ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2024

நான் நானாக வேண்டும்

நான் நானாக வேண்டும்

 

நல்ல குணம் கொண்டு நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அது சமயம் ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால்
2.அது நல்ல அறிவை… அந்த மகிழ்ச்சியை… மேலே மூடி விடுகின்றது.

ஏனென்றால் எந்தக் குணத்தைக் கொண்டு எண்ணுகின்றோமோ அது இங்கே ஊடுருவும். அந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் வரப்படும் பொழுது முதலில் கண்ணால் தான் அது நமக்குள் பதிவாகின்றது.

ஒருவன் தவறு செய்கின்றான் அதை நுகரும் பொழுது எண்ணம் ஆகின்றது. ஆனால் இங்கே பதிவானது உயிரிலே பட்ட பின் அந்த எண்ணங்கள் தோன்றுகின்றது.

ஆனால் பதிவானதை மீண்டும் எண்ணும் பொழுது கண்ணுக்கு வருகின்றது எனக்கு நன்மை செய்தான் என்று அந்த மனிதனை எண்ணும் பொழுது கண்ணுக்கு வந்து அந்த மகிழ்ச்சியாக இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் ஒருவன் தவறு செய்திருக்கின்றான் என்று எண்ணினால் கண்ணிலே பார்த்தவுடனே நமக்குள் பதிவான எண்ணங்கள் இவன் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று வெறுப்பான உணர்வுகளை ஊட்டுகின்றது.
1.இதுதான் கண்ணால் பதிவு செய்வதும்
2.பதிவானதை மீண்டும் எண்ணும் பொழுது எண்ணத்தால் மீண்டும் இயக்குவது
3.எண்ணம் என்பது உணர்வுகள்… உணர்ச்சிகள்… “தூண்டுவது…”

ஆக… புறத்தில் இருப்பதை நாம் நுகரப்படும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றது

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாகாதபடி காலை துருவ தியானத்தில் கொடுக்கும் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் சீராகப் பயன்படுத்திட வேண்டும்.

உடலில் அழுக்குப்பட்டால் குளித்து விடுகின்றோம் துணியில் அழுக்குப்பட்டால் துவைத்து விடுகின்றோம்… அது போல் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைத்துப் பழகுதல் வேண்டும்.

ஆன்மாவில் அழுக்கு சேர்ந்து விட்டால் என்ன ஆகும்…?

முழு நிலாவாக பௌர்ணமியாக இருப்பது மற்ற கோள்கள் மறைப்பு ஆக ஆக அது சுருங்கிச் சுருங்கி மிகவும் சிறிதாகி விடுகின்றது. மீண்டும் அந்த நிலை மாறிய பின் தான் வெளிச்சம் வருகின்றது.

இதைப் போன்று இந்த மனித வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் வெறுப்பு பழி தீர்த்தல் பழி வாங்குதல் போன்ற இத்தகைய உணர்வுகள் வந்துவிட்டால் “நல்ல குணங்கள் அனைத்தும் தேய்பிறையாகி முழுமையாகத் தேய்ந்து விடுகின்றது…”

உயிரின் உணர்வுகளில் “கடைசித் தொக்குகள்” உண்டு (முக்கியம்).

ஆரம்பத்தில் எப்படி உயிர் முதலில் புழுவாக உருவானதோ இதைப்போல இந்த உயிரிலே முழுமையாக இருள் சூழ்ந்து விட்டால் விஷம் முழுமையாகி இந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டு… அடுத்து அத்தகைய உடலாகப் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக வளர்ச்சி பெற்றுத் தான் மனிதன் ஆனோம்… மீண்டும் தேய்பிறை ஆகிவிடக்கூடாது.

கார்த்திகேயா…! ஒளியின் உணர்வை அறிந்து கொண்ட பின் அருள் ஒளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் வளர்த்து என்றுமே ஏகாந்த நிலை… என்ற பிறவி இல்லா நிலை அடைவதே மனித உடலில் முழுமை பெறுவது.

உயிரால் வளர்க்கப்பட்டது தான்…
1.நான் யார்…? - உயிரால் வளர்க்கப்பட்ட மனித உடல்
2.ஆகவே உயிருடன் ஒன்றி இருக்கும் போது நான் என்று வருகின்றது.
3.நான் நானாக வேண்டும்
4.உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால் தான் “நான் நானாகின்றேன்…”

உயிர் நம்மை இயக்கும் போது நான் ஆகின்றது நான் என்ற சொல்லுக்கு உயிரே மூலமாகின்றது.

இதற்குள் அந்த உணர்வின் ஒளி எவ்வாறோ அதன் ஒளியின் தன்மையாக
1.நமக்குள் ஒளியான உணர்வை வளர்த்தல் வேண்டும்
2.உயிருடன் ஒன்றி நாம் ஒளியாக ஒளிச் சரீரமாக வேண்டும்.