ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2024

நம் உயிர் “தாயாக” இருக்கின்றது

நம் உயிர் “தாயாக” இருக்கின்றது

 

சந்தர்ப்பத்தில்… ஒருவர் கோபிக்கும் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி விட்டால்… உயிரியலின் மாற்றங்களில் அதை ஜீவ அணுவாக நம் உயிர் உடலுக்குள் மாற்றிவிடுகின்றது.

அதாவது…
1.எதனின் நினைவை எடுத்து உயிர் நமக்குள் அதை அணுவாக ஆக்கியதோ
2.எந்த நிலைகள் கொண்டு அந்த மனிதனின் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவந்து வைத்திருக்கின்றதோ
3.அதை உயிர்… அதனின் துடிப்பின் ஈர்ப்பு கொண்டு அந்த உணர்வைக் கிளர்ந்து எடுக்கப்படும் பொழுது
4.நுகர்ந்து தன் ஆன்மாவாக மாற்றி உயிரிலே படும் பொழுது மீண்டும் அந்த நினைவாற்றல் வரும்.

ஆக… கோபம் கொண்ட அணுவின் தன்மையாக நமக்குள் விளைந்திருந்தால்… அதற்கு இரை வேண்டும் போது அது கத்தும்… அதனின் உணர்ச்சியைத் தூண்டும்.

உதாரணமாக… காக்கைகளோ குருவிகளோ கொக்கோ… தன் குஞ்சுகளுக்கு அது இரை தேடிக் கொண்டு வந்து கொடுக்கின்றது. குஞ்சுகள் கத்தும் பொழுது மீனையோ வீட்டில் பூச்சிகளையோ மற்ற பூச்சிகளையோ உணவாகக் கொடுக்கின்றது.

இதைப் போன்று தான் எந்த குணத்தின் தன்மை நாம் நுகர்ந்தோமோ நமது உயிர் அந்த குணத்தின் உணர்வின் அணுவாக விளையச் செய்து விடுகின்றது.
1.அந்த அணுக்கள் தன் பசிக்காக ஏங்கும்போது அதை உருவாக்கிய தாயான உயிர்
2.அதற்கு வேண்டிய நிலைகளை நுகர்கின்றது… ஆன்மாவாக மாறுகின்றது… சுவாசித்த பின் நமக்குள் எண்ணம் ஆகின்றது
3.அந்த மனிதன் கோபித்திருந்தால் நமக்கும் அப்பொழுது கோபம் வரும்… அறியாமலே திடீரென்று கோபம் வரும்.

என்னவென்றே தெரியவில்லை திடீரென்று எனக்குக் கோபம் வந்துவிட்டது என்று சிலர் சொல்வார்கள்.

ஏனென்றால் அந்தக் கார உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டால் அது பசிக்கு ஏங்கினால் போதும்.
1.உயிருடைய வேலை… எந்த மனித உடலிலிருந்து அந்தக் கார உணர்வு வந்ததோ
2.அதை எடுத்து ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கச் செய்து விளைந்த அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கும்.

அத்தகைய கோபம் வந்த பின்… வீட்டிலே மனைவியை அடித்து விடுவார், தன் நண்பனைப் பகைமை ஆக்கி விடுவார்… கடை வியாபாரம் இருந்தால் வியாபாரத்தில் வரும் வாடிக்கையாளரிடம் எதிர்த்துப் பேசி சண்டை வரும்.. சர் தான் போயா…! என்பார்.

அறியாமலே இத்தகைய செயல்கள் நடக்கும்…!

ஏனென்றால் உருவான அணுக்கள் அது தன் இனத்தின் தன்மையைப் பெருக்க… அதற்கு உயிர் இப்படி இரைகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும்

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி அடிக்கடி மகரிஷிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து
1.ஒளியான அணுக்களைத் தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சக்தி மூலமாகவும் உங்களுக்குள் பெருக்கும்படி செய்கிறோம்.
2.அதாவது தீமையின் விளைவுளை மாற்றி அமைக்கும் பயிற்சியாக உங்களுக்கு இதைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே மகரிஷிகள் அருள் சக்திகளை அவ்வப்போது எடுத்து உங்களுக்குள் வலுவாகச் சேர்த்துக் கொண்டே வாருங்கள். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றுங்கள்.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடையுங்கள் (ஞானகுரு).