ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2024

கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்பு

கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்பு

 

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளைக் கவர்ந்து துகள்களாக மாற்றுகின்றது. அவை அனைத்தும் அடுக்கு வரிசையில் இருக்கும் ஒன்று மேலே ஒன்று கீழே என்ற நிலையில் 27 நட்சத்திரங்களும் 27 விதமான பாதைகளில் சுழன்று வருகின்றது.

அதிலே முன்னணியில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் பிற மண்டலங்களில் இருந்து தனக்குள் எடுக்கும் அந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து அலைகளாக மாற்றினாலும் அது தனது பால்வெளி மண்டலங்களாக அதை மாற்றுகின்றது.

1.ஒரு இருண்ட பொருளுக்குள் பல பேட்டரியைச் (CELLS) சேர்த்து எர்த்தை (EARTH) வைக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை அதிலே எப்படி வருகின்றதோ
2.இதைப் போன்று கார்த்திகை நட்சத்திரத்தில் விளையும் உணர்வுகள் மற்ற கோள்களின் நிலையில் சேர்க்கப்படும் பொழுது
3.அது ஒவ்வொன்றிலும் ஒளி அலைகளாக மின்னும் நிலைகளுக்கு மாற்றுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்…!

நான் (ஞானகுரு) கல்வி அறிவில்லாதவன் தான். இருந்தாலும் குருநாதர் காட்டிய வழியில் அதை நான் கண்டுணர்ந்து
1.அதனுடைய செயலாக்கங்களைக் காணும் பொழுது விஞ்ஞான அறிவிற்கும் இதற்கும் வித்தியாசம் ஏராளம் உண்டு.
2.அந்த உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது எதிர்காலத்தில் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் அது வளர்ந்து
3.27 நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களையும் நீங்கள் காணலாம்
4.அதன் உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களிலும் தெளிந்திடும் நிலையாக
5.நற்சக்திகளாக மாற்றிடும் தன்மையும் ஏற்படும்.

அதனைப் பெறச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது. இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள்

ஆனால் இனத்திற்குள்ளும் ஒன்றுக்கொன்று இரைக்காக மோதுவதும் உண்டு. தன் இனத்தை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு.

மகா ஞானிகள் இத்தகைய (27) நட்சத்திரங்களின் ஆற்றலை ஒவ்வொரு அணுக்களிலும் செலுத்தப்பட்டுச் செருகேற்றி… உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்துக் கொண்டனர்.

1.அப்படி அந்த விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதன் அகஸ்தியன்
2.தன் உணர்வுகளை எல்லாம் ஒளியின் சுடராக மாற்றினான்
3.அவனில் விளைந்த உணர்வலைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது… நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சுழலச் செய்கின்றது. அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.

அதே போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும் பொழுது… சூரியன் தனக்குள் அதைக் கவர்ந்து உணவாக உட்கொண்டு அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு இதைக் கேட்கப்படும் பொழுது சில வித்தியாசங்கள் ஏற்படலாம்
1.இதெல்லாம் நமக்கு எதற்கு…? விடிந்தால் சாப்பாடு கிடைத்தால் போதும்
2.குருடனுக்குத் தேவை கண் தானே…! நாளைக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ…?
3.சாமி ஆசீர்வாதம் இருந்தால் போதும்
4.தொழிலிலே பணம் சம்பாதித்தால் போதும்… அது நல்ல முறையில் நடந்தால் போதும்
5.எங்கள் நோய் நீங்கினால் போதும்…! என்ற இந்த உணர்வில் தான் இருக்கின்றார்கள்.

ஆஅனால் இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலில் சேர்க்கப்பட்டு வேதனையை உருவாக்கி நல்லவைகளை எண்ண விடாதபடி தடுத்துக் கொண்டுள்ளது.

அதை மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அதிகமாகிவிடும்… ஆரம்ப நிலைகளுக்கே உயிர் இந்த மனித உடலை மாற்றிவிடும். விஷ அணுக்களாக மாற்றிப் புழுவாக… பூச்சியாக… பாம்பாகத்தான் பிறக்க வேண்டி வரும்

காரணம்… இயற்கையின் மாற்றங்கள் எதனின் கலவை எதிலே ஆகின்றதோ அதற்குத் தக்க தான் உருக்கள் மாறுகின்றது.

குருநாதர் வான இயல் தத்துவத்தை என்னை அறியும்படி செய்வதற்காக
1.எத்தனையோ காடு மேடெல்லாம் அலையும்படி செய்தார்… அனுபவபூர்வமாகத் தெரியும்படி செய்தார்.
2.கடும் வேதனைகளால் அவதிப்படும் போது அதிலிருந்து மீள குருவை நான் நினைப்பேன்
3.அதே சமயத்தில் குருவை நினைத்து “என்னை இப்படி எல்லாம் அழைத்துச் செல்கின்றாரே…” என்று வேதனையும் படுவேன்.

ஏனென்றால் ஒரு சில தாவர இனங்களில் விஷத்தன்மை கொண்ட இலைகள் உண்டு. அது மேலே பட்டபின் உடல் சோர்வடையும் மயக்கமும் வரும்.

1.மலைப்பாதைகளிலே செல்லும் பொழுது உடல் சோர்வடைவது மட்டுமல்லாதபடி
2.இந்தத் தாவர இனங்களின் மூச்சலைகளும் அதை உணவாக உட்கொண்ட நஞ்சு கொண்ட உயிரினங்கள் அங்கே பரவி இருப்பதும்
3.அவைகள் மேலே பட்டால் அரிப்பு எடுப்பதும்
4.நான் இதைப் பார்ப்பதா…? அல்லது சோர்வைப் பார்ப்பதா…? என்று எத்தனையோ நிலைகள் இப்படி வருகின்றது.

இத்தனையும் எனக்குள் குருநாதர் உருவாக்கினார். இதிலிருந்தெல்லாம் எவ்வாறு நீ மீள வேண்டும் என்ற வினாவையும் எழுப்புகின்றார்.

நான் அதிலே மீண்டிடும் நிலையாக
1.ஞானிகள் இது போன்ற தீமையிலிருந்து எப்படி விடுபட்டார்கள் என்பதை உணர்த்தி
2.அந்தச் சக்திகளைப் பெறும்படி செய்தார்…. அதை எடுத்து எடுத்து மாற்றிக் கொண்டேன்.

அதையே தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.

காட்டில் நான் சிரமப்பட்டுப் பெற்றதை… நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த இடத்திலிருந்தே “சிரமங்கள் வரும் போதெல்லாம்… அந்தச் சக்திகளைப் பெற முடியும்…” என்று உறுதியாகச் சொல்கிறோம் (ஞானகுரு).