ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 21, 2013

உடலைச் சுத்தப்படுத்தினால், உயிரான ஈசனிடம் கூலி கிடைக்கும்

நம்மையறியாமல் அழித்துக் கொண்டிருக்கும், துன்பங்களையூட்டும் அந்த உணர்வுகளை நமக்குள் உட்புகாதபடித் தடுக்க வேண்டும். அவ்வாறு உட்புகுந்தாலும், ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கடுமைப்படுத்தி, நீங்கள் அசுத்தத்தை நீக்கி, உங்கள் உடலுக்குள் புனித சக்தியாக மாற்றுங்கள். ஏனென்றால், நம்மை உருவாக்கும்
அந்த “ஈசனின் வீடே” அது.
அவன் ஆலயம் அது.

ஆகையினாலே அந்த ஆலயத்தை நாம் சுத்தப்படுத்தினால், அவனிடம் கூலி கிடைக்கும். அந்த ஆலயத்தை எந்த அளவுக்குச் சுத்தப்படுத்துகின்றோமோ, அவனுடன் நாம் இணையலாம்,

நம் உடலான ஆலயத்தை, நமக்குள் வீற்றிருந்து உருவாக்கி, நமக்கு நினைவூட்டி நம்மை இயக்கும் அந்த உணர்வுகள், ஈசனுக்கு நாம் செய்யும் தொண்டாக நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் யார் துன்பத்தை ஊட்டும் எண்ணங்களை உருவாக்கினாலும்,
அது எனக்கல்ல.
அது என்னைச் சாராது.
அந்த ஈசனின் அருள் ஒளியை நான் பெறுவேன்,

அவன் எனக்குள் இருக்க, அவன் எனக்கு நல்ல உணர்வை ஊட்டுவான். “அவனின் நிலைகளில் என்னை இட்டுச் செல்வேன்” என்ற இந்த எண்ணங்களை நீங்கள் மாற்றித் திருத்திப் பாருங்கள். உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற முடியும்.