ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 21, 2013

பல அகஸ்தியர்களை நாம் உருவாக்க வேண்டும்

இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு, யார் கர்ப்பமாக இருந்தாலும், நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள்.

தியானம் செய்யக் கற்றுக் கொண்டவர்கள், கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள், ஓம் ஈஸ்வரா என்று, புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி ஏங்கி நினைவைச் செலுத்துங்கள்.

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று. நன்றாக ஆத்ம சுத்தி செய்துவிட்டு, கருவிலே இருக்கும் அந்தக் குழந்தைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். என்று அந்தக் குழந்தையைச் சிறிது நேரம் நினைத்து, அதை தியானிக்கச் செய்யுங்கள்.

கருவிலே இருக்கும் குழந்தைக்கு, அந்தத் தாய்தான் ஞானப் பாலை ஊட்ட வேண்டும். அப்படி ஞானப் பாலை ஊட்டி, அந்தக் குழந்தை வெளி வரும்போது அது ஞானக் குழந்தையாகவே பிறக்கும்.

உலகிற்கு, அந்தக் குழந்தையின் ஒவ்வொரு சொல்லும், மிளிரும் தன்மையாக,
அது பெற்ற உணர்வின் சக்தி,
பேரண்டத்தின் பேருண்மைகளைச் சுலபமாகப் பெற்று,
தனக்குள் விளைய வைத்து,
அந்த மூச்சு “அம்மா” என்ற
மழலைச் சொல்லின் நிலைகள் உங்களுக்குள் இனிமையூட்டும்.

அந்த மெய் ஒளியின் தன்மைகள், உங்களுக்குள்ளும் வளரச் செய்யும். அதுவும் வளரும். அந்தக் குழந்தை இடும் மூச்சலைகள், இந்த நாட்டுக்கும் உதவும், மற்றவர்களுக்கும் உதவும். ஆகவே, எதிர்கால சிசுக்களை இப்படி உருவாக்குங்கள். அதற்காக வேண்டி, வீட்டிலே கூட்டுக் குடும்ப தியானம் செய்யுங்கள்.

இன்று விஞ்ஞானத்தால் ஏற்படுத்தப்பட்ட,
அசுத்த உணர்வின் நிலைகள் இங்கு அணுகாது,
அதை அழிக்கும் ஆற்றலாக
உங்கள் மூச்சின் நிலைகள் இருக்க வேண்டும்.
அடுத்து வரும் நிலைகளில், கருவில் வளரும் குழந்தைகளும் அகஸ்தியனைப் போன்று, இந்த நிலைகளைப் பெறுகின்றார்கள்.