ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 9, 2024

குடும்ப நிலையில் இருந்து சித்தனாகிக் காட்டு… அது தான் பெரிது…!

குடும்ப நிலையில் இருந்து சித்தனாகிக் காட்டு… அது தான் பெரிது…!

 

அணுவின் தன்மையை அணு அணுவாக ஆரம்ப நிலையிலிருந்து உணர்த்தி உள்ளேன். மனிதன் பிறவி எடுத்த நிலையில் இருந்து உணர்த்தி உள்ளேன். மனிதனின் நிலையில் “ஏழு ஜென்மம்” நமக்கு அளித்த ஆண்டவனின் தீர்ப்பு.

அந்த ஏழு ஜென்மத்தில் நமக்கு அளித்த அருளைப் பெற்றவன் பெரும் முக்தி நிலையைப் பெற்று விடுகின்றான்.

அந்த ஏழு ஜென்மத்திலும் தன் நிலையை உணராமல் தன் ஆசையை அடக்கிடாமல்
1.நான் என்ற இந்த நிலையில் அவன் எடுக்கும் பிறவி எல்லாம் சீரும் சிங்கமாகவும் விஷம் கொண்ட பாம்பாகவும் அணிலாகவும்
2.அவரவர்களுக்குக் கிடைத்த ஏழு சந்தர்ப்பத்தையும் முடிக்காமல் உள்ளவன்..
3.இன்று மிருகத்திற்கு எந்தக் குண நிலை உள்ளதோ அவ்வழியில் பிறக்கின்றான்… அதிலும் ஜென்மங்கள் மாறுபடுகின்றன.

மிருகமாக மாறுபடும் ஜென்மங்களைத் தான் மனிதனும் புசிக்கின்றான். இவன் அணுவே தான் அதற்கும்… அதன் அணுவே தான் இவனுக்கும்…!

ஆயிரம் ஆடுகள் மந்தையில் இருந்தாலும்… அச்சிறுத்தையின் எண்ணம் “ஒரு ஆட்டின் மேலே தான்” உள்ளது. அதன் நிலை என்ன…?
1.அச்சிறுத்தையின் முதல் எதிரி அந்த ஆடு
2.அந்த ஆட்டையே புசிக்கின்றது.

ஒவ்வொரு தன்மையும் இதைப் போல் தான் சுற்றிக் கொண்டே வருகிறது சிறுத்தை அவ்வாட்டை அடித்ததனால்
1.அந்த ஆட்டிற்குத் தான் சாப நிலை தீர்ந்தது.
2.சிறுத்தையின் நிலை சுற்றிக் கொண்டே தான் இருக்கின்றது.

அணுவே தான் எல்லாம். மரமும் அணு தான். மரத்தின் கனியும் அணு தான். அந்த அணுவைப் புசிக்கிறோம்… இந்த அணுவைப் புசிக்கக்கூடாதா…? என்ற எண்ணம் உனக்குள்ளே...! “அந்த அணுவின் தன்மை வேறு… இந்த அணுவின் தன்மை வேறு…”

ஏழு ஜென்மத்தில் முக்தி அடையாத மனிதன் மிருகமாகி.. பறக்கும் பறவையாகி… புழுவாகி… மரமாகி… கனியாகி கனியின் தன்மையிலேயே பாவ விமோசனம் பெறுகின்றது.

கனியாகவும் ஆகின்றது பூவாகவும் ஆகின்றது கனியைப் புசிப்பதின் தன்மை புரிகிறதா…? ஆசை மணத்தை அணு அணுவாக அடக்கிடத்தான் இந்த தியான முறை எல்லாம்.

சுவை எல்லாம் அவன் தருவான் சுவைத்திடப்பா சுவையை. முதல் பாட்டிலேயே தந்துள்ளேன்… ஆசை அணுவை அழித்திடுவாய் என்னும் வரியை. அதன் பொருளும் இதுவே தான்.
1.அணு அணுவாக எந்நிலையிலும் அடக்கிட வேண்டும்
2.பெரும் அவசரமும் பதட்டமும் அடைந்து விட்டால் பற்றற்ற நிலை வந்துவிடாது.
3.நம் மனதை உயர்த்திக் கொண்டு நம் நிலைக்கே வந்த நிலையில் வைத்து இருப்பதும் ஒதுக்குவதும்.
4.அவசரம் வேண்டாம் சொன்னதன் பொருள் புரிந்ததா…?

பூவின் மணம் தான் உன் சுவாச நிலைக்கே வருகின்றது தெரியவில்லையா…? எல்லாச் சுவையின் தன்மையையும் தந்தருளினேன்.
1.மூலிகையையின் வாசனைகள் வந்திருக்கும்
2.ஜோதியின் வடிவமும் தந்தருளினேன். அந்நிலையில் உதயத்தைப் புரிந்திட்டாயா… புரியவில்லை… போகர் பற்றி.

காயகல்பம் சாப்பிட்டவர்… அந்தக் காயகல்பம் எதிலிருந்து வந்தது போகர் உடலை அழியாமல் வைத்துள்ளார்.

காட்சி:- மருந்தை எடுத்து இடித்துக் காட்டி இப்படித்தான் வந்ததா…? என்று குருதேவர் கேட்கின்றார்.

காயகல்பம் என்பதெல்லாம் கருணையான மனதினிலே தியான நிலையில் பல மணங்களை எடுத்து உலோகத்தன்மையில் கலந்து அவர் அரைத்தார்.

கடுகளவு காண்பதற்குத் தவம் இருந்தார் பல நாட்கள்…!

மும்மூர்த்தியின் வடிவையே சிலை செய்தார். சிலையின் தன்மையிலே கலந்து செய்தார் இக்காயகல்பத்தினை.
1.சிலையின் உருவிலும் உள்ளது காயகல்பம்
2.போகரின் உடலிலும் உள்ளது காயகல்பம்.

அணுகுண்டு செய்வது பெரிதல்ல. காலங்கள் அழிந்தாலும் தன் நிலையையும் தன் உடலையும் தன் உணர்வையும் அழிந்திடாமல் வைத்துள்ளார்.
1.அந்நிலை உயர்ந்ததா…?
2.வெறும் அணுகுண்டு செய்திடத் தன் சக்தியெல்லாம் அழித்துச் செய்யும் அணுகுண்டி நிலை பெரிதா…?

மனிதனாகப் பிறந்தவருக்கு எல்லோர் உடலிலும் சக்தி நிலை உள்ளது. பிறவிப் பயனும் உள்ளது… அவனவன் எடுக்கும் நிலையில் தான் எல்லாமே உள்ளது.

இனி எந்த நிலைக்குச் சென்றாலும் இந்நிலையை மாற்றி விடாதே… காலத்துடன் மறைந்திடாதே… கல்கியுடன் கலந்துவிடு…! பகர்ந்திடுவேன் பகர்ந்திடுவேன் பல நிலைகளைப் பகர்ந்திடுவேன்….!

உன் நிலையில் உள்ளவர் தான் போகன். அதனால் தான் அந்த வழி காட்டினேன்…. வழியெல்லாம் வகுத்திடுவார் அந்த வழிக்கு வந்துவிடு சீக்கிரம்.

உள்ள நிலையை மாற்றி விடாமல் இந்த வழிக்கு வந்துவிடு. காலம் கனிந்து வரும்… காலம் குறுகியது குறுகியது…! சீக்கிரம் சுவாச நிலைக்கு வா.

பல கோடி நாட்கள் தூங்கிடலாம்… தூங்கும் தூக்கம் தனி அல்ல என்ற நிலைக்கு வந்துவிடு.
1.தியான நிலையில் இருந்திட்டால் அதுவே தான் தூக்கம்
2.அந்நிலையில் காத்திடுவான் உன் உடலையும் அவனே.

இன்றுள்ள பல சித்தர்கள் ஞானிகள் எல்லாமே தன் நிலையை மாற்றிக் கொண்டு அவன் நிலைக்கு வந்தார்கள். உனக்குச் சொல்வது புரிகிறதா…!
1.குடும்ப நிலையில் இருந்து சித்தனாக்கிக் காட்டு…. இந்நிலை தான் பெரிது
2.இதுவும் அவன் அருளே…. மாற்றிடாமல் அவனிடம் வா… போகரே போற்றிடுவார். உன் நிலையை என்று அடித்துக் காட்டுகின்றார் குருதேவர்.

உன் நிலையை முந்துவதற்கும் ஆள் உண்டு. நீ முந்துவாயா? அவர் முந்துவாரா…? பார்க்கலாம்.