ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2013

நாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் படர்ந்தால் வரும் பாதிப்புகள்

1. வீட்டிற்குள் நாம் விடும் மூச்சலைகள் என்ன செய்கின்றது?
நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலைகள் நிமித்தமாக வெளியிலே செல்லும் பொழுது, பிறருடைய கடுமையான உணர்வலைகள் அவர்களுக்குள் தாக்கப்பட்டு, அந்த உணர்வாலே அந்த நல்லவரின் உணர்வின் எண்ணங்களையும் மாற்றி, நம் குடும்பத்திற்குள் ஊடுருவி, நமக்குள் பாய்ச்சும் பொழுது தீயவினைகளை உண்டாக்கி விடுகின்றது.

இதைப் போன்று, நம்மையறியாமலேயே சேரும் இந்த நிகழ்ச்சிகளை நம் குடும்பத்தளவு இந்த ஆத்ம சுத்தி செய்து, இதைப் போக்க வேண்டும். 

நாம் வெறுப்பான உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது, ஒருவருக்கொருவர் எதிர்ப்பான உணர்வுகள் தோன்றுகின்றது.

பின், இந்த உணர்ச்சிகளை
நாம் மூச்சால் வெளியிடும் பொழுது
சுவர்களிலும், பதிவு செய்து கொள்ளும்.
அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருக்கப்படும் பொழுது,
அந்த உணர்வுகள் பூமியிலேயும் பதிந்துவிடுகின்றது.   

அப்படிப் பதிந்தபின், நம் உடலிலிருந்து, வந்த இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு, அந்தக் கடுகடுப்பும், ஒருவருக்கொருவர் வெறுப்பான எண்ணங்களையும், நாம் தோற்றுவித்து விடுகிறோம். 

அதனாலே, நாம் எண்ணிய நல்ல காரியங்கள் தடைபடுகின்றது என்று, வேதனையும் சஞ்சலமும் கொண்டே நாம் இருப்போம்.

ஆக, நாம் எதற்குள் இருக்கின்றோம்? இந்த விஷத்தின் அறைகளுக்குள்ளே, நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து, அந்த உணர்வைச் சுவாசித்து, நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்.

இன்று பூமி, எவ்வாறு விண்ணிலே வரக்கூடியதை வெளிப்படுத்தினாலும் அந்த உணர்வின் தன்மைகள் பூமிக்கு வெளியிலே விஷத்தின் ஆற்றல் இருக்கின்றது. பூமிக்குள்ளும் சேர்கின்றது.

இதைப் போன்றுதான், நம் உடலுக்குள்ளும் இயக்கிவிடுகின்றது. நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து, நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று ஆகிவிடுகின்றது.
2. கூட்டுத் தியானத்தின் மூலம், வீட்டிற்குள் மகிழ்ச்சியான அலைகளைப் பெருக்க முடியும்
இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும் என்றால், இந்த முறைப்படி தியானம் செய்த வழிகளில் உங்கள் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்வதற்கு, வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானம் இருங்கள். இந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அருள் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.

இதே மாதிரி வீட்டில் இறந்தவர்களுடைய உயிராத்மாவை நீங்கள் எண்ணி, “அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்க வேண்டும். அவர்கள் என்றென்றும் ஒளி நிலைகள் பெறவேண்டும் என்று, நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

அதற்குப் பின், சப்தரிஷி மண்டலங்களின் ஒளி காந்த சக்தியை நாங்கள் பெறவேண்டும்”. இது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் திணித்து, உங்கள் உடலைத் தியானித்துவிட்டு, உங்கள் மூச்சின் எண்ண அலைகளைப் படரவிடுங்கள்.

வீட்டில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். நம் வீட்டிற்கு வருவோர் அனைவருமே நலமும் வளமும் பெறவேண்டும் என்று, உங்கள் உணர்வின் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.

இந்த உணர்வாலே இழுக்கப்பட்ட அந்தச் சக்தி
உங்கள் வீட்டிற்குள்ளும் பதிவாகின்றது. 
 
அதே சமயம், தீமை செய்யும் உணர்வலைகள் கூடி, நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் வீட்டிற்குள் பதிவானாலும் அதை மாய்க்க இது உதவும். ஆக, ஒவ்வொரு நிமிடமும் நம் வீட்டையும், உடலையும், சுத்தப்படுத்தியே ஆக வேண்டும். எமது அருளாசிகள்.