ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 1, 2024

நல் மணத்தை நான் தந்தேன்… உன் மனதை நல் மனதாக ஆக்கிக்கொள்

நல் மணத்தை நான் தந்தேன்… உன் மனதை நல் மனதாக ஆக்கிக்கொள்

 

நல் மணம் எல்லாம் எங்கு செல்கின்றது என்று எண்ணுகின்றாய்…? இயற்கை தந்த மணம் எல்லாம் நல் மனம் தான்.
1.இயற்கையின் மணத்தை எல்லாம் மனிதர்களாகிய நீங்கள் எடுத்துச் சமைத்து
2.நல் மணமான இயற்கை மணத்தைச் சமைத்தவுடன் உடனே எனக்கு அச்சுவை வந்து பின்பு நீ சுவைக்கின்றாய்.

நீ சுவைத்தவுடன் அதன் நிலையைப் பார்த்தாயா…?

கழிவு நிலை எல்லாமே மனிதனிடமிருந்து தான் வந்ததப்பா ஒரு நிமிடம் எண்ணிப்பார்… நாற்றம் என்பது என்னவென்று புரிந்துவிடும்…!

இயற்கை தந்த வரம் எல்லாம் இன்பமயமான மணம் தான் இயற்கையுடன் ஒன்றிப் பார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மணம் இருக்கும். கெட்ட மணம் என்பதெல்லாம் இந்தக் கெட்ட உடலிலிருந்து தான் வருகின்றது.

அசுத்தம் அசுத்தம் என்கின்றாய்…! அசுத்தம் எல்லாம் மனிதனிடம் தான் மனிதனிடம் தான் அசுத்தமா…? மிருகத்திடம் இல்லையா…? என்று நீ நினைக்கின்றாய்…! மனிதரிடம் இருந்துதான் மிருகத்திடம் வந்ததப்பா.

1.நான் தந்த இயற்கையில் இருந்து மனிதன் பிறந்தான்
2.மனிதனின் பாவ புண்ணியத்திலிருந்து மிருகம் எல்லாம் வந்ததப்பா.
3.மிருகத்திலிருந்து தான் பறவை எல்லாம் வந்ததப்பா
4.பறக்கும் பறவையிலிருந்துதான் ஊரும் ஊர்வனை எல்லாம் வந்ததப்பா
5.ஊரும் ஊர்வன எல்லாம் அன்ன ஆயிற்று…? என்று கேட்பாய்…?
6.ஊரும் ஊர்வன தான் பிறகு மனிதனாகவும் வருகிறது.

இம்மனிதனின் நிலையில் எப்படி எப்படி மாறுகின்றது என்று இப்போது புரிந்ததா…?

உலகம் மட்டும் உருள்வதில்லை மனிதன் நிலையும் உருள்கின்றது சொல்லும் விளக்கம் புரிந்ததா…?
1.உருளும் மனிதனாகப் பிறந்து விட்டாய்.
2.உருளும் தன்மை உனக்கு வேண்டாம்.

ஒரு நிலையான நிலை நீ இருக்க உன் தியானத்தைக் கூட்டிக் கொள் என்னும் பொருளும் இது தானே.

பெரும் தாதுப் பொருள் என்கின்றோம். அதன் தகதகக்கும் நிலை எல்லாம் எங்கிருக்கிறது என்கின்றாயா…?

உருளும் உலகத்தில் உள்ளே தான் பெரும் தாதுப்பொருளும் உள்ளது. அப்பொருளின் நிலைகளை எல்லாம் எண்ணிப்பார். எப்படி அதன் நிலை வந்தது…?

உலகம் உருளும் தன்மையிலே காற்றும் மழையும் பட்ட பின் சில நிலையில் நிலைத்திருக்கும் நல்லோரின் நினைவிலே அது உருவாகிறதப்பா…!

நல்லவரின் நிலை என்பது நான் சொல்லும் சுவாச நிலை…! அத்தன்மை பாய்ந்தவுடன் இப் பூமி இழுக்கிறது. தண்ணீருடனும் காற்றுடனும் நல்லோரின் சுவாச நிலைத் தாதுப் பொருள் எல்லாமே அவ்விடத்திற்கு உகந்தபடி தான் இழுக்கும்.

அவ்விடம் எப்படி வந்தது தெரிகின்றதா…? நீ விடும் மூச்செல்லாம் காற்றுடன் கலந்தவுடன் மூச்சு மட்டுமல்ல எல்லா ஓசைகளும் கலந்து தான் வருகிறது.

நீ சொல்லும் பூமித்தாய் என்பவள் யாரப்பா…? பூமித்தாயை நீ சொல்லும் வழியிலேயே நானும் சொல்கின்றேன் பூமித் தாய் எல்லாத் தன்மையும் தன்னுள்ளே அடக்கிடுவாள். அடக்கிவிட்டு அவள் தரும் நிலைகள்தான் இவை எல்லாம்.
1.வெறும் மண் என்று நீ நினைக்கின்றாய்
2.இம்மண் தான் இவ்வுலகத்தின் முதல் நிலையே.

முதல் நிலையின் தன்மையைத்தான் முதலிலேயே சொல்லிவிட்டேன். நீ விடும் மூச்சும் உலகத்தின் ஒலியைப் பற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன். மூச்சில் இருந்து தான் ஒலியும் பிறக்கின்றது. ஒலியின் தன்மையும் ஒளியாகி அவ்வொலி தரும் மழையிலே இப் பூமித்தாய் ஈர்க்கின்றாள்.

அவள் தரும் இயற்கையிலே மணம் எல்லாம் இருக்கின்றது. முதன் முதலில் மணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன்… அம்மணம் எங்கிருந்து வருகின்றது என்பது புரிகின்றதா…?

எல்லாமே சுழற்சி தான்… சுழலின் தன்மையை பார்த்தாயா…! இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா…?

சுழலும் தன்மையைப் புரிந்து கொண்டாயா…! சுழலுடன் சுழலாகக் கலந்து விட்டால் “கலந்தது” உனக்குத் தெரியாது.
1.இக்கலக்கங்களிலிருந்து மீள்வதற்கு ஒரே நிலை “தியான நிலை தான்…”
2.தியான நிலை பெற்றுவிட்டால் பெரும் சூட்சம உலகம் என்னும் சுழற்சியில் சிக்கி விடலாம்
3.சூட்சம உலகில் சிக்கிவிட்டால் பெரும் சூட்சுமம் எல்லாம் கண்டிடுவாய்.
4.ஈரேழு லோகம் என்பதைக் கண்டிடுவாய்… ஈன்றவன் யார் என்று கண்டிடுவாய்.

அவ்வுலகத்திற்குச் சென்றுவிட்டால் இவ்வுலகத்தின் நிலையைப் பார்த்திடுவாய் இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் உனதாக்கு. இப்பொழுது புரிகிறதா… தியான நிலையின் அவசியம் எல்லாம்…!

இச்சுழற்சி உனக்கு வேண்டுமா…? அல்லது அச்சுழற்சியில் சுழன்று விடுகின்றாயா…?

1.இருக்கும் நிலையை விட்டு ஏன் குருநாதர் பறக்கும் நிலையைச் சொல்கிறார் என்று எண்ணுகின்றாய்.
2.சக்தி தந்த இயற்கையின் தன்மையை அர்த்தமுள்ளதாகப் புரிந்து கொண்டு
3.சாமி சொன்ன சுவாச நிலையை மாற்றிடாது பிறவிப் பயனே போதும் என்ற எண்ணமுடன்
4.உன் நிலையை நிலை நிறுத்து… அதற்காகவே இந்தப் பாடம்...!