ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2024

நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக அருள் மகரிஷிகளாக உருவாகுங்கள்

நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக அருள் மகரிஷிகளாக உருவாகுங்கள்

 

நமது வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற நிலைகள் படுவோரைப் பார்த்து நம் நல்ல குணங்கள் கொண்டு அவர்களுக்கு உதவி செய்தாலும் நம் நல்ல குணங்களை அந்த விஷம் என்ற குணங்கள் திரை மறைவாக்கி விடுகின்றது. பின் வேதனை என்ற உணர்வு தான் நமக்குள் வருகின்றது

உதாரணமாக நல்ல பலகாரத்தைச் செய்து வைத்திருக்கின்றோம் என்றால்
1.அதன் மேலே மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டால் அந்த வாசனை தான் வரும்.
2.அதிலே விஷத்தைத் தூவி விட்டால் அது தான் இயக்கம் ஆகும்.
3.ஆனால் பலகாரத்தின் மீது நல்ல நறுமணங்களைப் போட்டால் நறுமணத்தின் தன்மை தான் வரும்

ஆனால் சுவைக்கும் போது தான் வித்தியாசங்கள் தெரிய வரும்.

அதைப் போன்று தான் மேலெழும் மணங்கள் நம் உடலின் அணுக்களில் படும் பொழுது
1.அந்த மேலெழுந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது
2.அது சிறு திரையாக மறைத்து நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் இயங்காதபடி தடைப்படுத்தி விடுகின்றது.

இதைத்தான் சித்திரை என்று சொல்வது.

சந்தர்ப்பத்தால் இப்படி மூடி மறைக்கும் அத்தகைய சிறு திரைகளை நீக்கி
1.நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் தூய்மையாக்கிப் பொருளை அறியும் ஞானங்கள் பெற்று
2,எல்லாவற்றையும் அறிந்திடும் அறிவின் ஒளியாக நாம் மாற்ற வேண்டும்.

நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பேரின்பமும்… பெரு வாழ்வு பெறும் அழியா ஒளிச் சரீரத்தை உருவாக்கும் நிலையாக… ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் ஆற்றலைப் பெற்று
1.நமக்குள் தீய குணங்கள் தூண்டப்படும் போது நல்ல குணங்களை மறைக்கச் செய்யும் அந்தச் சிறு திரைகளை நீக்கி
2.அருள் மகரிஷிகளின் துணை கொண்டு அருள் ஒளிச் சுடராகப் பெருக்கி
3.என்றும் பேரின்பப் பெருவாழ்வு பெறும் அந்தத் தகுதியை நாம் பெறுவோம்.

அதற்காக வேண்டி… ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் அருள் சக்திகளைப் பெருக்கி
1.ஒவ்வொருவரும் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக மாறுதல் வேண்டும்.
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை உருவாக்கும் ரிஷிகளாக மாற வேண்டும்.
3.நமது குருநாதர் அனைத்து அண்டங்களையும் அறியும் தகுதிகளை நமக்கு ஏற்படுத்துகின்றார்.
4.அவர் காட்டும் வழியில் அதனை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

ஆகவே… பிறவியில்லா நிலைபெறும் எல்லையைக் குறியாக வைத்து இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதை அகற்றிவிட்டு அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கிப் பேரின்பம் பெறும் அருள் ஞானிகளாக வளருங்கள் வாழுங்கள்.

உங்களுடைய பார்வையில் பிறருடைய தீமைகளை அகற்றும் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்
1.உங்கள் பார்வையில் தீமை உங்களை நாடாது அருள் பாதுகாப்பு என்ற உணர்வின் வலிமையைப் பெறுங்கள்.
2.வலிமை பெற்ற அருள் ஞானிகள் உணர்வை உங்கள் உடலுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அருள் வழி வாழ்வோம்… மெய் வழி வாழ்வோம்… மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் வாழ்வோம்.