ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 23, 2024

விஷக் கதிரியக்கங்கள் பரவினால் “நம் உயிரின் துடிப்பு அதிகரித்துவிடும்”

விஷக் கதிரியக்கங்கள் பரவினால் “நம் உயிரின் துடிப்பு அதிகரித்துவிடும்”

 

இன்று விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். “எந்த நிலையிலும் எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம்….” காரணம்… தன் நாட்டைக் காக்கக் கடும் விஷமான குண்டுகளைச் சேமிப்புக் கிடங்குகளில் வைத்துள்ளனர்.

உலகம் முழுவதற்கும் சரி… நம் நாட்டிலும் சரி… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு அதைப் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். அந்த அணுக்கதிரியக்கங்களைப் பரிசோதனை என்ற பெயரில் வெடித்துப் பார்த்து விண்ணுலகிலும் பரவச் செய்து விட்டார்கள்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்கள் அதைக் கவர்ந்து எடுத்து அதிலேயும் கலவையாகி வெளிப்பட்டுக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் சூரியன் அருகிலே சென்ற பின் மோதி விஷத்தைப் பிரிக்கும்… இருந்தாலும் அந்த வலுவை சூரியன் சிறுகச் சிறுக இழந்து கொண்டுள்ளது.

ஒரு அணுகுண்டை வெடிக்கப்படும் பொழுது எப்படி அதனின் வேகத் துடிப்பு கொண்டு மற்றவைகளைக் கருக்குகின்றதோ இதைப் போல வான் வீதியில் பெரும் பெரும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றது.
1.அப்படிப்பட்ட மாற்றங்கள் ஆனால் நம் உயிரின் துடிப்புகள் அனைத்தும் துரித கதியாகி உடல்கள் அனைத்துமே கருகும் நிலையாகிவிடும்…
2.விஷத் தன்மைகள் அதிகரித்து ஜீவனற்ற (பல்புகள் பியூசாவது போல்) நிலையாகிவிடும்

உதாரணமாக ஒரு டைனமோவை (DYNAMO–GENERATOR) சுழலச் செய்யும் பொழுது… அது வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகச் சுற்றினால் மின் உற்பத்தி அதிகமாக ஆகின்றது.

ஆனால் முதலில் சீராக அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விளக்குகளோ அல்லது மற்ற சாதனங்களோ… “மின் உற்பத்தி அதிகமாகும் பொழுது அவைகள் பியூஸ் ஆகி விடுகின்றது…!”

அதைப் போல தான் சூரியனும் தனக்குள் கவருவதைத் தனக்குள் உருப்பெற்ற பாதரசத்தால் மோதும் நிலைகள் கொண்டு சீரான கரண்டை உற்பத்தி செய்கின்றது.

ஆனால் அதே சமயம்
1.விஞ்ஞானத்தால் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் தாக்கப்படும் பொழுது
2.பளீர்…ர்ர்… என்று மின்னணுவின் சக்திகள் (FLARE) அதிகமாகத் தோன்றும்.
3அதாவது மேலே முதலில் சொன்ன மற்ற நிலைகள் சூரியனுக்குள் மோதப்படும் பொழுது
4.விஷக் கதிரியக்கங்களை வடிகட்ட முடியாதபடி நெருப்பின் குழம்புகளாக அவை விரிவடைவதைப் பார்க்கலாம்.

இப்படித் தோன்றியது நம் பூமியின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது பல பல மாற்றங்கள் ஆகிவிடும். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரணமாக இப்போது நமது உயிரின் துடிப்பு சீராக இருக்கின்றது அந்தத் துடிப்பின் நிலைகள் கொண்டு உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் அதன் அதன் உணர்வுகளைச் சேர்க்கின்றது.

ஒரு மோட்டாரில் காயில்களைச் (COPPER COIL) சுற்றப்பட்டு அதற்கொப்ப மின்சாரத்தைப் பாய்ச்சினால் அந்தந்த சக்திக்குகந்தபடி மோட்டார்கள் சுழற்சி அடைகின்றது.

அதற்குண்டான காந்த சக்தியும் (MAGNET) அதற்குண்டான வயரும் (WIRE) அதனுடன் இணைக்கப்படும் பொழுது அவை அதனதன் சுழற்சியாக சீராக இயக்குகின்றது.

இதைப் போன்று
1.நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும்
2.தன்னைக் காட்டிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் உணர்வு கொண்டு மீட்டிடும் உணர்வுகளை எடுத்து எடுத்து
3.அந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் வெங்காயச் சருகு போன்று ஒன்றுடன் ஒன்று கலந்து… ஒன்றுடன் ஒன்று கலந்து
4.இவை அனைத்தும் உடலில் அணுக்களின் தன்மை பெருகி பரிணாம வளர்ச்சியில்
5.வீரியத்தன்மை கொள்ளும் அணுவின் அடைந்து… உறுப்புகள் உருவாகி மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் சந்தர்ப்பத்தால் நாம் உற்றுப் பார்க்கும் வேதனையான உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகி விட்டால்… மீண்டும் மீண்டும் இந்த உணர்வின் தன்மை நுகரும் தன்மை வந்தால்… அந்த நுகரும் ஆற்றல் நமக்குள் சென்று மனித உடலை உருவாக்கிய அந்த அணுக்களை மாற்றி அமைத்து விடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

நமக்குள் சிறு சிறு திரைகளாக (சித்திரை) குறைகள் வரினும் அந்தத் திரைகளை நீக்கி விட்டு
1.அருள் ஒளிச் சுடராக அடைந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும்.
2.அந்த இருளை மாய்த்தல் வேண்டும்.

நாம் அனைவரும் நல்லவர்களே…! ஆனால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களை மூடி மறைத்து விட்டால் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

அந்த உணர்வின் தன்மை கூடிவிட்டால் நம்மை அறியாமலே அது நம்மைத் தவறு செய்ய வைத்து விடுகின்றது. அதன் வழி நமக்கு நாமே தண்டனை கொடுத்தது போன்றும் ஆகிவிடுகிறது.

தற்கொலை போன்ற உணர்வின் இயக்கங்களுக்கு அழைத்துச் சென்று விடுகிறது. நாம் நுகர்ந்தது எதுவோ உயிர் அதை இயக்கி விடுகின்றது. இதைப் போன்று நம்மை அறியாது சூழும் தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் நாம் பல இன்னல்கள் பட்டு ஒன்றுக்கொன்று இரையாகி… அந்த உணர்வின் தன்மை தனக்குள் இரையாக்கி…
1.வலிமையான உடலுக்குள் புகுந்து அதனின் வலுவை எடுத்து
2.அடுத்த உடலாக மாற்றிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்துள்ளோம்.

இருந்தாலும்… இந்த உடலில் நாம் வாழும் காலம் மிக மிகக் குறுகிய காலம்.
1.அந்தக் குறுகிய காலத்திற்குள் அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்
2.மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை அடைதல் வேண்டும்
3.உயிருடன் ஒன்றி… வேகா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.