ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 8, 2024

கல்கியுகம் பிறந்து விட்டது

கல்கியுகம் பிறந்து விட்டது

 

அனுதினமும் மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்து அந்த உணர்வின் துணையால் கருவில் வளரும் சிசுக்களை ஞானக் குழந்தைகளை வளர்த்திட வேண்டும்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்வோர் குடும்பங்களில் கருவில் உருவாகும் குழந்தைகள் அவர்களுக்கு
1.ஒவ்வொரு நொடியிலும் அந்த அருள் ஞானத்தை நாம் கிடைக்கச் செய்ய வேண்டும்
2.உலக ஞானம் பெற வேண்டும் என்று ஏங்குதல் வேண்டும்

அந்த அறிவின் ஞானத்தை ஊட்டி “உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வளர வேண்டும்” என்று குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொழுதும்… பால் ஊட்டும் பொழுதும்… தாலாட்டும் பொழுதும்… இதை நாம் செய்து பழக வேண்டும்.

செய்தால்
1.இதன் தொடர் வரிசையில் எதிர்காலச் சந்ததியினர் இந்த வழியிலே வளர்ந்து
2.இந்த நாட்டை உலகத்தைக் காக்கும் சக்திகளாக வருவார்கள்.

இன்று உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பரவிக் கொண்டிருந்தாலும் உலகை மீட்டிடும் அந்தத் தகுதி “தென்னாட்டில் தோன்றியவர்களுக்குத் தான் வரும்…”

உலகப் பேரழிவின் தன்மையை… விஷத்தன்மையால் மடிந்து கொண்டிருக்கும் இந்த நிலைகளை மாற்றிட இது உதவும்.

மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற உணர்வுகள் உருவாகி மனிதனுக்கு மனிதனே கொன்று புசிக்கும் நிலைகளே வருகின்றது. அதை ரசித்துப் பார்க்கும் நிலைகள் வருகின்றது ஏனைய நாடுகளில்…!

நம் நாட்டில் அவ்வாறு இல்லை… இப்போது தான் தலை காட்டுகின்றது. உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மீது குண்டுகளை வீசுவதும் மற்றவர்களை மடியச் செய்வதும் அதைக் கண்டு ரசிப்பதும் இதைப் போன்ற நிலைகள் வருகின்றது.

மற்ற நாடுகளில் துரித நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது நீர் நிலைகளையும் காற்று மண்டலத்தையும் விஷத்தன்மைகளை பரவச் செய்து மக்களை மடியச் செய்து அதைக் கண்டு ரசித்து அதை சுவாசித்துக் கொண்டிருக்கும் நிலையே உள்ளது… அத்தகைய அசுர உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
1.ஆனால் தென்னாட்டில் தோன்றிய “அகஸ்தியன் உணர்வால்” அந்தப் பிழைகள் இங்கே வராது தடுத்து நிற்கின்றது.
2.அவருடைய உணர்வே தான் இங்கே பேசுகின்றது… உபதேசம் கொடுக்கின்றது
3.நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
4.ஏனென்றால் எனக்கு அந்தப் பேசும் தகுதியோ அந்த உணர்வைக் கவரும் தகுதியோ பெற்றவன் அல்ல நான்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அத்தகைய உணர்வின் தன்மை… உலகை மீட்ட…
2.அந்த உணர்வுகளே இயங்குகிறது… அதுவே இயக்கிக் கொண்டுள்ளது.
3.அந்த உணர்வலைகளே பரவிக் கொண்டுள்ளது.

உங்களுடைய நிலைகளுக்கு எண்ணும்பொழுது எனக்கும் லாபம் கிடைக்கின்றது நீங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்து மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை விளையச் செய்யும் போது அந்த உணர்வின் தன்மையால் அந்தப் பேரானந்த உணர்வு இந்தக் காற்று மண்டலத்தில் நானும் சுவாசிக்க நேருகின்றது.

நீங்கள் வளர நான் வளர முடியும்…!

ஆனால் “நான் வளர” நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணினால் உங்களை எல்லாம் நான் அடிமையாக்கத் தான் முடியும். ஆகவே நான் வளர்வதற்காக உங்களை அடிமை ஆக்குவது இல்லை.

குருநாதர் காட்டிய வழியில் நீங்கள் வளர வேண்டும்…!
1.நீங்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று உணர்வினை நான் பெற்று வளர்த்தேன் என்றால்
2.நீங்கள் உயரும் போது அதைக் கண்டு நான் ஆனந்தப்படுகின்றேன்
3.உங்களில் விளைந்த அந்த உணர்வின் சத்து எனக்குள் அதை உயர்ந்ததாக மாற்றும்.

இங்கு விளைந்த (அகஸ்தியர்) வித்து ஒன்றுதான். ஆனால் அது உங்களுக்குள் அது விளைந்து பல பல வித்துக்களாக வளருகின்றது... தீமைகளை அகற்றும் சக்தியாக மாறுகின்றது.
1.அதைக் கண்டு நான் பேரானந்தப் பெரு மகிழ்ச்சி நான் பெறுகின்றேன்
2.அப்பொழுதுதான் பேரின்ப்ப் பெருவாழ்வை எனக்குள் அதை வளர்க்க முடியும்.

ஆகவே நீங்கள் வளர வேண்டும் அதைக் கண்டு நான் மகிழ வேண்டும் இதைப் போல் நீங்கள் ஒவ்வொருவரும்
1.நீங்கள் பார்ப்பவர் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் நிலையில் வளர வேண்டும் என்று இதை எண்ணினால் நீங்களும் வளர்கின்றீர்கள்.
4.இதனுடைய வரிசைச் தொடர் இவ்வாறு வந்தால் தான் நாம் இங்கே வாழ முடியும் வளர முடியும்.

இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையிலிருந்து மீளவும் முடியும்.