ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 14, 2013

தியானமிருக்கின்றேன்... ஒன்றும் நடக்கவில்லை...! என்ற தவறான எண்ணத்திற்குச் செல்ல வேண்டாம்

“தியானமிருக்கிறேன்” எனக்கு “ஒன்றும் கிடைக்கவில்லை”,
“தியானமிருக்கிறேன் என் தொழில் நன்றாக நடக்கவில்லை”
என்று தவறான எண்ணத்திற்குக் கொண்டு செல்லாமல் “தியானமிருக்கிறேன், தொழில் நடக்கும்” என்ற எண்ணம் வரப்படும்போது, நீங்கள் தேட வேண்டியது இல்லை.

தியானத்தின் நிலைகள் நாம் எடுக்கின்றோமென்றால் இந்த உணர்வு தானாகவே வரும். நமக்கு வேண்டியது அது. அதை எடுக்கப்படும்போது இந்த உடல் பற்றின் நிலைகளில் மாற்றம் வரும். இது வேண்டும்.

தொழில் இல்லையென்றால்,
இந்த உடலின் நிலைகள் வளராது.

இந்த உடல் இல்லையென்றால்,
ஞானமும் பெற முடியாது.

ஆகவே, இதைப்போன்று நாளை நாம் இருப்பதற்கு, அது வேண்டும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ஈசனை மதித்து நடக்க வேண்டும். 

உங்களால் நிச்சயம் இது முடியும். எமது அருளாசிகள்