ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2024

நம் பிரபஞ்சத்திலேயே… நம் சூரியக் குடும்பத்திலேயே… விண் சென்ற முதல் மனிதன் துருவ நட்சத்திரமானான்

நம் பிரபஞ்சத்திலேயே… நம் சூரியக் குடும்பத்திலேயே… விண் சென்ற முதல் மனிதன் துருவ நட்சத்திரமானான்

 

பிரபஞ்சத்தில் உருவாகும் உணர்வின் தன்மையை முதல் மனிதன் அகஸ்தியன்
1.அவனுடைய சந்தர்ப்பம் தன் உடலிலே அது பெருகச் செய்தான்
2.அவனுக்குள் விளைந்த உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து நம் பூமியில் பரவச் செய்து கொண்டுள்ளது.

அதையெல்லாம் நீங்கள் பருகுவதற்குத் தான் “அடிக்கடி அடிக்கடி” அதை ஞாபகப்படுத்துவது.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த உணர்வினை நீங்கள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களும்… அதனின் இயக்கத் தொடர்களில்
1.ஒவ்வொரு நட்சத்திரத்தின் எதிர்மறையான… அதாவது…
2.இரண்டு இரண்டு நட்சத்திரங்கள் (+/-) நெகட்டிவ் பாசிட்டிவ்…
3.ஒன்று வலிமையானது ஒன்று வலிமை இழந்தது…
4.இந்த உணர்வின் தன்மை மோதல் வரும் பொழுது தான்… ”வெல்டிங்”
5.மின்னல் போன்று தன்மை வரப்படும் பொழுது உயிரணுவாகத் தோன்றுகின்றது.

இந்த உணர்வின் இயக்கத்தில்… உயிரணுவின் நட்சத்திர இயக்க ஓட்டத்தை… அதிலே எதனின் வலிமை இருக்கின்றதோ அதைப் போன்று
1.“இந்த 27 நட்சத்திரங்களின் சக்தியை பெற வேண்டும்” என்று
2.அன்று துருவன் நுகர்ந்து கொண்டான்.

ஏனென்றால் பல நட்சத்திரங்கள் இருப்பினும் ஒவ்வொன்றிலும் 27 நட்சத்திரங்களில் “ஒன்று முன்னணியில் இருந்து” மற்றதை அது அடக்கும்.

ஆனாலும் மனித உடல் அல்லாது மற்ற உயிரினங்களில் இந்த நட்சத்திரங்கள் பொருந்தி வராது. காரணம்… நஞ்சு கொண்ட உணர்வின் எதிர் நிலைகள் வருவதனால்…! ஆனால் மனிதனுக்குள்ளோ
1.நட்சத்திர அணுக்களின் தன்மையைத் தனக்குள் சமப்படுத்தி
2.தான் ஒளியின் சுடராக மாற்றும் அறிவின் தன்மை பெற்றது.

ஆகவே அவ்வகையில் ஒவ்வொரு மனித உயிரான்மாவிலும் அந்த நட்சத்திர இயக்கத்தின் தன்மை கொண்டு
1.27 நட்சத்திரங்களின் சக்தியையும் கவர்ந்து மற்ற உணர்வுடன் கலந்து
2.அந்த உணர்வின் தசைகளாக நவக்கோள்கள் என்று நம் உடலின் தன்மையும்
3.அதே சமயத்தில் சப்தரிஷி மண்டலம் - மனித உடல் பெற்ற பின் இந்த உணர்வின் ஒளியாக - ஆறாவது அறிவாக நமக்குள் மண்டலங்களாக அமைத்து
4.ஆறாவது அறிவின் தன்மையைத் தனக்குள் அந்தச் சப்தரிஷி மண்டல உணர்வின் தன்மையை வளர்க்க வேண்டும்… வளர்க்க முடியும்.
(சப்தரிஷி மண்டலம் என்பது நமக்குள் இருக்கும் அனைத்து அணுக்களின் தன்மையும் மண்டலங்களாக அமைகின்றது).

மனிதனின் ஆறாவது அறிவை… சப்தரிஷிகள்… ஏழாவது ஒளியாகப் பெற்றதை நாம் கவர்ந்து
1.நமக்குள் இருக்கும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலிமை பெறச் செய்வதற்கும்
2.இவை அனைத்திற்கும் மூலமாக இருந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியின் தன்மையைப் பெறுவதற்கும்
3.இப்படி “நான்கு ஐந்து கட்டங்களில்” இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் அணுக்களாகப் படரச் செய்து கொண்டுள்ளது.
4.இவை அனைத்தும் ஒருக்கிணைந்து எடுக்கப்படும் போது உங்களுக்குள் அனைத்தையும் சமப்படுத்தும் நிலை பெற்றது.

துருவ மகரிஷி அந்த 27 நட்சத்திரங்களின் சக்திகளையும்… நவக்கோள்கள் உமிழ்த்தும் சக்திகளையும்… தனக்குள் கவர்ந்து ஆதியிலே அதனின் உணர்வை விளைய வைத்தவர்.

ஆனால் அவை அனைத்தும் விளைந்து வந்ததைச் சூரியன் தனக்குள் படைத்து ஒளிக் கதிர்களாகப் பரப்புவதை (பாதரசம் – வெயில்)
1.துருவன் கண் கொண்டு நேரடியாக உற்றுப் பார்த்து
2.அந்த ஒளிக் கதிரின் அணுக்களை தன் உயிருடன் ஒன்றிய ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டவன் - முதல் மனிதன் அவன்.

1.வானஇயலில் தோன்றிய சக்திகள் புவிஇயலுக்குள் வந்து
2.உயிரியல் மாற்றங்களாகி மனிதனாக வளர்ச்சி ஆகி
3.புவியின் மாற்றத்திலிருந்து விடுபட்டு மீண்டும் வானியில் உணர்வுகளைத் தனக்குள் நுகர்ந்து
4.ஒளியின் சுடராக இன்றும் சுழன்று கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளான்
5.நம் பிரபஞ்சத்திலேயே… நம் சூரியக் குடும்பத்திலேயே… முதல் மனிதன் துருவன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.

அதனின்றி வெளி வரும் உணர்வினை நாம் பெற்றோமென்றால் அவனைப் போன்றே ஒளியின் தன்மையைப் பெற முடியும். அவன் சென்ற எல்லையை நாமும் அடைய முடியும்.

அதற்கே குரு வழியில் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).