணர்வைக் கூட்டுங்கள்.

ஏனென்றால் காரத்தின் உணர்வு நமக்குள் கோபத்தை உண்டாக்கப்படும் பொழுது
1.ஈஸ்வரா…! என்று இந்த வேகத்தைக் கூட்டுங்கள்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
3.இந்த உணர்ச்சி அந்த உயர்ந்த சக்தியை எடுக்க உதவும்.

மற்றவர் திட்டிய உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டிய உடனே துருவ நட்சத்திரத்தின் பால் நம் எண்ணங்களைச் செலுத்தப்படும் பொழுது அதை வேகமாக இழுத்துக் கோபத்தை “டபக்…” என்று அடக்கி உங்களுக்குள் ஞானத்தைச் செயலாக்கும் நிலைகள் வரும்.

எங்கிருந்து அந்தக் கோபத்தை யார் தோற்றுவிக்கின்றார்களோ உங்கள் சொல்லாலே சொல்லும் போது அங்கேயும் அடங்கும். இதை நீங்கள் அனுபவத்திலே தெளிவாகப் பார்க்கலாம்.

ஆகவே மனிதனாக உருப்பெற்ற இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாத நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காக்க உங்கள் எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் வலுக் கூட்டுங்கள்.
2.அதற்கு எம்முடைய இந்த உபதேசத்தின் வாக்கினை நீங்கள் பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சகல தேவர்களுடனும் ஐக்கியப்படுங்களப்பா…!

சகல தேவர்களுடனும் ஐக்கியப்படுங்களப்பா…!

 

சமமான நிலை நிலைக்க வாழும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள். சமமான நிலையின் வாழ்க்கை ஏன் நமக்கு ஆண்டவன் அருளவில்லை…? என்று எண்ணி வாழ்ந்திடாமல்
1.நாம் இப்புவியில் இப்புண்ணிய பூமியில் அச்சக்தியின் அருள் பெற்று
2.நமக்குத் தந்த இச்சந்தர்ப்பங்கள் எல்லாம் நம் நிலையை நாம் சமமாக்கி வாழ்ந்திடலாம்
3.சகல தேவரையும் கண்டிடலாம் என்ற பேராவலுடன் நாம் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு பிறவியிலும் அடுத்த பிறவியிலாவது நம் வாழ்க்கையைச் சமமாக்கி நல் நிலை பெறலாம் என்று இருந்தாலும்… பிறவி எடுத்து நிறைவு பெற்ற சமமான வாழ்க்கையை எடுத்திட முடியாமல் தான் “இன்று இவ்வுலகில் உள்ள பாமரர்களின் வாழ்க்கை உள்ளது…”

பிறவி எடுத்த நாளிலேயே ஏழு பிறவிக்கு நம் ஆத்மாவை அலைய விட்டிடாமல்
1.“ஒரே பிறவியிலேயே தன் நிலை உணர்ந்து… சமமான நிலை எய்தி”
2.சகல தேவனாக சூட்சும உலகத்திற்குச் சென்று கற்றுணர்ந்த ஞானிகளும்
3.தன் நிலையைத் தெய்வமாக்கி வாழ்ந்தவர்களும் இன்றும் தெய்வமாக உள்ளார்கள்.

நாம் எடுத்துள்ளோம் இப்படிப் பல பிறவிகளை. இந்தப் பிறவிலும் நிறைவு இல்லாமலே வாழ்கின்றோம்.

சமமான நிலை நிலைக்க அவ்ஆண்டவனின் அருள் கிட்ட நம்முள் இருக்கும் ஆண்டவனைப் புரிந்து கொண்டால் தான் “நான்” என்ற நிலையை “நம்மை ஈசன் இயக்குகின்றான்…!” என்ற உண்மையை உணர்ந்து
1.இவ்வுலக வாழ்க்கையிலே சலிப்பும் சங்கடமும் மேற்கொள்ளாமல்
2.நம்மை நாம் சமமாக நிலைப்படுத்தி வாழ்ந்திடும் வாழ்க்கை தான்
3.அச்சகல தேவர்களுடன் நாமும் ஒருவராக வாழப் போகிறோம் எனும் நிலையை எய்திட முடியும்.

சகல தேவர்கள் யார்…? என்ற கேள்விக்குறி எழுந்திட முடியும்…!

ஈசன் ஒருவன் தான் சகலத்திலும் கலந்துள்ளவன். அவ்ஈசன் தான் என்னும் பொழுது சகல தேவர்கள் என்று பிரித்துக் கூறும் நிலையில் உள்ளவர்கள் யார்…? என்று நம் மனதிற்கு விடை காண எண்ணிடலாம்.

சகல ரூபங்கள் கொண்டு ஒவ்வொரு ரூபத்தின் வடிவினிலும் எண்ணி ஏங்குபவர்களுக்கு ஆண்டவனாக வந்து அருள் புரியும் அந்த ஞான நிலை பெற்ற “சித்தர்களும் ரிஷிகளும் தானப்பா அச்சகல தேவர்கள்…”

அன்று ஆண்ட அரசர்களின் பலர் அன்றே “நான்” என்ற மமதையை… அரசை ஆண்டு கொண்டு இருந்தாலும் நான் என்றால் யார்…? என்பதைப் புரிந்து கொண்டு அன்றே அவ்வரசர்கள் தன் நிலையைச் சமமான நிலை நிலைக்கக் கடும் தவம் இருந்து சகல வித்தைகளையும் பெற்று… அச்சூட்சம நிலை கொண்டு வாழும் நிலையை அறிந்து வாழ்ந்தார்கள்.

நாம் இன்று நம் குழந்தைகளுக்கும் நாமே கேட்பதற்கும் பல நூல்களின் வாயிலாக அன்று ஆண்ட விக்கிரமாதித்த மகாராஜாவின் கதைகளைப் பல கோணங்களில் பல ரூபத்தில் அறிவுக்கு உகந்த வழியில் கேட்டும் படித்தும் வருகின்றோம்.

அன்று ஆண்ட அந்த விக்கிரமாதித்தன் எந்த அரச சபையில் ஆண்டானோ அதே நிலையில் தான் இன்றும் அவ்வுடலுடனே பல மாயாஜாலங்களை இன்று வாழும் மனிதர்களின் மமதையைப் போக்க பல ரூபங்கள் எடுத்து உணர்த்திக் கொண்டும்… பல நன்மைகளைச் செய்து கொண்டும்… இன்றும் அவ்வுடலுடனே சித்தி பெற்ற நிலையில் சூட்சம உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளான்.

அன்று அரசாளும் நிலையிலேயே தன் நிலையைச் சமமான நிலை நிறுத்திச் சகல நிலையையும் தானே உணர்ந்து ஏற்கும் சக்தி பெற்ற நிலையைத் தான் ஏற்றுக் கொண்டான் கடும் தவமிருந்து.

அவன் தவத்தைக் கலைக்கத்தான் அவ் வேதாளம் என்னும் பேய் இவனைத் தூங்கவிடாமல் இவனுக்குப் பல கதைகள் சொன்னதாக ஆயிரத்து ஒரு கதைகள் ஆயிரத்து ஒரு இரவு சொன்னதாகச் சொல்வதெல்லாம் என்னப்பா…?

வேதாளமா வந்து கதை சொன்னது…? வேதாளம் என்னும் உருவத்தில் வந்து கதை புகட்டியவர் வேதாள முனிவரப்பா. வேதத்தையே ஆளும் அம்முனிவர் விக்கிரமாதித்த ராஜாவின் நிலை அறிந்து அவரின் நிலை எத்தன்மையில் அச்சக்தியின் அருளை ஈர்க்கிறது என்று சகல நிலையை அறிந்து தான் விக்கிரமாதித்த ராஜாவுக்கு வேதாள முனிவர் பல கதைகளைச் சொல்லி அவர் மனதில் இருந்து விடை காண ஒவ்வொரு இரவும் அவரைத் தூங்க விடாமல் அக்கதை என்ற ரூபத்தில் பல உண்மை உள்ள கதைகளை எல்லாமே உணர்த்தி அவரின் நிலையை வேதாள மாமுனிவரின் ஆசியால் சகல நிலையையும் அறிந்து சமமான நிலை நிலைத்திடும் பக்குவத்தைப் பெற்றாரப்பா அந்த விக்கிரமாதித்த மகாராஜா.

அன்று அரசாண்ட அந்த ராஜாவிற்கு இந்த நிலைகளை எல்லாம் பெற்றுத்தான் தன் நிலையைச் சமமாக்கி வாழ்ந்திடும் நிலையைப் பெற்று வாழ்ந்திட முடிந்ததப்பா.

இவ்வுலகில் நாம் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை.
1.நம்மைச் சுற்றிப் பல கோடி ஆன்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் இவ்வுலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு
2.தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்… தான் தன் ஆன்மா வந்து பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்…
3.எவ்உடலில் ஏறினால் அவ் உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற தன் எண்ணத்தை
4.நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொண்டிட முடியும் என்ற நிலை கொண்டும்
5.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று ஆத்மாவுடன் வாழும் மனிதர்கள் நிலையுடனே
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டே உள்ளன.

நாம் நினைக்கின்றோம் நம் எண்ணம் நம் உடல் நம் ஆத்மா என்று. நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா…!
1.நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகிறதோ அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள்
2.நம் உடலில் எந்தத் திசையிலும் ஏறிக்கொண்டு நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.

நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை. நம் நிலையை மாற்றிக் கொண்டால்… நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் “பல அணுக்கள் நம்மைச் சுற்றிக்கொண்டு தான் உள்ளன…” என்று உணர்ந்து
1.நம்முள் அவ் ஆண்டவன் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து
2.பல ஆவி உலக அணுக்களுக்கு நாம் அடிமையாகாமல் இவ்வுலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நழுவ விட்டு
3.இக்கடைசி நிலை கொண்ட உடலுக்கு நாம் நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
4.”அச்சகல தேவர்களுடன் ஐக்கியப்படுத்துவது ஒன்றுதான்… இப்பாட நிலையில் உணர்த்திடும் உத்தம நிலையப்பா…”

August 27, 2024

பரிணாம வளர்ச்சியில் உடல் பெறும் உணர்வுகள் “உயிரால் எப்படி மாற்றப்படுகின்றது…?”

பரிணாம வளர்ச்சியில் உடல் பெறும் உணர்வுகள் “உயிரால் எப்படி மாற்றப்படுகின்றது…?”

 

பரிணாம வளர்ச்சியில் தாவர இனங்கள் எப்படி உருமாறி குணங்கள் மாறியதோ இதைப்போல தான் ஒரு உயிரணு தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு மற்ற உடலிலே விளைந்த அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் நிலைகள் வந்தது.

அப்படி வந்தாலும்…
1.இந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து உயிர் அதனின் உணர்வாக விளையச் செய்து
2.முதலிலே பெற்ற உணர்வுக்கும் இரண்டாவது மற்றொன்று இதற்குள் சேர்த்தவுடனே நோயாக வந்து
3.சுழிக் காற்று அடிப்பது போல இதனுடைய மணங்கள் பெருகச் செய்து
4.கவர்ந்த உணர்வுகள் ஒன்றாகி… உயிருடன் ஒன்றும் பொழுது
5.முதலிலே உருப் பெற்ற உடலைப் பிரித்துவிட்டு
6.இணைந்து கொண்ட உணர்வுகள் தனியாக விளைந்து அதனின் நிலைகளில் வந்த உணர்வு கொண்டு தான்
7.இந்த உயிர் மற்ற மற்ற உடல்களை உருவாக்கியது என்பதனை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அகஸ்தியன் இதைத் தெளிவாக எடுத்துரைத்தான். அதாவது இந்தப் பிள்ளை யார்…? என்று அவன் கேள்விக்குறி போட்டு நம்மைத் தெளிவாகச் சிந்திக்கும்படி செய்துள்ளான்.

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நாம் எவ்வாறு மனித உடல் பெற்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் வலிமை பெற்றது தான் மிருகங்கள். மிருகங்களாக இருக்கும் போது தன்னைக் காத்திடும் உணர்வுகள் பெற்றுப் பெற்று… அந்த உணர்வால் ஈர்க்கப்பட்டு நமது உயிர் மனிதனாக உருவாக்கியுள்ளது.

தன்னைக் காத்திடும் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
1.தன்னைக் காத்திடும் அங்கங்களும் தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ணங்களும் அது விளையச் செய்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உயிர் ஒளியாக எப்படி ஆனதோ
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது தான் இந்த மனித உடல்.

நமது உயிரே அதை உருவாக்குகின்றது.

1.ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட எண்ணங்களை இந்த உயிரே அது இணைக்கின்றது
2.எடுத்துக் கொண்ட எண்ணத்தை நமது கண்களே வழிகாட்டி
3.அதனின்றி தப்பித்துக் கொள்ளும் நோக்குடன் அதைக் கவர்ந்து அதனின் வலுவை இதற்கு உணர்த்தி
4.அதனின் நிலைகளிலேயே உணர்வுகள் மாறி உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து
5.உடலின் தன்மை மாற்றமானது என்ற நிலையை தெளிவாக எடுத்துரைத்தான் அந்த அகஸ்தியன்.

இவ்வளவு பெரிய தத்துவத்தை மகரிஷிகள் சாதாரண நிலைகளில் விநாயகர் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

நாம் எதை எதை எல்லாம் சேர்த்துக் கொண்டோமோ அந்த வினைக்கு நாயகனாக… ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வு “எது அதிகமோ” அதற்கு நாயகனாக அந்த உணர்வுகள் நம்மை இயக்கி… அந்த உடலை உருவாக்கி… அந்த எண்ணத்தால் தன்னை எவ்வாறு காத்துக் கொள்கின்றது…? என்பதைத்தான் அன்று அகஸ்தியன் “விநாயகர் தத்துவத்தில்” எடுத்துக் காட்டினார்.

அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்

அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்

 

சக்தியின் அருளில் சக்தி பெற்ற சகல ஜீவராசிகளும் ஜீவன் பெறும் நிலையில் ஒரே நிலையில் தான் ஜீவன் மறுபிறப்பு எடுத்து அப்பிறப்பில் நிறைவு பெற்றிட வேண்டும் என்ற நிலையில் தான் பிறப்பெடுகின்றன… நல்ல ஜீவன்கள் எல்லாம்.
1.நல்ல ஜீவன்கள் எல்லாம் தாம் பிறவி எடுத்ததின் குறிக்கோள்…
2.தான் பிறப்பு எடுத்து அடுத்த பிறப்பு இல்லாத நிலையில் எடுக்கும் பிறப்பில் வாழ்ந்திட வேண்டுமென்ற ஆர்வம் கொண்டு பிறக்கின்றன.

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பு எனும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது.

எல்லா ஆத்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இவ்உடலுடனே வாழ்கின்றன. அவ் அன்பிற்காகத் தான் அவ்அன்பெனும் நிலை கிடைக்காத நிலையில்
1.எண்ணும் மனம் என்றும் நிறைவைப் பெற்றிடாமல்… பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
2.அம்மனமென்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்கள் ஆக்கி வாழ்ந்திடுகின்றார்கள் மனிதர்கள்.

பரலோகம் எமலோகம் நரகலோகம் பூலோகம் இப்படி பல லோகங்களைச் சொல்லும் லோகங்கள் எல்லாம் எந்த லோகங்களப்பா…?

மனம் என்னும் அன்பு லோகத்தை அவ் அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அவ்ஆத்ம லோகத்திற்கு நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத் தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இவ்வுலகத்தை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. எந்த நிலை கொண்டும் இன்று இக்கலியின் நிலை கொண்டு
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்.

அன்பினால் நாம் பல நிலைகளை நம் உடலுக்கும் நம் மனதிற்கும் கொடுக்கப்படும் போது… “நம் ஆத்மா பூத்தொளிர் பெற்று வாழ்கிறது” என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு நம் முன்னோர்கள் உணர்த்தியது என்ன…?

1.நம் மனம் என்ற பல சஞ்சலக் கூடு நிறைந்த இம்மனத்தை
2.அன்பு என்னும் நிலையில்தான் அவ்ஆத்மாவை அமைதிப்படுத்திட முடியும் என்பதற்காகத் தான் ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தி
3.அவ்ஆண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து
4.நம் மனம் என்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட
5.ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழிகாட்டி வந்தார்கள்.

ஆண்டவன் என்னும் ரூபத்தில் நம் அன்பை எதில் மட்டும் செலுத்தி வணங்கிடலாம்…?

அன்பு கொண்டு நாம் வணங்குவது எல்லாமே ஆண்டவன் தான். எல்லா உயிரினங்களிலுமே அவ ஆண்டவன் உள்ளான்.

உன் அன்பை உயிரினங்கள் மட்டுமல்ல…
1.இவ்வானமும் பூமியும் மரம் செடி கொடிகள் மழை காற்று சூரியன் சந்திரன், நட்சத்திர மண்டலங்கள் இப்படி எந்நிலைகொண்டும்
2.உன் மனம் எனும் அன்பைச் செலுத்தி எண்ணி வணங்கிட்டாலே
3.எந்த ரூபத்திலும் உன் உயிராத்மாவிற்கு நீ சேர்க்கும் உன்னதப் பொக்கிஷம் கிட்டுகின்றது.

அவ்அன்பினால் மட்டும் தான் இவ் உயிராத்மாவிற்குக் குளிர்ந்த நிலையை நாம் அளிக்க முடியும்.

இவ் உடல் முழுவதுமே ஒருநிலை கொண்ட வெப்பத்துடன் தான் உள்ளது. ஆனால் இவ் உடலில் உள்ள நம் உயிரணு ஒன்று மட்டும் தான் குளிர்ந்த நிலையில் உள்ளது.

மனம் என்னும் நிலையை நாம் அமைதிப்படுத்தி அன்புடன் வாழும் பொழுது அவ் உயிராத்மா ஒரே நிலை கொண்டு அமைதியுடன் அன்பு கொண்ட நிலையில் ஆனந்த நிலையில் உள்ளது.

ஆனால்
1.இம்மனம் என்னும் நிலையை நாம் பல நிலை கொண்டு அலையவிடும் பொழுது
2.இவ் உடல் நிலையில் அதி உஷ்ண நிலை ஏற்பட்டு
3.உயிராத்மாவிற்குப் தீங்குகளைத் தான் நம்மால் சேர்த்திட முடிகின்றது.

நம்மில் பல பெரியோர் இவ்வன்பையே பல வழிகளில் நமக்கு உணர்த்திட அன்றிலிருந்து இன்று வரை போதித்துச் சென்றார்கள்.
1.அன்பிலார்க்கு இவ்வுலகமே இல்லை என்ற உண்மையை உணர்த்திச் சென்றார்கள்
2.அன்பே தான் கடவுள் என்றார்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் மனிதர்களின் நிலையில் ஒரே குறிக்கோள் “தான் செல்வந்தனாகச் செழித்து வாழ்ந்திட வேண்டும்” என்ற குறிக்கோள்தான்.

அந்த நிலைக்காகத் தன்னைத்தானே தன் இனத்தை துவேஷிக்கும் நிலையில் மனிதன் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். அன்பிற்கு மேல் துவேஷத்தினால் தான் இன்று உலகமே உள்ளது. இந்நிலையில் இவ்வுலகில் கலந்துள்ள இக்காற்று மண்டலமே விஷமுடன் உள்ளது.

இனி வாழ்ந்திடும் வாழ்நாட்களை வீண் விரயம் செய்திடாமல்…
1.அன்பு கொண்ட வாழ் நாட்களாக வாழ்ந்து
2.அன்பு என்னும் பொக்கிஷத்தை ஆண்டு வாழ்ந்திடுங்கள் அன்புடனே.

August 26, 2024

“எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை…!” என்று இரண்யன் சொல்வதன் உட்பொருள் என்ன…?

“எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை…!” என்று இரண்யன் சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

இரண்யன் சாகா வரம் பெற்றவன். ஈரேழு 14 லோகத்திலும் எதிலும் எனக்கு இறப்பு இல்லை என்று நாராயணனிடம் வரம் வாங்கிக் கொண்டான். நாராயணன் என்பது சூரியன்.

1.வெப்பமும் காந்தமும் கலந்து விஷத்தின் தன்மை அதனுடன் கவர்ந்து வரப்படும் பொழுது ஒரு அணுவை இயக்கும் சக்தி கொண்டு செயல்படுகின்றது.
2.விஷத்தின் துடிப்பு இல்லை என்றால் “எதனையுமே இயக்க முடியாது”
3.விஷத்தின் துடிப்பு அதிகமாக இருப்பதினால் தான் சூரியனின் சுழற்சியின் வேகமும் அதிகமாகின்றது.

சூரியனின் சுழற்சி வேகம் அதிகமாகி அதிலே உருவான நஞ்சினைப் பிரித்துத் தள்ளினாலும் வெப்பமும் காந்தமும் என்று அணுக்களை உருவாக்கி காந்த புயலாக வெளிக் கக்கினாலும்
1.காந்தப் புயலாக வருவது அந்த விஷத்தினைக் கவர்ந்து வரப்படும் பொழுது அது இறப்பதில்லை.
2.ஆனால் அது இறந்து விட்டால் எதுவுமே இயக்கமில்லை
3.ஆகவே “நான் இல்லாது எதுவுமே இயங்காது” என்று பிரகலாதன் கதையிலே அவ்வாறு காட்டுகின்றார்கள்.

உலக சிருஷ்டிக்கு நான் தான் மூல காரணம் என்று இரண்யன் சொல்கின்றான். சூரியனோ இந்த உலக அனைத்தையும் ரட்சிக்கிறேன் என்று இயக்குகிறது.
1.இரு பிரிவுகளையும் அதாவது விஷத்திற்கும்… ஒன்று சேர்த்து இயக்கக்கூடிய நிலைகளுக்கும்… நாம் கண்டுணர
.இத்தகைய நிலைகளைத் தெளிவாகக் காவியங்களாகப் படைத்துக் கொடுத்துள்ளார்கள்.

இரண்யன் தன் மகனான பிரகலாதனிடம் என் பெயரைத் தான் நீ சொல்ல வேண்டும் என்று கேட்கின்றான். பிரகலாதன் என்றால் இந்த இரு உணர்வும் சேர்த்து உருவான நிலைகள் தான்.

ஒரு ஜீவ அணு உண்டாக வேண்டும் என்றால் இந்த விஷத்தின் துடிப்பு கொண்டு தான் இயங்குகிறது என்றும் அதே சமயத்தில் சூரியனுடைய நிலைகள் வெப்பமும் காந்தமும் மற்றொன்றைக் கவர்ந்து உலகை இரட்சிக்கும் நிலையாக மற்றதை உருவாக்கும் நிலை என்று இதனின் செயல்களை நாம் கண்டுணரக் காவியங்களாகத் தீட்டினார்கள் ஞானிகள்.

சாதாரண பாமர மகனும் அறிந்திடும் நிலையாக… இந்த உலக இயற்கையின் சிருஷ்டியும் அணுவின் இயக்கமும் என்ற தலைப்பில் காவியமாகப் படைத்துச் சூரியனை நாராயணனாக மையமாக வைத்து… அதனின்று வெளிப்படும் உணர்வின் அலைகளைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் மகரிஷிகள்.

இதைப் போன்று அது அது நஞ்சைக் கடந்து வந்தாலும் உலகிலே எனக்கு இறப்பு இல்லை என்று வரம் வாங்கிக் கொண்டான் இரண்யன்.

பாலுக்குள் விஷம் பட்டால் அந்தச் சத்தை அது தனக்குள் அடிமை ஆக்கிக் கொள்கிறது. ஒரு வெப்ப காந்தம் ரோஜாப் பூவின் மணத்தைக் கவர்ந்து கொண்டால் விஷத்தின் துடிப்பால் அந்த மணத்தை வீரிய உணர்வாக (மணம்) உண்டாக்கும்.

அதே சமயத்தில் ஒரு காரமான உணர்வை வெப்ப காந்தம் எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அதனுடைய வேகத்துடிப்பாக இயக்கிக் காட்டும். ஆகவே
1.இயக்கத்திற்கு மூலமாக இருப்பது
2.இந்த நஞ்சின் தன்மை தான்…!

ஆதியிலே அணுவின் தன்மை உருவாவதற்கு… ஆவியாகப் படர்ந்துள்ள நிலையில் விஷத்தின் தாக்குதலால் அது தாங்காது… அது பிரிந்து அணுக்களாக நகர்ந்து சென்று… “வெப்பமும் காந்தமும்” என்ற நிலைகள் அடைந்தது.

விஷத்தின் இயக்கம் இல்லை என்றால்
1.பேரண்டத்தில் படர்ந்து கிடந்த நிலைகள் இயக்கமே இல்லாத சூனியமாகத்தான் இருக்கும்
2.விஷம் இதில் தாக்கப்படும் பொழுது தான் “சூனியத்தின் நிலை மாறி… இயக்க நிலையாக மாறுகின்றது…”

ஆகவே தான் இரண்யன் எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை என்ற நிலையில் “அவன் வாதிடுகின்றான்” என்று காட்டுகின்றார்கள்.

August 25, 2024

எமது உபதேசங்களைப் பதிவாக்கி உங்கள் உயிரான ஈசனிடம் அதை அனுப்புங்கள்

எமது உபதேசங்களைப் பதிவாக்கி உங்கள் உயிரான ஈசனிடம் அதை அனுப்புங்கள்

 

இதற்கு முன் ஐதீகம் ஐதீகம் என்ற நிலையில் நம்மை அறியாமலே செயல்பட்ட சாங்கிய உணர்வுகளிலிருந்து… அதனின் விளைவுகளிலிருந்து விடுபட்டு
1.அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நேரடியாகப் பற்றி அதனின் உணர்வின் துணை கொண்டு
2.எந்த நிமிடமும் ஒளியின் சரீரமாகி அழியா சரீரமாகி வேக நிலையாக நிச்சயம் நாம் விண்ணுலகம் செல்ல முடியும்.

அந்த நிலைகள் பெறுவதற்குத் தான் இதை உபதேசிப்பது.

எமது உபதேசங்கள் அனைத்தும் புத்தகங்களாகவும் ஒலி நாடாக்களாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் காலத்தைப் போக்க ஒவ்வொரு நாளும் அதைப் படித்து கேட்டு சிறுகச் சிறுக உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

யாம் உபதேசித்த உணர்வுகளையும் அருள் மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளையும் நிச்சயம் நீங்கள் பெற முடியும். உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் படைக்கின்றது… உடலாக ஆக்குகின்றது… உணர்வின் இயக்கமாக உங்களைச் செயல்பட வைக்கின்றது.

ஆகவே… உயிரே கடவுள் என்று மதித்து எண்ணுங்கள் அவன் படைத்த ஆலயமான உங்கள் உடலை வணங்குங்கள் அதே சமயத்தில்
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் கோடிக்கணக்கான குணங்களை இந்த உயிரே தெய்வங்களாக அமைத்தது.
2.அந்த நல்ல குணத்தின் நன்மை கொண்டே இந்த மனித உருவை உருவாக்கியது
3.அவன் உருவாக்கிய அந்த நல்ல குணத்தைக் காக்க “அவனுடன் ஒன்றுவோம்...”

மெய் ஒளி கண்டுணர்ந்த மெய் ஞானியின் அருள் சக்திகளை நாம் பெறுவோம். அவன் வழியில் என்றென்றும் அழியா நிலைகளாக மனிதன் முழுமை என்ற நிலை அடைவோம்.

உபதேச வாயிலாக உங்களுக்குள் அருள் உணர்வுகள் பதிவாகின்றது பதிவானதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுகின்றீர்கள்.
1.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த அருள் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்…
3.துரித கதியில் நீங்கள் சக்திகளைப் பெற முடியும்.

குடும்பத்தில் சிக்கல்கள் இருந்தால்… மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் தொழில் வளம் பெருக வேண்டும்… அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்தச் சக்தி உங்களுக்குள் செயலாக்கும்…
1.உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த உங்கள் எண்ணமே உதவும்… அந்த வலிமை பெறுவீர்கள்.
2.சிக்கலைத் தீர்க்கும் ஞானமும் மன உறுதியும் கிடைக்கும் சிக்கலைத் தீர்க்கும் மனமும் வரும்.

அதே சமயத்தில் உடலில் வந்த நோய்களை நீக்க அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம். நோய் நீக்கும் சக்திகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் நீங்க வேண்டும் என்று அது என்னென்ன நோயோ அதை நீங்க வேண்டுமென்று அடிக்கடி எண்ணும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியைப் பற்றுடன் பற்றுகின்றீர்கள்… அது அதிகமாக விளைகின்றது.

பாலிலே ஒரு துளி விஷம் பட்டால் நஞ்சாகி விடுகின்றது அதில் ஆயிரம் கூட பாலை விட்டால்… நஞ்சின் தன்மை குறைந்து பாலுக்கே அது ஊட்டசக்தி கொடுக்கின்றது.

இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகள் என்பவர்கள் பல ஆயிரமாயிரம் குடம் பாலைச் சம்பாதித்தவர்கள்… நஞ்சினை நீக்கும் சக்தி பெற்றவர்கள்.
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் அதை ஆத்ம சுத்தி மூலம் எடுக்கப்படும் பொழுது
3.வாழ்க்கையில் வந்த நோய்களை நீக்க பல ஆயிரம் குடம் பாலின் சக்தியாக நமக்குள் சேர்க்கப்படுகின்றது.

ஆகவே நீங்கள் தியானத்தில் அந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று தியானியுங்கள்… அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று தியானியுங்கள்.

இது தான் வாழ்க்கையை தியானம் என்று சொல்வது. இதை நீங்கள் கடைப்பிடித்துப் பாருங்கள் அனைத்தும் நன்றாகும்.

இந்த உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்
1.அதை உங்கள் உயிரான ஈசனிடம் அனுப்புங்கள்
2.அவன் அந்த உணர்வுகளை வித்தாக விளையயச் செய்வான் அது உங்களுக்குள் விளைகின்றது.
3.விளைந்த நிலைகள் கொண்டு உங்களுக்கு ஆறுதலான மன பலமும் மனவளமும் பெறுவீர்கள்
4.மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் உங்களை அவனே அரவணைத்து அழைத்துச் செல்கின்றான்… தன்னுடன் அணைத்துக் கொள்கின்றான்.

இதைச் செயல்படுத்துங்கள்.

“பறக்கும் நிலை” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“பறக்கும் நிலை” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சப்தரிஷிகள் தான் பூமியின் வளர்ச்சியில் மனிதக் கரு தோன்றி மனித ஞானம் பெற வழி வகுத்தனரே…!
1.இக்கலி மாறி கல்கியில் மனிதக் கரு வளரவும் மனித ஞானம் வளரவும்
2.சப்தரிஷிகளே ஏன் மீண்டும் அவர்களின் செயலைச் செயலாக்கிடக் கூடாது..? என்ற வினா எழும்பலாம்.

செடி சிறிதாக உள்ள பொழுது அதற்குகந்த ஆகாரத்தைச் செலுத்தினால் போதும். வளர வளர வளர்ச்சிக்குகந்த ஆகாரம் தேவைப்படுகிறது. வளர்ந்து முதிர்ந்த மரமாக ஆன பிறகு தன் உணவைத் தானாகவே எடுத்துக் கொள்ளும் வளர்ச்சியில் மரமுள்ளது.

சிறிய பயிர்களுக்கு நீர் ஊற்றித் தான் வளர்க்க வேண்டும். முற்றிய மரத்திற்கு அதன் உணவை அதுவே எடுத்துக் கொள்ளும்

அதைப் போன்று சப்தரிஷிகள் அவர்களின் சக்தியைப் பூமியின் கரு வளர்த்துச் செயல்படுத்த ஆரம்ப வளர்ச்சிக்கு ஆரம்ப நிலைக்குகந்த உணவு படைத்தால் போதும்.

வளர்ச்சியின் பெருக்கம் கொண்ட பிறகு வளர்ச்சிக்குகந்த உணர்வலைகளை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று பலவாகப் பெருகியுள்ள மனித எண்ணங்களின் ஈர்ப்பு நிலைக்கும் கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் காலங்களின் (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) எண்ண ஈர்ப்பிற்கும் பல மாற்றங்கள் உண்டு.

1.பெருகியுள்ள இன வளர்ச்சியின் அழிவு நிலை நெருங்கிவிட்டது.
2.மனித ஆத்மாக்களுக்குத் தன் உணர்வைத் தான் அறியும் பக்குவ முறைகள் எல்லாம் மாறிவிட்டது
3.உலகப் பொது எண்ணச் சுழற்சி ஈர்ப்பே நாகரீகம் என்ற உணர்வின் பேராசைப் பிடிப்பில் செயல்பட்டு விட்டது
4.ஆகவே அவ்வாறு பெருகிய மனித இனக்கரு இக்கலி மாற்றத்தில் மாறப் போகின்றது.

இந்த மாற்றக் காலத்திற்குள் சப்தரிஷிகளினால் இவ்வளவு காலங்களும் அங்கங்கு செடியாக உள்ள பயிருக்குகந்த உணவளித்த நிலையில்… அந்தப் பயிரே மரமாகித் தன் உணவை எடுத்துக் கொள்ளக்கூடிய ஞான நெறி முறைக்கு ஈர்த்துச் செல்கின்றனரப்பா…!

பஞ்சாக உள்ள எண்ணங்களை பஞ்சைப் பக்குவப்படுத்தி பதம் பிரித்து அதனதன் குணத்திற்கொப்ப நூற்பு நிலை ஏற்படுத்தி இந்தப் பஞ்சுடன் கலக்கும் அமில வண்ணத்தை ஏற்றி ஆடை நெய்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று பஞ்சாக உள்ள பக்தி நெறி முறை உணர்த்தி அந்தந்தக் கால நிலைகளுக்கு ஒப்ப சப்தரிஷிகளின் உணர்வலையால் அவர்களின் உணர்வுக்குகந்த பக்குவ முறைகளை ஏற்றித் தன் ஈர்ப்பின் ஞானச் சுழற்சியுடன் சுழல விட்டுக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் நிலையை… சப்தரிஷி தான் ஆண்டவன் என்று உணர்த்துகின்றீரே…!
1அப்பொழுது இந்தப் பூமியின் சக்திகளை எல்லாம் தந்தது அவர்கள் தானா…? என்ற வினா எழும்பலாம்.
2.இவ்வினாவிற்கு விடை ஆம் என்பது ஒன்றே தான்.

சப்தரிஷியினால் ஏற்படுத்திக் கொண்ட மண்டலங்களின் நிலையினால் தான் ஒவ்வொரு மண்டலத்தின் தொடர்பைக் கொண்டு… அதனதன் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு… அது வெளிப்படுத்தும் உணர்வு குணத்தினால் தான் மணமும்… மணத்திற்குகந்த சுவையும் வண்ணங்களும் நம் பூமியில் தோன்றின.

பல சக்தி அலைகள் நிறையப் பெற்ற நம் பூமியில் மனித இன ஞானங்கள் வளர்ந்தோட வளர்த்தியதே “பல மண்டலங்களின் ஈர்ப்பு உணர்வினால் தான்…!”

1.ஒவ்வொரு ஞானியும் அவனவன் எடுத்த உணர்வின் குண அமிலத்தை வளர்த்த ஞானத்தால் மண்டல நிலை எய்தி
2.இம்மண்டல வளர்ச்சி ஞானத்தால் இன்றைய இந்நிலை உருப்பெற்றுள்ளது.

அத்தகைய ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பல ஆத்மாக்கள் நிலை என்ன…?

இக்கலி மாறி கல்கி தோன்றி இச்சுழற்சி வட்டத்திலிருந்தே மாறி இம்மனிதக் கரு ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் பிறிதோரு மண்டல வளர்ச்சிக் கருவுடன் பிறப்பில் மனிதக் கரு வளரும் நிலையில்
1.மனிதனின் உருவ அழகுப் பொலிவு பெற்று
2.இன்று பூமியின் ஈர்ப்பில் நடக்கும் மனிதன்
3.நாளை “பறக்கும் நிலை” கொண்ட வளர்ச்சி ஞானம் பெறுகின்றான்.

சப்தரிஷியின் உணர்வின் வட்டத்திலுள்ள மனிதக் கருக்கள் எல்லாம் இந்நிலை பெறுகின்றன. இன்று சித்து நிலையில் சுழன்று ஓடும் பல ஆத்மாக்களும் இவ்வுணர்வின் கூட்டத்துடன் செல்கின்றன.

சப்தரிஷியின் உணர்வின் சுழற்சி ஈர்ப்பில் உள்ளவர்களுக்கே இந்நிலை என்றால்…!
1.சப்தரிஷியின் உணர்வுடனே சப்தரிஷியின் செயலாகச் சுழலப்பெறும் ஆத்மாக்கள்
2.இன்றெப்படி சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றனரோ அந்நிலையின் ஒளி ஞானம் பெற்று
3.ஒவ்வொரு மண்டலத்துக்குமே தன் ஈர்ப்பின் உணர்வு சக்தியைப் பரப்பித் தன் உணர்வின் இன்பத்தை உணர முடியும்.

மனித வாழ்க்கையில் வாழும் இந்தக் குறுகிய காலத்தை “இவ்வாழ்க்கை என்ற… கூட்டுக் குடும்பப் பொருள் சேர்க்கையில் தான் அந்த இன்பம் உண்டு…!” என்பது மனிதனின் எண்ணம்.

1.இந்த மனித வாழ்க்கையில் காணும் இன்பம் சிற்றின்பம் தான்.
2.பேரானந்தப் பெரு நிலை என்னும் உணர்வு ஞான வளர்ச்சி இன்பம் தானப்பா அழியா இன்பம்.
3.ஆனாலும் எவ்வின்பம் பெறவும் இந்த மனித வாழ்க்கை நிலையின் சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலையில் தான் பெற முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் “சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும்”

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் “சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும்”

 

போகரின் காலத்திற்குப் பிறகு போகரால் வழிப்படுத்திச் சென்ற பண்டிகை தான் தீபாவளிப் பண்டிகை.
1.நம்முள் உள்ள அசுர குணங்களை அழித்து நற்குணங்களின் ஒளியைப் பெறத் தான்
2.தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் முறை உணர்த்தப்பட்டது.

ஆனால் இன்றைய எண்ண ஓட்டத்தில் அசுரனையே வணங்கும் முறைப்படுத்திச் செயல்படும் வழியில் எண்ண ஓட்டங்கள் வளர்ந்து விட்டன.

தீய குணங்களை அகற்ற வேண்டிய அந்த நந்நாளில் சமமான எண்ணத்தைச் சாந்தமுடன் புத்தாடை புனைந்து… மகிழ்ந்து… தீபமேற்றி… உற்றார் சுற்றமுடன் இனிமையுடன் கலந்துறவாட ஏற்படுத்திய தினத்தைச் “சந்தோஷமுடன் எந்த ஆத்மா எந்த வழியில் கொண்டாடுகிறது…?”

1.இன்றைய சமுதாய இனப் பிடிப்பாக “அந்த நாள்”
2.பல இன்னல்களுக்கு மனித ஆத்மாக்கள் செல்லக்கூடிய உணர்வு ஓட்டத்தில் சுழன்று கொண்டுள்ளது.
3.அன்று சித்தர்களினால் ஒவ்வொன்றையும் உணர்த்திச் சென்றதன் பொருள் வேறு
4.இன்றைய மனித ஆத்மாக்கள் செயலாக்கும் பொருள் வேறு…!

ஒவ்வொரு காலத்திலும் சப்தரிஷிகள் சில உடல்களை ஏற்று எதற்காக அவர்களின் உணர்வலைகளை வெளிப்படுத்திச் செல்கின்றனர்…?

1.படைப்பின் படைப்பையே
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக்க…
3.அவர்களின் செயல் முறை செயலாக்குகின்றதப்பா…!

ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிச் சுழலும் வளர்ச்சியில்
1.சுழற்சி நிலைக்கொப்ப வழி நிலை செல்லாமல்
2.சுழற்சியின் சக்தியைப் படைக்கப்பட்டவனிடம் சமர்ப்பிக்கும் செயலுக்குத் துணை செய்கின்றார்கள் சப்தரிஷிகள்.

நீரில் ஓட்டத்தை நாம் அதன் இச்சையில் (போக்கில்) விடாமல் அந்த நீரைத் தேக்கி வைத்து “அணையைக் கட்டி” அந்த நீரின் சக்தியைப் பல ரூபங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அதைப் போல்… பால்வெளி மண்டலத்தில் படர்ந்து சுழன்று நிறைந்துள்ள அமில குணங்களின் ஈர்ப்பை
1.உருவான உலகமாக்கி
2.உலகினிலே கருவைக் கொண்டு உருவாக்கி
3.உருவின் உருக்களாகப் பல உருக்களை வளரச் செய்து
4.தன் ஞானத்தின் சக்தி அலைக்குச் சக்தி எடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்

நாம் பலன் காணத்தான் பலவற்றையும் செய்கிறோம். ஒவ்வொரு மனிதனும் அவன் எண்ணத்திற்குகந்த நிறைவைக் காண நித்தமும் செயலாற்றுகின்றான்.

இருந்தாலும்… எண்ணியோ எண்ணாமலோ எல்லா ஆத்மாக்களும் தன் உணர்வில் வழி பெறுவது எதனை…?

வாழ்க்கையில் தன் உணர்வுக்குகந்த எண்ணச் செயல் நிறைவுறாதவன் விரக்தி என்ற வீண் சலிப்புடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை என்ற நிலைக்கும் தன் உணர்வைச் செயலாக்குகின்றான்.

வெறுப்பு விரக்தி என்ற நிலை மனிதனுக்கு எப்படி ஏற்படுகின்றது..?

தன் உணர்வின் எண்ணத்திற்கொப்ப எண்ணச் செயல் நிறைவுறாத தருணத்தில் சலிப்பும் சோம்பலும் விரக்தியும் உட்பட்டுத் தன் ஆத்மாவையே மாய்த்துக் கொள்ளும் வழிக்குச் செல்கின்றான்.

உணர்வாலும் உருவாலும் தன் நிலையை எண்ணுபவன்…
1.உருவ எண்ணத்தின் சுழற்சியிலேயே சிக்குண்ட வாழ்க்கை உணர்வை மாற்றி
2.எண்ணத்தால் உணரும் ஞான வழிபாட்டில் தன் உணர்வைச் செலுத்தினால்
3.விரக்தியும் சலிப்பும் அற்று விவேகம் பெறலாம்.

இவ்விவேக உணர்வலையின் ஞானத்தை உணர்ந்து வாழ்க்கையில் எண்ணும் நிறைவைப் பல ஆத்மாக்கள் பெறுகின்றனர்.

ஆனால் இன்றைய காலத்தில் மனிதனின் உணர்வலை அனைத்தையுமே அரசர்கள் ஆண்ட காலத்தில் தன் உயர்வை வெளிக்காட்ட
1.“கதைகளையும்… கற்பனைக் காவியங்களையும்...” உண்மை போல் வெளிப்படுத்தியதை…
2.அந்த மாய உணர்வுகளையே உண்மை என்ற வாழ்க்கையின் நெறியில் கலந்து விட்ட
3.அத்தகைய உணர்வலையின் சுழற்சியில் சிக்கி (SOCIAL MEDIA) உழன்று கொண்டுள்ளது.

இந்த நிலை மாறிச் சப்தரிஷிகளின் செயல் வட்டத்திற்குள் சென்றால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே அவர்களின் உணர்வின் உணவு கிடைக்கப் பெறும்.

அதன் வழியில் அவர்களுக்கும் அவர்களின் சக்தி அமிலத்தைக் கூட்டிடல் முடியும். அதன் மூலம்
1.மீண்டும் மனிதக் கரு தோன்றினால் தான்
2.மனிதக் கருவின் பிம்ப உடல் ஞானத்தை வைத்துத்தான் மீண்டும் மனித சமுதாயம் காண முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும். உணவு இல்லாவிட்டால் அவர்களின் உணர்விற்கு உருவில்லை.

சப்தரிஷிகளின் செயல் அந்தந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்படுகின்றதென்றால் இந்த அடிப்படையில் தான்…!

இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் இன்றுள்ள எண்ண உருவ சுவாச மக்கள் இதே உணர்வலையில் இந்தப் பிம்பங்களை மாற்றி மீண்டும் மனித அமில ஜீவன் தோன்றினால்… இன்றுள்ள ஞானத்தைக் காட்டினாலும்… உருவ பிம்ப அழகைக் காட்டிலும்.. முற்றும் மாறுபட்ட உருவ அமைப்பு ஞான உருவங்கள் தான் அமையப் பெறும்.

அதுவும் கலி மாறி கல்கி மனித ஜீவன் கொள்ளப் பல பல ஆண்டுகள் ஆகிவிடும்.
1.காற்று மண்டலத்தில் உருளும் அமில உயிர்களுக்கெல்லாம்
2.மீண்டும் ஜீவன் கொள்ளும் காலத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

அதனால் இன்றைய ஞான சக்திகளைச் செயலாக்கக்கூடிய பிம்ப ஜீவன்களான நாம் நம் சப்தரிஷிகளின் உணர்வலையின் சக்தியுடன் ஜெபம் கொண்டால்
1.அவர்களின் செயலின் சக்திக்கு
2.நம் சக்தியும் கூடிச் செயல் கொள்ள முடியும்.

August 24, 2024

ஈசனுக்குச் செய்யும் தொண்டு

ஈசனுக்குச் செய்யும் தொண்டு

 

இன்றைய உலக சூழ்நிலையில் மனிதனல்லாது வேறு ஒரு சரீரத்தை உருவாக்கும் செயல் நமக்கு வேண்டாம். ஆகையினால் யாம் உபதேசிப்பதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்து சொர்க்க பூமியான இந்த மனித உடல் கிடைத்த பின் அசுத்த பூமியாக இதை மாற்ற வேண்டாம்.

சொர்க்க பூமியான இந்த மனித சரீரத்தை நாம் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்… சொர்க்கலோகமாக நாம் மாற்றலாம். உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியாக மாற்றும் பொழுது இந்த உடலை விட்டுச் செல்லும் போது ஒளியின் தன்மை பெறலாம்.
1.தியானம் எடுத்த அனைவருக்கும் இருட்டிலே கண்களை விழித்துப் பார்த்தால்
2.நம் உடலில் இருந்து பளீர்…ர்… பளீர்…ர்… என்று வெளிச்சங்ள் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
3.நாம் எந்த அளவிற்குத் தியானம் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் சக்தி நமக்குள் வளர்கின்றது… ஒவ்வொருவரும் இதை உணர முடியும்

சுலபத்தில் கிடைக்கிறது என்று அலட்சியப்படுத்தி விட வேண்டாம்.

எத்தனையோ கடினத்திற்கு பின் தான் இது வருகின்றது. புதுத் துணிகளை நாம் எடுத்து அதைச் சட்டையாகத் தைக்க தெரியாதபடி “நானும் தைப்பேன்” என்று கத்திரித்து வீணாக்கி விடாதபடி நாம் செயல்பட வேண்டும். அதாவது நாம் பயன்படும் நிலைகளுக்கு நம் உணர்வின் ஆற்றலை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

1.நீங்கள் அனைவருமே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
2.அவர் அருள் துணை கொண்டு மெய்ஞானிகள் அருள் ஒளியைப் பெற்று
3.நம்மை அறியாது இருள் சூழச் செய்யும் இருளை நீக்கி இந்த ஒளியின் நிலைகள் வழியறிந்து செயல்படும் ஆற்றலை நாம் பெற்று
4.நம் பேச்சு மூச்சும் நம்மைப் பார்ப்போர் அனைவருக்கும் நன்மை பயக்கட்டும்.
5.அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது நமக்குள் நல்ல உணர்வாகச் சென்று ஒளியின் சுடராகச் செல்லட்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நேரமும் வீண் விரயமாக்காதபடி நம்மை அறியாது இருளச் செய்து கொண்டிருக்கும் சில துன்பங்களை ஊட்டும் உணர்வுகளை நமக்குள் புகாதபடி அந்த உணர்வுகளைத் தடைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு உட்புகந்தாலும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கடுமைப்படுத்தி அந்த அசுத்தங்களை நீக்கி உங்கள் உடலுக்குள் புனித சக்தியாக மாற்றுங்கள். ஏனென்றால்
1.நம்மை உருவாக்கிய ஈசனின் வீடு இந்த உடல் அவனுடைய ஆலயம் அது.
2.ஆகையினால் அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்
3.எந்த அளவிற்கு நாம் சுத்தப்படுத்துகின்றோமோ “அதற்குண்டான கூலி” கிடைக்கும்.

நமக்குள் வீற்றிருந்து நம்மை உருவாக்கி நல்ல நிலைகளை ஊட்டி நம்மை இயக்கச் செய்யும் அந்த ஈசனுக்குச் செய்யும் தொண்டாகக் கருதி நாம் செயல்பட வேண்டும்.

உங்களுக்குள் யாரும் துன்பத்தை ஊட்டும் எண்ணங்களை உருவாக்கினாலும்
1.அது எனக்கல்ல… அது என்னைச் சாராது.
2.அந்த ஈசனின் அருள் ஒளியை நான் பெறுவேன்
3.அவன் எனக்குள் இருக்க… நல்ல உணர்வை அவன் எனக்கு ஊட்டுவான்
4.”அவன் வழிகளிலே நான் செல்வேன்” என்று இந்த எண்ணங்களை நீங்கள் மாற்றிச் செயல்படுத்திப் பாருங்கள்.

உங்களுக்குள் தெளிவான நிலையாக வரும்.

“தானாக உணர்ந்து செயல்படும் நிலை” இன்றுள்ள மனிதர்களுக்குக் குறைவுபட்டு விட்டது

“தானாக உணர்ந்து செயல்படும் நிலை” இன்றுள்ள மனிதர்களுக்குக் குறைவுபட்டு விட்டது

 

அறியாதவர்க்கு அரிய எண்ணத்துடனே அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலே வாழ்கின்றார்கள். அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற அதிக ஆசையுடன் வாழ்கிறார்கள்.

கற்றவர் கல்லாதவர் அறிந்தவர் அறியாதவர் ஏழை செல்வந்தன் இப்படிப் பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இவ்வுலகமே சுழல்கின்றது.

கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும் கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு எண்ணமும் தன் மனதிலுள்ளேயே உலக மக்கள் ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த மாய ரூபத்தையே மனதினில் எல்லாம் கலக்கவிட்டு வாழ்கின்றார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தி உள்ளார். இன்றுள்ள நம் மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணத்துடன் தான் எண்ணி வாழ்கின்றார்கள்.

ஏட்டுப் படிப்பிற்கு பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தி உள்ளதால் அந்நிலைக்காக ஏங்குபவர் பலர் உள்ளனர். படிப்பும் பட்டமும் இன்று அளித்த மாய ரூபங்கள் தான் இவை.

1.தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
2.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா...?
3.அன்று கம்பர் எழுதிய கவிதை எல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்று படிக்கப்பட்டதப்பா…?

கம்பரும் திருவள்ளுவரும் வியாசரும் வால்மீகியும் சேக்ஸ்பியரும் இப்படி எண்ணிலடங்காப் பல ஞானிகளும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?

அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டு தான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளியிலும் கல்லூரியிலும் சொல்லி வருகிறார்கள்.

அப்படிப்பைக் குழந்தைகள் நிலைக்கு இன்றுள்ள உபாத்தியாயார்கள் மதிப்பெண்ணும் தருகின்றார்கள். இன்றுள்ள இக்கலியுகமே தானாக உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றி வருகிறது.

உலகில் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மமனிதனின் எண்ணத்தில் மட்டும்தான்… தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழுகின்றான் இன்றுள்ள மனிதன்.

1.மனிதர்களின் மனம் எல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
2.பிறர் சொல்லிய உண்மைகளை ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
3.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.
4.இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது.

ஏன் அச்சூரிய சக்தியின் நிலை ஒரே நிலையில் உள்ள பொழுது நம் உணர்வின் நிலையும் உயிரணுவின் நிலையும் மாறுபட்டுள்ளன என்று மனநிலையில் நீங்கள் எல்லோரும் எண்ணிடலாம்.

நாம் உண்ணும் உணவிலும் தாவரங்களிலும் அதனதன் தன்மை கொண்டு அவைகள் உற்பத்தியாக இன்றுள்ள பூமி நிலை இல்லையப்பா.

இன்று இப்பூமியில் வீசிடும் காற்றே பெரும் விஷத்துடன் வீசும் போது
1.அந்தத் தாவரங்கள் எந்த நிலை கொண்டு வளருமப்பா…?
2.தாவரங்கள் மட்டுமல்ல இன்று வளரும் குழந்தைகளின் நிலையும் எப்படியப்பா இருந்திடும்…?

விஷமான காற்றைச் சுவாசிக்கும் மனிதனின் மனநிலையும்… தாவர நிலைக்கும்… இன்றைய மனிதர்களின் ஆராய்ச்சியில் வந்த “பல வகை மருந்துகளின் நிலை கொண்டு தான்” மனிதனும் தாவரங்களும் வாழ்கின்றதப்பா.

பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் எந்த நிலை கொண்டு வீசுகின்றதோ அந்த நிலை கொண்டு தான் அச்சூரியனின் ஒளி காற்றில் பட்டவுடன் தாவரங்களின் தன்மையும் வளரும் நிலையில் உள்ளது.

இக்காற்றையே நம் செயற்கைக்காக நம்முடைய எண்ணத்தில் எண்ணும் சுகபோகங்களுக்காக நாம் உற்பத்தி செய்திடும் பல செயற்கையின் தன்மையினால் இப்பூமியிலிருந்து எடுத்த பல உன்னதத் திரவியங்களை (பெட்ரோல்) நம் செயற்கைக்காக உபயோகப்படுத்தி… அதை விஷமாக இக்காற்றிலே கலக்க விட்டு அவ்விஷத்தன்மையுள்ள காற்றையே இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் சுவாசிக்கும் நிலையினால் தான்… இன்றைய மனிதர்களின் நிலையும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் உள்ளதப்பா.

இப்பூமியில் விளைந்திடும் பலவித நறுமணங்கள் கொண்ட நல் மணத்தை நம் சுவாச நிலைக்கு நாம் ஏற்றுக் கொள்ளும் நிலையை நாம் மாற்றிக் கொண்டு வாழ்கின்றோம்.

பல வகைத் தாவரங்களிலிருந்து நம் உடலுக்கும் மனதிற்கும் எந்தெந்த நிலையில் அவை நன்மை அளிக்கின்றன…? அதனால் நம் உடலுக்கும் எண்ணத்திற்கும் எந்த நிலை பெறுகிறது…? என்று உணர்ந்து
1.இன்று பல தாவரங்களை மரம் செடி கொடிகளை நம் தேவைக்காக அழித்து வாழ்ந்திடும் நாம் ஒன்றை அழிக்கும் பொழுது
2.இரண்டை உற்பத்தி செய்யும் நிலைக்கு ஏனப்பா நாம் வரக்கூடாது…?

தாவரங்களினால் தான் இக்காற்றி கலந்துள்ள விஷத் தன்மையை ஈர்த்து இக்காற்றைச் சுத்தமாக்கும் நிலை உள்ளதப்பா. இத்தத் தாவரங்களின் உற்பத்தியை உணர்ந்து ஒவ்வொரு மனிதரும் இச்செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா.

இயற்கையின் உன்னத அழகைக் கண்டு சுவாசித்து மகிழ்ந்தாலே நம் உயிரணுவிற்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றதப்பா.

ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அச்சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும். தானும் ஒரு திருவள்ளுவராகவும் வான்மீகியாகவும் இயேசு பிரானாகவும் இப்படிப் பல நிலை கொண்ட ஞானிகளைப் போல் தானும் ஆகலாம் என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிலிருந்து ஒன்றைக் கூட்டி வாழ்ந்திடுங்கள்.

இருந்த உண்மையையே விவாதத்திற்கு ஏற்கும் தன்மையை மாற்றி
1.தான் கற்கும் கல்வி தன் உணர்வினால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஈர்த்து
2.இவ்வுலக நன்மைக்காக இவ்வுயிரணுக்களின் நன்மைக்காக இவ்விஷமான கலியின் கடைசி நிலையை மாற்றி
3.கல்கி எனும் புத்தொளிர் கொண்ட இயற்கைத் தேவனின் இயற்கைச் சக்தியைப் பெற்றிட
4.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம்மையே நாம் அச்சக்திக்காக அடிபணிந்து வாழ்ந்திடலாம்.

August 23, 2024

அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையுங்கள்

அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையுங்கள்

 

அருள் ஞானிகள் காட்டியதை… உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டச் செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றோம். அந்த உணர்வின் துணை கொண்டு உங்கள் எண்ணத்தால் பதிவு செய்த நிலைகளை
1.அந்த மகா ஞானியின் உணர்வலைகள்
2.நீங்கள் எண்ணிய உடனே அது கிடைக்கும்.

அந்த உணர்வின் சத்து கொண்டு உங்களை அறியாது வந்து தீமைகளை அகற்றுவதற்கும் கூர்மை அவதாரம் போன்று மனித வாழ்க்கையில் வரும் நிலையை அகற்றுவதற்கும் விண்ணை நோக்கி ஏங்குங்கள். அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றுங்கள்..

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் கண்டுணர்ந்த இரக்கத்தால் ஈகையால் பரிவால் பண்பால் நாம் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆழப் பதிந்து அதைப் பற்றிடாதபடி… பற்றற்தாக ஆக்கிட அந்த மெய் ஞானி உணர்வுகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.

தீமைகளைக் கண்டாலும் அந்த அருள் ஞானி அதைச் சுட்டுப் பொசுக்கியது போல நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடல் வேண்டும்.

மெய் உணர்வின் தன்மை வளர்ப்பதற்காக அவன் சுட்டிக்காட்டிய அந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் தான் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்வது.
1.இதை ஊழ் வினையாக்கி வினைக்கு நாயகனாக உங்கள் எண்ணத்தின் வலு கொண்டு எடுப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் ஞானிகள் வாழும் இடத்தை அடையலாம்.

அவனின் உணர்வை நீங்கள் பற்றி அவனுடன் இணைந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக நாமும் வாழ முடியும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.

1.இந்த மனித வாழ்க்கையில் எந்த ஈகை கொண்டு இருந்தாலும் அந்தப் பற்று உனக்குள் ஊழ்வினையாக விளைந்திடாது
2.அருள் ஞானிகள் உணர்வுகள் கூர்மையாக உனக்குள் விளைந்து
3.அவன் தீமையை அகற்றியது போல உன்னுடைய உணர்வின் எண்ணங்கள் ஒவ்வொரு நொடியும் உன்னைக் காத்திடும் நிலையாக
4.அந்த மகரிஷிகளை எண்ணும் பொழுது என்ன செய்ய வேண்டும்…?
5.அருள் உணர்வினை எவ்வாறு பற்ற வேண்டும் என்று குருநாதர் எனக்குக் காட்டினார்

ஆகவே குருநாதர் என்னை எதைப் பற்றும் படி செய்தாரோ அதை நீங்களும் பற்ற முடியும்.

உங்கள் வாழ்க்கையில் நன்மை செய்யும் நிலையாக பிறருடைய தீமைகளைக் கூர்மையாக எண்ணி அதன் உண்மைகளை அறிந்து தீமைகளை நீக்கினாலும்
1.உங்களுக்குள் அந்தத் தீமை விளையாதபடி காத்திட
2.அந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பற்றிடவும் அந்த பற்றுடனே வாழ்ந்திடஅ செய்திடவும்
3.எமது குருநாதர் காட்டிய நிலையினை நீங்களும் பெற வேண்டும் என்று இதைச் செய்கின்றேன்

மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும் அறியாது சேர்ந்த தீமைகள் நோய்கள் அனைத்தும் அகன்று மகரிஷியின் அருள் வட்டத்தில் என்றென்றும் நாங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற வேண்டும்.

இவ்வாறு அடிக்கடி கூர்மையாக எண்ணினால் அந்த உணர்வின் சத்து நமக்குள் வந்து வேதனைப்பட்ட உணர்வுகளைப் பற்றற்றதாக ஆக்கச் செய்யும். அருள் ஞானி உணர்வைப் பற்றிக் கொண்டால் நமது வாழ்க்கையும் அடுத்து பிறவா நிலை அடைகின்றது.

1.இங்கே பற்றிக் கொண்டால் புவிக்குள் தான் செல்கிறோம்…
2.அங்கே அருள் ஞானிகளைப் பற்றிக் கொண்டால் அங்கே செல்கிறோம்.

அது தான் பிள்ளையாருக்கு முன் கேள்விக்குறி போட்டுக் காட்டி இந்த வாழ்க்கையில் கண்டுணர்ந்த
1.நஞ்சின் நிலைகளில் சிக்குன்டு இதைப் பற்றி மீண்டும் உடலுக்குச் செல்கின்றாயா…?
2.அல்லது இதைப் பற்றற்றதாக ஆக்கி அருள் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி அங்கே செல்கின்றாயா…? என்று காட்டினார்கள்.

காரணம் நாம் எதை எண்ணுகின்றோமோ நமக்குள் ஆண்டு கொண்டிருப்பது உயிரே. எண்ணியதை ஓ… என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தினை உடலாக்குவது உயிரே.

எந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து விளைய வைத்தோமோ உடலை விட்டு அகன்ற பின்
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அவன் உருவாக்கிய பிள்ளையாக
2.ஒளியின் சுடராக நாம் மகரிஷியுடன் இணைந்து வாழ முடியும்… வேகாநிலை அடைய முடியும்

நம்மை நாமே சரியான பாதையில் பக்குவப்படுத்திக் கொள்ளும் ஞான வழி

நம்மை நாமே சரியான பாதையில் பக்குவப்படுத்திக் கொள்ளும் ஞான வழி

 

ஆசையிலிருந்து வருவது தான் பிறப்பும் வளர்ப்பும் வாழ்வும். அவ்ஆசையிலிருந்தே தான் வேதனையும் வருகின்றது. ஆசையின் உந்தலுக்கு நாம் அடிபணியலாகாது.

1.ஆசையில் எவன் ஒருவன் அவ்வாசைக்கே அடிமையாகிடாமல் நிறைவு பெற்று வாழ்கிறானோ
2.அந்த வாழ்க்கை தான் நிறைவு பெற்ற வாழ்க்கை… நிர்மலமான வாழ்க்கை…!

வாழ்க்கையின் முதல் பாகம் என்னும் அப்பிறப்பின் போதே ஆசையினால் தான் அந்த ஆவி அவ்வுயிரணு அத்தாயின் கருவிற்கே வருகின்றது.

அக்கருவின் நிலையில் வளரும் நிலை கொண்டே அக்கருவிற்கு எல்லாச் சுவாச நிலையும் அறிந்து ஆசை நிலையும் உள்ளது. ஆசை நிலையினால் தான் அக்கரு அத்தாயின் வயிற்றிலேயே... அத்தாயின் எண்ணத்தின் மூலமாகத் தன் சுவாச நிலைக்கு உகந்த... தன் ஆசையை அத்தாயின் மூலமாக எடுத்துக் கொள்கிறது.

கருவில் உள்ள நிலையிலேயே அதனால் தன் நிலைக்கு உகந்தபடி அதன் ஆசைக்கு ஏற்ற எல்லா நிலையையும் எடுத்துக் கொள்ள அத்தாயின் சுவாச நிலைக்கும் உந்தப்படுகின்றது.

ஒவ்வொரு பெண்ணிற்கும்
1.தாய்மை நிலை அடைவதற்கு முதலிலும்
2.தாய்மை நிலை அடைந்திருக்கும் பொழுதும்
3.தாயான பின்னும் அப் பெண்ணின் மனநிலை மாறுபட்டு வருகிறது.
4.அப் பெண்ணின் பிறவியில் வந்த எண்ண அலைகளும்
5.தாய்மைப் பேறில் வந்த எண்ண அலைகளும்
6.அத்தாயான பிறகு வரும் எண்ண அலைகளும் மாறுபடுகின்றன.

ஒவ்வொரு தாய்மைப் பேறிலும் சூலுண்ட நிலையில் அத்தாயின் வயிற்றில் உள்ள கருவிற்கு கருவின் எண்ணத்திற்கு தாய் உந்தப்படுவதால்... அது தாயின் சொல் சுவை இவை எல்லாம் மாறுபடுகின்றன.

அக்கருவின் ஆசை நிலையை அக்கரு ஏற்றுக் கொள்வதால் அத் தாயின் நிலைக்கும் சில ஆசை நிலைகள் உந்தப்படுகின்றன.

அக்குழந்தை பிறந்த பிறகு... எப்படி அக்கரு தாய் வயிற்றில் இருக்கும் பொழுது தன் ஆசையைத் தாயின் மூலமாகப் பெற்றுக் கொண்டதோ... அதைப்போல தாய் அப்பிள்ளை பிறந்த பிறகு அக்குழந்தைக்கு எந்த நிலை கொண்டு எந்த எண்ணமுடன் தாய்ப்பால் தந்து வளர்க்கின்றாளோ... அந்த நிலையெல்லாம் அக்குழந்தையின் எண்ணத்திற்கும் ஊட்டப்படுகிறது.

1.தாயின் எண்ண நிலை அக்குழந்தைக்குப் பால் தரும் பொழுது எந்தெந்த நிலையில் செல்கின்றதோ
2.அந்த ஆசை நிலைகளை எல்லாம் அக்குழந்தைக்கும் தானாகவே வளர்கிறது.

சூலுண்ட நிலையிலும் அத்தாயின் எண்ணங்களும் ஆசை நிலைகளும் வேதனை நிலைகளும் அக்கருவிலேயே கருவின் எண்ண நிலையுடன் அத்தாயின் எண்ண நிலைகளும் கலந்து விடுகின்றன.

தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பு இதுதான்…!

தாய் என்பவள் இந்த நிலை கொண்டு தான் பிள்ளைகளின் நிலைக்கு ஒத்துச் செல்வதெல்லாம். தன் சுவாச நிலைக்கு ஏற்ற உடலைத்தான் அவ் உயிரணுவே தான் உதிக்கும் இடமாக வந்து உதிக்கின்றது.
1.தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள ஒற்றுமை நிலை இது ஒன்று தானப்பா.
2.நம் உடலுக்கும் நம் ஆத்மாவிற்கும் உள்ள சொந்தம் போல் தான் இச்சொந்தமும்.

எண்ணம் என்பதின் வேகம் இவ்வுலகில் உள்ள எல்லா வேகங்களுக்கும் மேல் துரிதமான வேகம் என்று முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். நம் எண்ணத்தைப் பிறரின் எண்ணத்தில் மோத விடும் பொழுது பிறரின் நிலையும் மாறுபட்டுச் செயல்படும் தன்மை வலுக்கிறது.

இவ்வெண்ணத்தை வைத்துத்தான் உலக நிலையும்... உயிர் உதிக்கும் நிலையும்... உடலை விட்டு ஆத்மா பிரியும் நிலையும்... எல்லாமே வருகின்றன. இவ்வெண்ணத்தில் நாம் எந்த நிலையில் ஆசைப்படுகிறோமோ அந்த நிலை கொண்டு தான் வேதனையும் மகிழ்ச்சியும் வருகின்றன.

எண்ணத்தின் ஆசையை வளர விடுவதினால் பல வேதனையான நிலைகளை நம் வாழ்க்கை நிலையில் கண்டு வேதனைப்படுகிறோம்.

இவ்வெண்ணத்தினால் தான் எல்லா நிலைகளுமே வருகின்றன என்றேன். இவ்வண்ணத்தை வைத்து ஒவ்வொரு ஆத்மாவும் அவ்வுடலில் இருக்கும் நிலை கொண்டு
1.அவ்வெண்ணத்தை ஓம் என்ற நாதம் கொண்டு ஒரே நிலையில் ஜெபித்து ஆண்டவனின் சக்தியை நம்முள் எடுத்து
2.இவ்வுடல் வேறு அவ்வாத்மா வேறு என்ற நிலையை நாம் கண்கூடாகக் கண்டிடலாம்.
3.நம் ஆத்மாவின் நிலையை நாம் போற்றிப் பாதுகாத்தால் நாம் வாழ்க்கை நிலையில் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியதில்லை.

நம்மையே நாம் உணராத நிலையில் பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது பிறரின் அன்புக்கும் நம் ஆத்மாவை அடிமையாக்கிக் கொள்கின்றோம். அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசையின் நிலைதான்.

ஆண்டவனையே ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். அவ்ஆண்டவன் நமக்கு எப்படி அன்பு பொழிவான்…?

1.நம்மையே நாம் வெறுக்காமல்
2.நம்முள் ஆதி ஆசையை வளர விட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
3.நம்முள்ளையே சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
4.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
5.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் ஆத்மா அமைதியுற்று அவ்ஆண்டவனின் சக்தியே நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.

நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடல் ஆகாது.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆண்டவனா பொறுப்பாளி…?

1.நம்மில் நாம் ஆண்டவனைக் கண்டிட…
2.நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்வது தான்
3.அவ்வாண்டவனின் ஜெபத்திற்கும் ஆண்டவனின் ஆசிக்கும் உகந்தவர்கள் ஆகின்றோம்.

August 22, 2024

காந்த சக்திகளைக் (MAGNET POWER) உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்

காந்த சக்திகளைக் (MAGNET POWER) உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்

 

மகரிஷிகளுடைய அருளாற்றல் மிக்க சக்தியை நாம் நுகர்ந்து எடுக்க வேண்டும் என்றால் “அதற்குத் தகுந்த காந்த சக்தி” நமக்கு முக்கியமாகத் தேவை.

27 நட்சத்திரங்களையும் மற்ற கோள்களையும் ஏன் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அவைகள் விஷத்தினுடைய ஆற்றல் கொண்டது

27 நட்சத்திரங்களும் நவக்கோளின் சக்திகளும் மற்ற அதனுடன் சேர்த்துக் கொண்ட பல சக்திகளும் நம் உடலிலே அந்த சத்தெல்லாம் இருக்கின்றது.

நம்முடைய மனித வாழ்க்கையில் பல எண்ண உணர்வுகளுடன் நாம் இருக்கின்றோம்
1.அந்த உணர்வுகளை எல்லாம் மாற்றுவதற்கு
2.27 நட்சத்திரங்களையும் நவக்கோள்களையும் இந்த விஷமான அந்தச் சத்துக்களை எண்ணும்பொழுது
3.நேரடியாக அந்தச் சக்திகளைப் பெற்று
4.சாதாரண வாழ்க்கையிலே இயக்கச் சக்தியாக இருக்கும் உணர்வலைகளை அது அடக்கும்
5.அதனால்தான் 27 நட்சத்திரங்களையும் நவக் கோளின் சக்திகளையும் எண்ணி எடுக்கும்படி சொல்வது.
6.அதாவது அந்த உணர்வலைகள் நம் உடலுக்கு முன் பரவி இருப்பதை (ஆன்மாவில் இருப்பதை) அது அடக்கும்.

27 நட்சத்திரங்களையும் நவக்கோள்களையும் சூரியன் எடுத்து ஒளிகாந்த சக்தியாக மாற்றி உணர்வலைகளாக வெளிப்படுகின்றது. அதைப்போல
1.நாம் இந்த உணர்வின் எண்ணங்களைத் தூண்டச் செய்து நம் குருநாதரின் உணர்வுடன் கலந்து
2.கலந்த பின் உயிரை எண்ணி உயிருக்குண்டான காந்த சக்தியின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்க்கின்றோம்.
3.அப்படி ஈர்க்கப்படும் பொழுது நமக்குள் காந்த சக்திகள் கூடுகின்றது

சூரியன் எவ்வாறு 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோள்களின் சக்தியையும் அது ஒளி காந்தமாக எப்படி மாற்றுகின்றதோ இதைப் போல நம் உணர்வுக்குள் அதை எடுத்து நாமும் ஒளியாக்க முடியும்.

ஆனால்… சாதாரணமாக நம் உடலில் இருந்து வெளிப்படும் சுவாசம் உயிரிலே படும் பொழுது
1.நாம் எந்தெந்த எண்ணங்கள் கொண்டு எண்ணினோமோ அந்த உணர்வுகள் நம்மை இயக்கிக் கொண்டு
2.மகரிஷிகளையோ துருவ நட்சத்திரத்தையோ எண்ண விடாது.
3.கண்களை மூடி தியானத்திலிருந்தால் மகரிஷிகள் என்று நினைத்துக் கொண்டிருப்போம் அதை நினைத்து நம்மால் இழுக்க முடியாது.

திடீரென்று வருத்தமாக இருக்கும் பொழுது பாருங்கள். நாம் யாரிடம் சண்டையிட்டோமோ அவருடைய உருவம் எல்லாம் தெரியும்

உதாரணமாக நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் “இந்த மாதிரி ஆகிவிட்டது என்று அங்கிருந்து யாராவது சொன்னால்” அடுத்து தியானத்தில் அமர்ந்தால் உடனே அதுதான் முன்னாடி நிற்கும் அந்த இடங்கள் எல்லாம் தெரியவரும் அங்கு என்ன குழப்பங்கள் இருக்கின்றதோ அது எல்லாம் தெரிய வரும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை அந்த நேரத்தில் பெற வேண்டும் என்றால் அது எண்ண விடாது
1.அதனுடைய ஆற்றலை மங்கச் செய்வதற்கு தான் 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோளின் சக்திகளையும் பெற வேண்டும் என்று
2.உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அலைகளை உங்களுக்குள் பரப்புகின்றோம்.
3.ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகளை அது அடக்கவல்லது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு உடனடியாக இப்படி அடங்கச் செய்ய முடியும்.

27 நட்சத்திரங்களும் கதிரியக்கச் சக்திகள் கொண்டது. அந்தச் சக்திகளை உங்களுக்குப் பெற வேண்டும் என்று செயல்படுத்துகின்றோம்.

உங்கள் உடலுக்குள் 27 நட்சத்திரங்களின் சக்தியும் உண்டு நவக்கோளின் சக்தியும் உண்டு.
1.இந்த உணர்ச்சிகளைத் தூண்டி எடுத்து அதனுடைய அலைகளைத் தணித்து…
2.இன்னொன்றுடன் இது கலப்பதற்கு முன்னாடி உங்களைப் பெறும்படி செய்கிறோம் (ஞானகுரு).

தியானத்தின் மூலமாக சிறுகச் சிறுக நீங்கள் எடுக்கப்படும் பொழுது இந்த சக்திகள் நமக்குள் மனித எண்ணங்களை இயக்கச் செய்யும் மற்ற நிலைகளை அடக்குகின்றது.

சூரியன் எவ்வாறு நஞ்சை அடக்கி ஒளியாக மாற்றுகின்றதோ அதைப்போல நம் உயிரின் சுவாசத்திற்குள் செல்லும் போது
1.இந்த உணர்ச்சிகளைத் தூண்டி மெய் ஒளியுடன் நாம் பிரகாசிக்கச் செய்ய முடியும்.
2.நம் உயிரை ஒட்டி இருக்கக்கூடிய காந்த சக்திகளுக்குள்… அதாவது எலும்புக்குள் காந்தங்களாக அடர்த்தி ஆகிவிடும்.
3.ஓ….ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துடிப்பால் எண்ணி எடுக்கப்படும் பொழுது “அதிகக் காந்தத்தை ஈர்க்கும்…”

ஒரு மோட்டாரில் மேக்னட் அதிகமாக இருந்தால் அதற்குத் தகுந்த மாதிரி ஒரே மாதிரி சுற்றினாலும் அந்தக் காந்தச் சக்திக்கு தக்கவாறு மின்சாரத்தை அது உற்பத்தி செய்யும்.

அதைப்போல நம் உயிரின் துடிப்பு ஒரே சீரான நிலையில் இருந்தாலும் நாம் எடுத்துக் கொண்ட காந்த சக்திகள் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய எழும்புகளின் சில பாகங்களில்
1.உயிரை அணுகி உள்ள இடங்கள்
2.செவி ஓரங்களிலும்
3.கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள்ளும் இந்தக் காந்த சக்திகள் உண்டு.

யாம் இப்பொழுது உபதேசிக்கும் பொழுது புலனறிவுகளில் முக்கியமாக… கண் செவி உயிர் இருக்கும் பாகங்களுக்குக் காந்த சக்திகள் பெருகுகின்றது. எந்த நினைவின் தன்மை பெறுகின்றோமோ கண் விழிகளினுடைய நிலைகளும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்தி கண்ணுக்கு உண்டு.

அதே போல உயிரை அணுகி உள்ள இடத்திலும் காந்த சக்தி அதிகமாகக் கூடும் பொழுது… உயிரின் துடிப்பு லேசாக இருந்தாலும்
1.காந்தத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் பொழுது
2.நாம் எந்த மகரிஷியினுடைய சக்திகளை எண்ணி இருக்கின்றோமோ அதைப் பெற முடியும்.
3.காரணம்… அவர்கள் மிகவும் ஆற்றல் பெற்றவர்கள்… இவ்வாறு காந்தத்தை அதிகமாகக் கூட்டித்தான் அந்த ஆற்றல்களை நாம் பெற முடியும்.

அந்த மகரிஷிகள் அனைவரும் “அதீத காந்த சக்திகளைப் பெற்றுத் தான்… விண் வெளியின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து… உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்…”

அத்தகைய ஆற்றலை நாமும் பெறுதல் வேண்டும்.

பூமியைத் தவிர மற்ற மண்டலத்தில் மனிதர்கள் வாழும் வாய்ப்பே இல்லை

பூமியைத் தவிர மற்ற மண்டலத்தில் மனிதர்கள் வாழும் வாய்ப்பே இல்லை

 

இப்பூவுலகில் நாம் நம் ஜீவ உடலுடன் நம் ஆத்மா எந்த நிலை கொண்டு சுவாசம் எடுத்ததோ… அந்த நிலை கொண்டெல்லாம் சப்த அலைகள் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளனவோ… அதே நிலை கொண்டு தான் இவ் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் “ஆத்மாவைச் சுற்றிச் சப்த அலைகள் சுற்றிக் கொண்டே உள்ளன…”

உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு எந்த நிலையில் அந்த ஆன்மா சுற்றிக் கொண்டுள்ளது…? என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது.

இந்நிலையை வைத்துப் பலர் பல ரூபங்களிலும் பல வித கதைகளிலும் நம் முன்னோர் வாயிலாகவும் கேட்கப் பெறுகின்றோம்.
1.அறிந்த உண்மையை அறிந்த நிலையில் செப்புவதற்கு இன்று யாரும் இல்லை.
2.அன்றைய பெரியோர்கள் தான் அறிந்து செப்பினார்கள். அந்நிலை நமக்கு எதற்கு…?

நம் உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவிற்கு சுவாசநிலை உடலுடன் இருந்த பொழுது எந்த நிலை கொண்டிருந்ததோ அந்த நிலையிலே தான் அவ்ஆத்மா சுற்றிக் கொண்டே உள்ளது.

1.இவ்ஆத்மா இந்த மண்டலங்களிலேயே சுற்றிக் கொண்டிருந்து இந்நிலை கொண்டே தான் பிறகொரு ஜீவ உடலும் பெற்று ஜென்மம் எடுக்கின்றதா…?
2.இந்நிலையில் இருந்து பிற மண்டலங்களுக்குச் சென்று ஜீவன் எடுப்பது இல்லையா…? என்ற எண்ணம் உள்ளது.

அச்சக்தியின் அருள் பெற்று எந்த நிலையில் அவ் உயிரணு உருவம் பெற்று… எந்த மண்டலத்தில் சுவாச நிலை கொண்டு ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்ததோ… அந்த நிலை கொண்டே தான் அவ் உயிரணுவின் சுவாச நிலைகள் உள்ளன.

1.உடலுடன் அஜ்ஜீவாத்மா இருக்கும் நிலையும்
2.உடலை விட்டு ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையும்
3.பிறகு ஒவ்வொரு ஜென்மங்கள் எடுத்தும்
4.ஒவ்வொரு நிலைகொண்டும் எத்தனை ஜென்மங்கள் எடுத்து அவ்ஆத்மா வாழ்ந்தாலும்
5.அதன் தாய் சக்தியான எந்தச் சக்தி நிலைபெற்று அவ்உயிரணுவிற்கு சுவாச நிலை கிடைத்ததோ அதே நிலை பெற்று
6.மீண்டும் மீண்டும் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்க முடியும் அவ்வ்யிரணு எனும் ஆத்மா எல்லாமே.

அவ்ஆத்மாவின் சுவாசத்தால் எப்பூமியில் அவ் உயிரணுவிற்கு ஊட்டம் தந்ததோ அந்நிலை கொண்டே தான் அவ் உயிரணு எத்தனை காலமானாலும் சுற்றிச் சுற்றிப் பிறவி எடுத்துக் கொண்டே வாழ்ந்திடும் இந்தப் பேருண்மை நிலையை எந்த நிலை கொண்டும் யாரும் செப்பிட முடிந்திடாதப்பா.

பிற மண்டலத்திற்கு சென்று வாழ்ந்திட இன்று விஞ்ஞானத்தில் பல ரூபங்களைச் செய்து சென்றாலும் இவன் தாய் சக்தி தந்த சுவாச நிலையை மாற்றிப் பிற மண்டலத்தில் எப்படி ஜீவிதம் நடந்திட முடியுமப்பா…?
1.இம்மண்டலத்தில் தோன்றியவர் பிற மண்டலத்தில் பிறந்து உயிர் வாழ்ந்திட முடிந்திடாது
2.காரணம் பிற மண்டலங்களின் உயிர் நிலை இம்மண்டலத்திற்கும் அம் மண்டலத்திற்கும் மாறுபடுகின்றது.

அம்மண்டலத்தின் சுவாச நிலை கொண்டே தான் அங்கு தோன்றிய ஜீவணுக்கள் எல்லாமே ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்திட முடியும்.

அங்கு இருப்பவர் இங்கும் இங்கு இருப்பவர் அங்கும் ஜென்மம் மாறிப் பிறந்தாலும் பிறக்கவும் முடிந்திடாது… வாழ்ந்திடவும் முடிந்திடாது,

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தாய் என்பவள் யார் என்று இப்பொழுது புரிகிறதா…? நம் சுவாச நிலைக்கு உயிர் தந்த அச்சக்தித் தாய்தான் நம் முதல் தாயப்பா.

பிற மண்டலங்களில் வாழ்ந்து… பிற மண்டலங்களுக்குச் சென்று… அந்நிலையில் இருக்கும் உண்மையைக் கண்டறிய “இச்செயற்கை நிலை எதற்கப்பா…?”

பிற மண்டலங்களின் நிலையை அறிய
1.நம் சுவாச நிலை அளித்த அச்சக்தித் தாயின் ஜெபத்தை எண்ணி
2.நம் உயிரணுவின் உண்மை நிலையை அறிந்து
3.நாம் நம்முள் இருக்கும் அவ்ஈஸ்வர சக்தியை எண்ணி
4.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று நாம் ஜெபிக்கும் பொழுது
5.அவ்ஆண்டவனின் ரூபத்தில் நமக்குப் பல உண்மைகளைப் புகட்டிட அப்பெரியோர்கள் உதவிக்கு வருவார்கள்.

அந்நிலையில் நாம் நம் ஜெப நிலையிலேயே எல்லா மண்டலங்களின் நிலையையும் அறிந்து இம்மண்டலத்தில் வாழ்ந்திடலாம். எம்மண்டலத்திற்கும் சென்று வரும் பாக்கியம் பெற்ற நிலை எய்துபவர்கள் எல்லாம் யார் என்று இப்பொழுது புரிகிறதா…?

இருந்த நிலையிலேயே ஜெப நிலையில் அமர்ந்து எல்லா மண்டலங்களின் தன்மையையும் தன் நிலைக்கு உணர்ந்து கொண்ட பல கோடிச் சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள்… இப்படித் தெய்வத்தன்மை வாய்ந்த நம்மில் பல முன்னோர்கள் சூட்சும உலகம் என்னும் உலகத்தில் “அன்றும்… இன்றும்…” வாழ்ந்து வருகிறார்கள்.

பேராசை என்னும் நிலையில்தான் இன்று கண்டிடும் விஞ்ஞானம் எல்லாம்
1.அங்கிருக்கும் பொக்கிஷத்தை எடுத்து வந்து இன்று தன் நாடு வாழ தன் நிலை உயர
2.தன் நிலையை… சக்தி நிலையைச் சிதறவிட்டு வாழ்ந்து என்ன பயன்…?
3.அவ்ஆத்மாவின் நிலைக்கு அழியாக் கஷ்டத்தைத் தான் அளித்து வாழ்கிறார்கள் இன்றைய விஞ்ஞானம் என்னும் ரூபத்தில்.

தெய்வீகத் தன்மையில் தேவனின் சக்தியை ஜெயித்து வாழ்ந்திட “ஜெபம் (தியானம்) ஒன்றுதான் இஜென்மத்தில் உள்ளது” என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டுமப்பா.

August 21, 2024

குரு இட்ட கட்டளைப்படி நாட்டைக் காத்திடும் சக்தி பெற வேண்டும் என்று இதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்

குரு இட்ட கட்டளைப்படி நாட்டைக் காத்திடும் சக்தி பெற வேண்டும் என்று இதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்

 

ஆலயத்திற்குச் சென்று விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற வினையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலயம் வருபவர் எல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும். என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
1.நாட்டை ஆட்சி புரிபவர்கள் அனைவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் இந்த உலகுடன் ஒத்து வாழ வேண்டும்… மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாட்டை வழி நடத்த வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நாட்டை உருவாக்க இது பயன்படும்… மதங்கள் அல்லாதபடி உருவாக்க இது பயன்படும்.

இந்த அரசாங்கத்தில் நிர்வாகம் செய்யும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும் ஒருங்கிணைந்து செயல்படும் அந்தச் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள். அப்போது இங்கே பகைமைகள் வராது. இதைப் போன்று செய்தால்
1.எனக்குச் செய்யவில்லை
2.உனக்குச் செய்யவில்லை என்ற அந்த உணர்வுகள் வராது.
3.அனைவருக்கும் தொழில் வாய்ப்பு உருவாகும் செவ்வனச் செய்யும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஆலயங்களிலே வணங்குங்கள்..

அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.நாட்டில் அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.அரசாங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.இந்த நாட்டைக் காத்திடும் சக்தியாக அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்த ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வ குணங்கள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அரசாட்சி செய்வதை நமது அரசு என்று எண்ணி அங்கே நிர்வாகம் செய்பவர்கள் அனைவரும் தெய்வ குணம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் சக்தியாக அந்த மன பலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும். பேதங்கள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆலயங்களில் எண்ணுங்கள். நம் அனைவரையும் ஒருங்கிணைக்க இது உதவும்.

சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… என்னைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அந்தச் சந்தனத்தின் நறுமணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.நாட்டைக் காத்திடும் அனைவருக்கும் (அரசியல்வாதி… அதிகாரிகள்… படை வீர்ர்கள்) இந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும்
2.அங்கே அது வளர வேண்டும் என்று நீங்கள் வேண்டுங்கள்.
3.ஏனென்றால் நாம் அங்கே சென்றாலும் இந்த நிலைதான்… யார் சென்றாலும் இந்த நிலை தான்.

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கும் பொழுது எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் வருகின்றது. இதையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. அப்பொழுது குடும்ப ஒற்றுமை வர வேண்டும் என்று நாம் எண்ணுவது போல
1.நமது நாட்டைக் காத்திடும் நிர்வாகிகள் அனைவருக்கும் அந்த ஒருங்கிணைக்கும் சக்தி பெற வேண்டும் என்று
2.நாம் அனைவரும் எண்ணும் பொழுது அந்த ஆலய நிர்வாகிகளும் அந்த ஆலயத்திற்கு வருகின்றார்கள்
3.அவர்களும் இதே போன்று எண்ணும் பொழுது மனிதன் என்ற தன்னிலை அடையும் சக்தி வருகின்றது

அதற்குத்தான் தத்துவ ஞானிகள் ஆலயத்தை வைத்தார்கள்…!

பாலைப் போன்ற தூய்மையான மனம் நாங்கள் பெற வேண்டும் என்னைப் பார்ப்போர் எல்லாம் அந்தப் பாலைப் போன்ற தூய்மையான மனம் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவார் எல்லாம் இந்த நிலை பெற வேண்டும்.
1.அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்.
2.அவர்கள் மன பலம் பெற வேண்டும் மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நம்முடைய எண்ணம் அவர்களுக்கு வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வாழவும் இது உதவும்.

ஆகவே மகரிஷியில் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்று இந்த உடலுக்குள் நல்லவைகளும் கெட்டவைகளும் குணங்கள் கலந்து தான் இருக்கின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை நாம் வளர்த்துக் கொள்ள இது உதவும்.

இதே உணர்வின் நிலைகள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒருங்கிணைந்த நிலைகள் நாம் எண்ணும் பொழுது
1.நமது அரசே உலகிற்கு எடுத்துக்காட்டும் அரசாக வளர்ந்து வரும்
2.அதன் கீழ் வாழ்ந்து வரும் மக்களாகிய நாமும் உயர்ந்த நிலை பெற முடியும்.

ஏனென்றால் மன பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் உலகில் மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி… எந்த ஆலயத்திற்கு நாம் சென்றாலும் இந்த முறைப்படி ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்… ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் அரசும் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி ஒருங்கிணைந்தால் கட்சி பேதமும் வராது இன பேதங்கள் வராது மத பேதங்கள் வராது.
1.நாம் அனைவரும் இந்த ஆட்சி சீராக வளர வேண்டும் என்று எண்ணி அப்படி நடந்தால் நமக்குத் தொல்லை இல்லை.
2.அதற்குப் பதிலாக என்னுடைய வழியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் அதற்கடுத்துத் தொல்லைகள் தான் வருகின்றது.

ஆகவே இத்தகைய எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஆலயங்களில் அரசை ஒத்தே நாம் பிரார்த்திக்க வேண்டும்.

நமது சக்தி எல்லாம் ஒருங்கிணைந்து சேர்ந்து ஓட்டு போட்டு தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் நல்ல நிலையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால்
1.அவர்களுக்குள் நம்மை காக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.பின் நாம் எண்ணும் எண்ணங்கள் பகைமை இல்லாத உணர்வாக வளர்கின்றது.

இதை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்து அடுத்தடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நமது நாட்டு மக்கள் அனைவரும் மன பேதமின்றி இன பேதம் இன்றி ஒருங்கிணைந்து வாழ வேண்டும். ஆட்சி புரியும் நிர்வாகிகள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தலையாயக் கடமையாக எண்ணுதல் வேண்டும்.

நம் உடலுக்குள் நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் எப்படிக் கலந்திருக்கின்றதோ இதைப் போன்று
1.நமது நாட்டுக்குள் இருக்கும் எல்லாம் ஒருங்கிணைந்தால் தான்
2.நாடு நலம் பெறும்… மக்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும்.

இதைப் போன்ற தீமைகள் விளைவித்து மக்களை தவறான வழியில் செயல்படச் செய்யும் உணர்வுகளை மாற்ற ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம்… இந்த நாட்டில் பிறந்த மக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் அறியாது செய்யும் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும்… மக்கள் பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்… அந்த மகரிஷிகள் அருள் வட்டத்திலே மனிதனாகப் பிறந்த முழுமையின் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்துங்கள்.

கட்சி பேதமின்றி மன பேதமின்றி இன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்” இந்த உலகைச் சிருஷ்டிக்கின்றது.

மத பேதங்களால் போர் எப்படி நடக்கின்றதோ அதைப் போல் கட்சி பேதத்தால் உண்மை நிலைகள் அறியாது பேத உணர்வுகளே வளர்க்கப்பட்டு சீராகச் செயல்படும் தன்மைகள் இந்த உலகெங்கிலும் இப்போது மறைந்து கொண்டே வருகின்றது.
1.அதை போன்ற நிலைகள் நம் நாட்டிலே விளையாது கட்சி என்ற பெயரை அகற்றிவிட்டு
2.நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சி நிலைகள் சீராக வரவேண்டும் என்று ஒருக்கிணைந்து எண்ணினால்
3.எல்லோரும் நல்லவரே…! எல்லோரும் நல்லாட்சியைப் பெற முடியும்.

ஆனால் அரசாங்கத்தைக் குறையாக எண்ணி அதை வளர்த்து விட்டால் அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறை கூறிக் கொண்டே தான் இருப்போம். குறைய நிவர்த்திக்கும் எண்ணம் நமக்குள் வராது. குறையைச் சொல்லிவிட்டு நாமும் குறையைத் தான் செய்து கொண்டிருப்போம்.

ஆகையினால் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்ன நிலைகளில்… நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து… நமது நாடு சீராக வளர்ந்திடும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் ஒருங்கிணைந்து நினைப்போம்.

பக்தி கொண்ட நிலையில் இருந்து மாந்திரீகம் தாந்திரீகம் என்று சில பேர் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

கடவுளின் பெயரால் மக்களின் மதியை மாற்றிக் கொண்டிருக்கும் அறியாத நிலையில் தீமையை விளைவிக்கும் சாதுக்கள் என்ற பெயர்களால்ம் பல தவறுகள் செய்து கொண்டிருக்கும்
1.அவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவ்வாறு செயல்படும் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று
3.நாம் ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் எண்ண வேண்டும்.

மாயாஜாலத்தாலும் மாந்திரீகத்தாலும் மக்களை மதி மயங்கச் செய்யும் எவராக இருப்பினும் “அவருடைய தீய எண்ணங்கள் மறைந்து…” மக்களைக் காத்திடும் உணர்வுகளும்… ஞானிகள் காட்டிய வழியில் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நல்ல எண்ணங்களும் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஞானிகள் காட்டிய நிலைகளைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு…
1.நான் கடவுளைக் கண்டேன்… கடவுளின் அவதார புருஷன் என்று சொல்லிக் கொண்டு
2.அவர் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இதைத் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர்ந்தால்தான் இது எல்லாம் சாத்தியமாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடல் பாடிக் கொண்டிருக்கும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் உலகம் அனைத்திற்கும் மெய் ஞானத்தை உணர்த்திச் சென்றான்… ஞானத்தைப் போதித்தான்.

தென்னாட்டிலே வாழும் நாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் ஆற்றலை மதபேதமற்ற நிலையிலும் இனபேதமற்ற நிலையிலும் மொழி பேதமற்ற நிலைகளிலும் இந்த உலக மக்கள் வாழ வேண்டும் என்று
1.தமிழ்நாட்டில் பிறந்த நாம் ஒருங்கிணைந்த நிலை கொண்டு
2.கட்சி பேதமின்றி நாம் செயல்பட வேண்டும்.

ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பார்… ஒருவர் கடவுள் இல்லை என்பார்…! ஒருவருக்கொருவர் போர் செய்து பிழைகள் செய்து கொண்டு குறைகளை உருவாக்க முடிகின்றதே தவிர அதை நீக்கும் நிலை இல்லை.

அது போன்ற நிலைகளை மறந்து விட்டு ஆட்சி பீடங்கள் சீராக இயங்க வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்து இந்த உணர்வின் வலுவை நாம் கூட்டினோம் என்றால் “நமது ஆட்சி நலமாக இருக்கும்… உலகுக்கு எடுத்துக்காட்டாகவும் வரும்.

1.அவர்கள் உயர்ந்த ஆட்சி புரிய வேண்டும் என்று நாமும் ஒத்துழைக்க வேண்டும்
2.குறைகளை மட்டும் கூறிக் கொண்டிருந்தால் குறைகள் தான் வளர்ந்து கொண்டிருக்கும்… அதைத்தான் வளர்க்க முடியுமே தவிர நீக்க முடியாது.

நீங்களே அந்த ஆட்சி பீடத்தில் உட்கார்ந்து பார்த்தால் ஒரு நண்பன் எனக்கு இதைச் செய்து கொடு...! என்று கேட்பான் இன்னொருவன் அவனுக்குச் செய்கின்றான்… எனக்கு செய்ய மாட்டேன் என்கிறான் என்பான்.

ஒருவருக்குச் செய்யும் பொழுது மற்றவர் குறை சொல்லத்தான் வருவார்கள்.

இது போன்ற நிலைகள் இல்லாதபடி அரசியல் பேதம் இல்லாதபடி எத்தகைய பேதம் இல்லாதபடி நாம் அனைவரும் ஒன்று சேர்த்துச் செயல்பட வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னது போன்று இந்த உலக மக்களுக்கு எடுத்துக்காட்டாக வளரச் செய்யும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நாம் அனைவரும் பெற்று இந்த ஒருங்கிணைந்த ஆட்சியாக பேதமற்ற நிலைகளில் சிருஷ்டித்து உலக அரங்கிலே அருள் ஞானத்தைப் பரவச் செய்வோம்.
1.உலகைக் காத்திடும் சக்தியாகக் கொண்டு வருவோம் என்று
2.இதைப் பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்வோம்.

யார் எந்தக் குறையைக் கூறினாலும் குறைகள் இல்லாத நிலையாக உருவாக வேண்டும்… குற்றமற்ற நிலையாக தமிழ்நாடு உருவாக வேண்டும்.

தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே ஓங்கி வளர வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள். எத்தகைய பேதமும் இல்லாத பேதமற்ற வாழ்க்கையாக நாம் வாழ்ந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வுகள் இங்கே வளர வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்வோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உலகில் வாழும் மக்கள் அனைவரும் முழு முதல் கடவுள் என்று ஞானிகள் உணர்த்திய அருள் வழிப்படி உலகைச் சிருஷ்டிக்கும் மனித உடல் பெற்ற நாம் “பல நன்மைகளை நாம் அனைவருக்கும் உருவாக்குவோம்…”

உடலை விட்டுப் பிரிந்தால் என்றும் பிறவியில்லா நிலை அடைவோம் பகைமையை வளர்த்து புவியின் ஈர்ப்புக்குள் சிக்கிடும் நிலையாக இல்லாதபடி பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்று உறுதிப்படுத்துவோம்.

இதை நாம் அனைவரும் பெற்று உலகிற்கு எடுத்துக்காட்டாக வருவோம்

எவர் எத்தொழில் செய்தாலும் அந்தக் குறைகளைப் பதிவு செய்யாது அவர் அறியாது குறை உணர்வுகள் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.

குருநாதர் பித்தரைப் போன்று இருந்துதான் இந்தப் பேருண்மைகளை எல்லாம் அறிந்து உணர்த்திச் சென்றார். சந்தர்ப்ப பேதங்களால் மக்கள் அனைவரும் மன வேதனைப்பட்டு கொடிய நோய்களுக்கும் கொடிய செயல்களுக்கும் ஆளான நிலையில் இருந்து விடுபட வேண்டும். ஆகையினால்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதித்து
2.ஈசன் கட்டிய உடலான ஆலயத்திற்குள் அருள் ஞான சக்திகளை நீ புகுத்தி விடு என்றார்.
3.அங்கே அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக அருள் உணர்வு கிடைக்க வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய் என்றார் குருநாதர்.

அதைத்தான் யாம் (ஞானகுரு) செய்கின்றோம்.

இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் இதை வளர்த்து நமது நாடு என்ற நிலைகளிலும் “உலகம் காக்கப்பட வேண்டும்” என்ற நிலைகளில்
1.அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் பேதமற்ற நிலைகளாக வாழ்வோம்
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழ்வோம்.
3.மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வோம்
4.நாட்டுக்குள் ஒற்றுமையை வளர்ப்போம்
5.தீமையற்ற நாடாக நம் தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
6.இங்கிருந்து உலகைக் காத்திடும் நிலையாக எல்லா நாட்டிற்கும் நாம் அருள் சேவை செய்யும் அந்தப் பண்பினை ஊட்டுவோம்
7.நாம் அனைவரும் சகோதரர் என்ற நிலையைக் கூட்டுவோம்.

ஆகவே இந்த உலகம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற்றால் நாமும் நலம் பெறுவோம் உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்தத் தத்துவம் எந்தத் தென்னாட்டில் இருந்து உலகம் முழுவதும் பரவியதோ மீண்டும் இங்கிருந்து
1,மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவரின் அருளால் உலக மக்களை ஒன்று சேர்த்திடும் நிலையாக
2.மக்களைக் காத்திடும் நிலையாக குரு அருள் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாகப் பதிந்து
3.உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களில் விளைந்து
4.இந்த உலகைக் காப்பீர் உங்களைக் காப்பீர் உங்கள் ஊரைக் காப்பீர் உலக மக்களைக் காப்பீர்கள்.

நிறைந்த மனதுடன் நாம் வாழ்வோம் எல்லோரையும் நிறைவான நிலைகள் பெறச் செய்வோம் அவர்கள் நிறைவடைவதைக் கண்டு நாம மகிழ்வோம். அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கண்டு நாமும் பேரானந்த பேரு நிலை இந்த வாழ்க்கையிலே அடைவோம் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகள் இந்த உடலிலேயே வளர்ப்போம் என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

நாட்டு அரசுக்கு நல்ல உணர்வை நாம் எடுத்துக் காட்டினோம் என்றால் அதுவே நம் அரசாகின்றது நாமே அரசாகின்றோம் அரசே நாம் ஆகின்றோம்.

இந்த உயர்ந்த நிலையில் கொண்டு “நாம் எல்லோரும் வாழ வேண்டும்” என்ற நினைவைச் செலுத்தினால்
1.அந்த அரசும் நலமாக இருக்கும் அந்த அரசால் நாமும் நலமாகின்றோம்.
2.நாம் தான் அரசு அரசுதான் நாம் என்ற நிலையில் கட்சி பேதமின்றி இந்த நாட்டிற்குள் உயர்ந்த ஞானத்தை வளர்ப்போம்.

பேதமற்ற வாழ்க்கை நாம் வாழ்வோம் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு உலகிற்கே எடுத்துக்காட்டாக வரவேண்டும் உலக பேதமற்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்று தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வுகளை உலகிலே பரப்புவோம்.

அந்த மெய் ஞானியின் உணர்வுகளை ஒருங்கிணைந்து நமக்குள் வளர்ப்போம். உலகம் நலம் பெற வேண்டும் என்று நமது உணர்வுகளை பரப்புவோம். சகோதர உணர்வுடன் நாம் வாழ்வோம்… பகைமையற்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்

எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டி இதை நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).