ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 7, 2013

குடும்பத்தில் ஒரு உயிராத்மா விண் சென்றால், பெரும் லாபம் அடைகின்றோம்

1. இறந்தவர்கள் அடுத்த உடல் பெற ஆகும் காலம்
பௌர்ணமி தியானக் காலங்களில், தியானம் எடுத்துக் கொண்டவர்கள், கூட்டுத் தியானத்தின் மூலமாக, இறந்தவர்களுடைய உயிராத்மாக்களை விண் செலுத்தப் பழகியபின் வாரத்தில் ஒரு நாள், எண்ணச் சொல்கின்றோம்.

அப்படி நாம் எண்ணி, இந்த தியானம் இருந்தபின், சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அப்படி எண்ணிவிட்டு இறந்தவர்களை எண்ணி, அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று, நாம் எண்ணிச் சொன்னால், அந்த உயிராத்மா இன்னொரு உடலுக்குள் போய் வெளியே வந்தாலும் கூட, நாம் இதைப் போலச் சொல்லும் போது, அவர்கள் அந்த சமயம், வெளியிலே வந்தால், அந்த உயிராத்மாவை இழுத்து விண் செலுத்த முடியும்.

ஏனென்றால், அவர்கள் உடலின் உணர்வுகள் இங்கே உண்டு. நூறு வருடத்திற்குள் இன்னொரு சரீரம் (அடுத்த உடல்) பெறுவதில்லை. ஆடாகப் பிறக்க வேண்டுமென்றால், நூறு வருடம் ஆகும். மாறி மாறி வரும்.

ஆனால், உணர்ச்சியினுடைய நிலைகளில்
பூரணமாக விஷத்தின் தன்மை அதிகமான பின்தான்
நினைவு இழக்கப்பட்டு,
நினைவிழந்த நிலைகள் கொண்டுதான் சரீரமாகும்.
அந்த மணமே முழுமையாக மாறிவிடும்.
ஆகையினால், இறந்தவர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றாலும், அவர்களையும் விண் செலுத்திவிடலாம்.
2. உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று, பந்தைப் போன்று தள்ள வேண்டும்
தியானம் எடுத்துக் கொண்ட அனைவரும், அந்த உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களை எண்ணி, சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று, இந்த ஒளியின் தன்மையைக் கூட்டி, இந்த உணர்வின் தன்மையை எண்ணும்போது, நம் புலனறிவிற்கு, வலுக் கொடுக்கின்றோம்.

இதன் வழிகொண்டு, நாம் சரீர நிலைகளில் இருந்தாலும், உடலை விட்டுப் பிரிந்தவர்கள் சூட்சும சரீரமாக இருக்கிறார்கள். நாம் ஆத்ம சுத்தி செய்துகொண்டு, இந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று, உணர்ச்சியுடன் உந்தி, நாம் மேலே தள்ளுகின்றோம்.

ஆனால், மந்திரக்காரர்கள் என்ன செய்கிறார்கள்? மந்திரத்தைச் சொல்லி, ஒரு உயிராத்மாவை எந்தெந்த மணங்கள் கொண்டு, அவர்கள் ஜெபித்தார்களோ, அந்தந்தக் குணங்களுக்குத் தக்கவாறு, இன்று மந்திரத்தை ஜெபிக்கும்போது, அந்தந்த ஆத்மாவை இங்கே இழுக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, நாம் மந்திர நிலைகளைச் செய்கின்றார்கள். இது ஈர்க்கும் தன்மை.

ஆனால், ரிஷிகளுடைய தன்மையோ, மெய் ஒளியின் தன்மையை எடுத்துச் செயல்படுத்தியவர்கள். இறந்த உயிராத்மாக்களின் நிலை செயலற்றது. அவர்கள் ஜெபம் பண்ணவில்லை, ஒன்றும் பண்ணவில்லை. உணர்வின் தன்மை பிரிந்திருந்தாலும், உணர்ச்சியின் தன்மை நம் உடலிலே இருக்கின்றது.

முறைப்படி இந்தத் தியானம் செய்து கொண்டவர்கள், அந்தக் குடும்ப சம்பந்தப்பட்ட உணர்வுகள் இருப்பதனால், இதை எடுத்துக் கொண்டவர்கள், இறந்தவர்களுடைய உயிராத்மாவினுடைய நிலைகளை எண்ணி, அது சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று எண்ணும்போது, அது பந்து போல உள்ளே தள்ளிவிடும். எளிதில் விண் செலுத்தலாம்.

இல்லையென்றால், புவியின் ஈர்ப்புக்குள்தான் நிற்கும். இப்படி நாம் விண் செலுத்தினால், எப்படி மனிதனாகப் பிறந்து ஒளியாக மாற்றி, இன்று சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றார்களோ, அந்தச் சப்தரிஷி மண்டல ஒளியலைகளுடன் நாம் கலக்கலாம்.

ஆகவே, இவ்வாறு அந்த சப்தரிஷி மண்டல ஒளியலைகளை நமக்குள் சேர்த்து, நாம் குடும்பக் கூட்டு ஐக்கிய தியானம் செய்கின்றோம்.

அப்படி ஐக்கியமாகச் செய்தால், ஒவ்வொருவருடைய நிலைகள் நாம் பாசத்தினால், வளர்த்துக் கொண்ட நிலைகள் கொண்டு, ஆத்ம சுத்தி செய்து, இறந்தோர் வீட்டிலே, நாம் அனைவரும் சேர்ந்து, அந்த உயிராத்மாவின் நிலைகள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று,
எல்லோரும் இதே தியானமிருந்து,
அந்தக் குடும்பத்தாருடன் சேர்ந்து இணைந்து,
நாம் இதைச் சொல்லுவோமேயானால்,
இந்த உணர்வுகள் பெரும் நதியாக மாறுகின்றது.

அப்பொழுது, இந்த உயிராத்மாவை நாம் உந்தித் தள்ளி, உயிராத்மாவைப் புனிதம் பெறச் செய்யலாம். இப்படித்தான், அன்று மெய்ஞானிகள் அதைச் செய்தார்கள்.
3. குருதேவர் ஆரம்பத்தில் (பல கோடி ஆண்டுகளுக்கு முன்) விண் சென்ற உணர்வு
இந்த பௌர்ணமி தியானம் மிகவும் முக்கியம். இதை எதற்காக வேண்டி வைக்கிறோம் என்றால் உங்கள் புலனறிவின் எண்ணங்களை விண்ணை நோக்கச் செய்து,
எந்த ஊரில் நீங்கள் இருந்தாலும், நாம் அனைவருமே சேர்த்து,
இந்த எண்ண அலைகளைக் குவிக்கப்படும் பொழுது,
நமது எண்ண அலைகள் வெகு தூரத்தில் பாய்கின்றது
நமது குருநாதர் அவர் ஆரம்பத்தில் விண் சென்றவர். அப்பொழுது, நம் எண்ண அலைகள் ஒன்றாகச் சேர்த்து குவிக்கப்படும் பொழுது, மனித உடலிலிருந்து ஒளியின் உணர்வுகளைப் பெற்று,  நமது குருநாதர், அவர் ஆரம்பத்தில் விண் சென்ற உணர்வுகளை”, நாம் அனைவரும் எளிதில் பெற முடிகின்றது.
அந்த ஒளியின் உடலில் இருந்து வந்த ஒளி அலைகள்தாம்
நம் பூமியில் படரப்பட்டு, மற்ற உடல்களிலே பாய்ச்சப்பட்டு,
அந்த உணர்ச்சிகள் தூண்டி,
மீண்டும் இங்கே எழுகின்றது.

எழுந்த நிலைகளில் அந்த வித்தின் சத்துதான்,க்கும் அது கிடைத்தது. எமது குருநாதர் அருள் வழி கொண்டு, அவர் கொடுத்த வித்தினை அவர் காட்டிய வழிகளில் வளர்த்து, அதை உங்களுக்குள்ளும் நல்ல வித்தாக விளையச் செய்கின்றோம்.
4. குடும்பத்தில் ஒரு உயிராத்மா விண் சென்றால், பெரும் லாபம் அடைகின்றோம்
ஒரு நெல் பசியைப் போக்காது. பல நெல்கள்  ஒன்று சேர்ந்து ஆக்கப் பணிகளுக்கு பயன்பட்டு, அதை எப்படி உணவாக உட்கொள்கின்றோமோ, அதைப் போன்று நாமெல்லம் இந்த நிலைகளைச் செய்தால், அதன் வழியில் துரித நிலைகளில் பெறமுடியும்.

பல ஆண்டுகள் யாம் தனித்து எடுத்தாலும், அந்த உணர்வின் தன்மையில் பல ஆயிரங்கள் வந்தாலும், சத்து சேர்ப்பது மிகக் கடினம்.

நாம் எல்லோரும் சேர்ந்து, அந்த மெய் ஒளியின் தன்மையை நம் குருநாதர் காட்டிய நிலைகளில் கொண்டு, ஒவ்வொரு உடலிலும் சேரும் இந்தத் துன்பத்தை நீக்கி, அந்த இன்பத்தின் நிலைகளைப் பெருக்குவதற்கு, யாம் சொல்லும் இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்து, ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த மெய்ஞானியின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் பொழுது, அனைவருக்குள்ளும் அந்த சத்து விளைகின்றது.

ஆக, நமக்குள் ஒருவருக்கொருவர் கலந்து, அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றால் தான் முடியுமே தவிர, “தனித்து ஒருவர் செல்வோம் என்பது முடியாது. 

நாம் அனைவரையும் ஒன்று சேர்க்கும் பொழுது, எவர் ஒருவர் முந்திச் செல்கின்றாரோ, அவர் பலன் பெறுகின்றார். ஆக, இப்படி நாம் இந்த வழிகளில் சென்று, நமக்குள் உறுதுணையான நிலைகளை ஏற்படுத்திக் கொண்டால்தான் நாம் உறுபெற முடியும்.

இந்த கூட்டு தியானங்களில் உங்கள் ஒவ்வொருவரையும் ஐக்கியப்படுத்தி, பௌர்ணமி தியானங்களில் எண்ணங்களைக் குவிக்கச் செய்து, நாம் நண்பர்கள் என்ற நிலைகளில் சென்றாலும், அடுத்து நாம் இந்த உடலைவிட்டு, பூமியை விட்டு இந்த உயிராத்மா செல்லும்பொழுது, முறைப்படி நாம் சப்தரிஷி மண்டலங்களில் அந்த உயிராத்மாவை உந்தித்தள்ள வேண்டும்.   

எந்த குடும்பத்திலிருந்து அந்த உயிராத்மா செல்லுகின்றதோ, அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அந்த உடலின் உணர்வலைகள் இருக்கின்றது. அதை எண்ணி விண்வெளியின் ஆற்றலை எண்ணும் பொழுது, அந்த உணர்வின் தன்மை அவர்கள் பெறுவது சுலபமாகின்றது.

அதைப் போன்று, உறவினர்கள், நண்பர்கள் நம்முடைய நிலைகளில் நம் குடும்பத்தாருக்கு ஒத்துழைக்கப்படும் பொழுது, அதன் நிலைகளில் விண் செலுத்துகின்றோம்.

நம் குடும்பத்தினுடைய நிலைகளில் ஒரு உயிராத்மா விண் சென்றது என்றால், அதனால் பெரும் லாபம் அடைகின்றோம். எமது அருளாசிகள்.