
நஞ்சை ஒளியாக மாற்றுவது தான் நமது தியானத்தின் நோக்கம்
1.நல்லதைக் காக்க நமக்கு அந்தத் திறன் வேண்டும்…
2.அந்தத் திறனை இழந்து விட்டால் நல்லதைத் தீமை
மறைத்து விடுகின்றது.
ஒரு மரம் வளர்வதற்கு எத்தனையோ வருடங்கள் ஆகிறது. ஆனால் மரத்தை உடனடியாக நாம் வீழ்த்த
முடிகின்றது. இதே போல மனித உடலைப் பல வருட காலம் நாம்
வளர்த்து வந்திருந்தாலும் “இனி என்ன வாழ்க்கை…?” என்று வெறுப்பாகும் பொழுது தற்கொலை செய்து… தன்
உடலையும் ஒரு சிலர் அழித்து விடுகின்றார்கள்.
எத்தனையோ ஆசாபாசங்கள் கொண்டு இவ்வளவு காலம் வாழ்ந்து
வந்திருக்கின்றோம். ஆனாலும்…
1.இந்த விஷத்தின் துடிப்பு ஒரு நொடிக்குள்
இயக்கி விடுகின்றது.
2.அத்தகைய விஷத்தை வென்றவர்கள் தான் மெய் ஞானிகள்
3.அது அனைத்தையும் வென்று அந்த விஷத்தின் ஆற்றலைத்
தனக்குள் அடிமைப்படுத்தி
4.அதையே தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள்
மகரிஷிகள்,
வைரம் தன்னிச்சையாக ஒளி கொடுக்கிறது என்றால் அந்த விஷத்தைத்
தன்னுள் அடக்கி விஷத்தின் ஆற்றல் மிக்க நிலையைத் தன்னிச்சையாக ஒளிச் சுடராகக்
காட்டுகிறது.
1.அதை ஒளியாக… இனிமையாக… நம் கண்ணிலே குளிர்ச்சியாக… காண முடிகின்றது.
2.அந்த விஷங்கள் அனைத்தும் ஒடுங்கி அந்த இயக்கச்
சக்தியே ஒளியாக மாறுகின்றது.
ஆனால் வைரத்தைத் தட்டி விழுங்கினாலோ அது நம்மை மாய்த்து விடும்.
இதைப் போன்று
1.விஷத்தினைத் தனக்குள் எடுத்து இனிமை கலந்த செயலாக
இயக்கவல்ல ஆற்றல்மிக்க… வலிமை மிக்க அந்த எண்ண ஒளிகள்
2.மகரிஷிகள் உடலில் விளைய வைத்த அந்த உணர்வின் எண்ண
அலைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.
3.அதைக் கவர்வதற்குத் தான் தியானப் பயிற்சியைக்
கொடுக்கின்றோம்.
ஒரு குழம்பு வைக்கும் பொழுது காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு
அனைத்தும் கலந்து அதைச் சுவை மிக்கதாகச் சமைக்கின்றோம்.
இதைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ந்து
நெகிழ்ந்து சலித்து… வெறுப்பு விருப்பு
வேதனை இது போன்ற எத்தனையோ எண்ணங்களுடன் நாம் இங்கே கூடி உள்ளோம்.
குரு காட்டிய அருள் வழிப்படி மெய் ஒளியைக் காண வேண்டும் அந்த
மெய் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகளைத் தூண்டும் படிச் செய்கிறோம்.
அப்போது உங்கள் எண்ணங்கள் ஒருமித்த நிலைகள் கொண்டு ஏக்க உணர்வுடன் விண்ணை நோக்கி ஏகி அந்த மெய் ஞானிகளுடைய
அருள் பெற வேண்டும் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து தியானிக்கிறோம்.
1.இங்கு வந்திருப்போர் அனைவரும் தியானத்தில்
இருப்பவர் அனைவரும் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஒருங்கிணைந்த எண்ணங்களுடன் நாம் படரச்
செய்யும் பொழுது
3.இங்கு வந்திருந்தோர் துன்ப நிலைகள் கொண்டு
வந்திருந்தாலும் அனைவரும் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் ஒன்று சேர்ந்து
4.எந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்று ஏங்கி
வந்தோமோ இந்த உணர்வின் அலைகள்
5.அந்த ஒளி அலைகளுடன் ஈர்க்கப்பட்டு “அந்தச் சுவாசம் உங்கள் உயிரிலே சுழன்று கொண்டிருப்பதைக் காணலாம்…”
மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா
என்று ஏங்கி இந்த மூச்சலைகளை வெளிவிடும் பொழுது உங்களுக்குள் உயர்ந்த “உமிழ் நீராகச் சுரந்து இருப்பதையும்” காணலாம்.
இப்பேற்பட்ட “அமுத
சுரபிகள்” நமக்குள் சேர்ந்து அந்த ஞானிகள் அருள் வித்தைச்
சீராக வளர்க்கச் செய்யும்.
அப்போது நம்மை அறியாது சேர்ந்த வேதனையை உருவாக்கும்… நோய்களை உருவாக்கும்…
நம் சொல்லின் இனிமையைக் கெடுக்கும் உணர்வுகள் தணிந்து
1.வைரம் எப்படி உணர்வின் தன்மையை ஒளியாக
மாற்றுகின்றதோ அதைப் போன்ற நிலைகளை நாமும் பெற முடியும்.
2.நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் இதைப்
பெற முடியும்
குழம்பை நாம் சுவைமிக்கதாக உருவாக்குவது போன்று குருநாதர்
காட்டிய அருள் வழிப்படி இந்தத் தியானத்தின் மூலம் மெய் ஒளியை அனைவரது
உள்ளங்களிலும் படரச் செய்கின்றோம்.
1.ஒவ்வொருவரும் கோபமோ வெறுப்போ வேதனையோ சலிப்போ
சங்கடமோ எத்தனையோ மாறுபட்ட நிலைகள் கொண்டிருந்தாலும்
2.அதைச் சமமாகச் சமைக்கும் நிலைகள் கொண்டு சுவைபடும்
சக்தியாக உருவாக்கி
3.அதைத் தெளிந்த நிலையில் உருப் பெறச் செய்யும்
சக்தியாக
4.அந்த அருள் ஞானிகள் வித்தாக உருவாக்கச்
செய்வதுதான் எமது உபதேசத்தின் நோக்கம்.