ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2024

உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் சீக்கிரம் கிடைக்கும்

உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் சீக்கிரம் கிடைக்கும்

 

நாம் மனிதர்கள் சந்தோஷமான உணர்வுகளைப் பதிவு செய்து கொண்ட பின் சந்தோஷமாக வாழ்ந்த நிலையை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே அன்று நமக்குச் சந்தோஷம் வருகின்றது.

அதே சமயத்தில் கோபமாகப் பேசியருடைய நினைவுகளை நாம் எண்ணினோம் என்றால் நம்மை அறியாமலே வெறுப்பும் கோபமும் அன்று உருவாகின்றது.

அப்பொழுது நம் உடலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றது.

ஒரு மனிதன் வேதனையுடன் பேசினால் அதைப் பதிவு செய்து கொண்டால் அந்த மனிதனை மீண்டும் நினைக்கும் பொழுது நம்மை அறியாமலே வேதனை வருகின்றது… மனம் சோர்வடைகின்றது…!

ஒரு தொழிலில் செய்ய வேண்டும் என்று பதிவு செய்து கொண்டால் அந்த நினைவு வருகின்றது ஆனால் தொழில் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அந்த நேரம் சோர்வடைந்து விடுகின்றோம்.

இதைப் போன்று
1.இந்த உடலில் “எதை எதை” நாம் பதிவு செய்து கொள்கின்றோமா
2.அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது நம் கண்ணுக்கே வருகின்றது.
3.கண்ணுக்கு வரும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் நாம் பழகியவர்களின் உணர்வுகள் பரவி உள்ளதை நாம் சுவாசித்து
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு நம் உடலின் மாற்றங்களும் எண்ணங்களும் சொல்களும் வருகின்றது… நம் செயல்களும் அமைகின்றது.

உதாரணமாக நம்மிடம் கோபமாகப் பேசியவர் நினைவு வரும் பொழுது பெண்களாக இருப்பின்… குழம்பு வைக்கும் பொழுது அதில் “காரத்தை” அதிகமாகப் போட்டு விடுவார்கள்.

சலிப்பு கொண்டோரின் நினைவுடன் சமைத்தால் அதிலே “உப்பை” அதிகமாகப் போட்டு விடுவார்கள். ஏனென்றால் நுகர்ந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யும்.

ஆண்களாக இருப்பின்… ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் அந்த நேரம் குறுக்கே யாராவது வந்தார்கள் என்றால்
1.உடனே சலிப்பு வந்துவிடும்… அப்பொழுது கோபம் அதிகரிக்கும்.
2.கோபத்தின் தன்மை வரும் பொழுது வாகனத்தைச் சீராக ஓட்டுவது மிகவும் கடினமாகி விடுகின்றது.
3.கோபம் வந்தபின் அடுத்து நிதானமாக வண்டியையும் ஓட்ட முடியாது… ஓட்டினாலும் சிரமம் தான்.

இதைப் போன்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் நமக்குள் பதிவு செய்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது
1.காற்றிலே கலந்துள்ள அந்தந்த உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்து
2.அந்தந்த உணர்வுகள் நம் உடலுக்குள் செல்வதும்… பின் அதைச் செயலாக்கியும் விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம் நினைவு கொள்ளும் பொழுது அது வருகின்றது.

கல்விச்சாலையில் படிக்கும் போது பாடங்களைப் பதிவு செய்து கொண்டால் அதாவது…
1.எந்தப் பாடத்தை பதிவு செய்தோமோ அதை நினைவால் வெளிப்படுத்தும் போது
2.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்து விடுகின்றது.
3.அந்தப் பாடங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அதனுடைய தொடர் வரிசையும்
4.பாட நிலையில் எதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று குறித்த உணர்வுகள் நமக்குள் தெளிவாக வருகிறது.

உதாரணமாக உயர் படிப்பு படிப்பவர்களுக்குப் படிப்பில் பாடங்கள் அதிகமாக இருக்கப்படும் பொழுது அதன் தொடர் வரிசையில்… படிக்கும் பொழுதே சோர்வோ சோம்பேறித்தனமோ வந்து விட்டால்… குடும்பம் அல்லது தொழில் அல்லது கொடுக்கல் வாங்கல்களில் பாதிப்பு வந்துவிட்டால்…
1.பாடங்கள் சீராகப் பதிவாகாது… பரீட்சையில் தேர்வதும் மிகக் கடினமாகின்றது.
2.அத்தகையவர் படித்து வருவார் என்றால் மிகவும் கடினம் தான்

உதாரணமாக… குடும்பத்தில் கணவன் மனைவிக்குப் புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் “குழந்தை வேண்டும்” என்று பதிவு செய்தால் அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

அதற்கு மாறாக… “குழந்தை இல்லையே… குழந்தை இல்லையே… இல்லையே…!” என்று இதைப் பதிவு செய்து கொண்ட பின் இந்த உணர்வுகளே அதிகரித்து “புத்திர பாக்கியம் கிடைப்பது” காலதாமதம் ஆகிவிடும். காரணம்…
1.சோர்வும் சஞ்சலமும் அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது
2.அந்த அணுக்கள் வீரியத்தன்மை அடைந்து கரு வளர்ச்சி பெறும் நிலைகளும் தடைப்படுகின்றது அல்லது பலவீனம் அடைகின்றது.

இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொண்ட நிலைகள் எல்லாம் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது இப்படிப்பட்ட இயக்கத்திற்கு வருகின்றது இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

“தன் பெண்ணுக்குத் திருமணமாக வேண்டும்…” என்று எண்ணலாம். ஆனால் “திருமணம் ஆகவில்லையே…” பிள்ளையைப் பார்க்க வந்து வந்து செல்கின்றனர்…! என்று பதிவு செய்தால்
1.அந்தப் பதிவே மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது ஆன்மாவில் அது கலந்து
2.பெண் பார்க்க வரும் பொழுது அவர்கள் நம்முடைய சோர்வின் நிலைகளை உற்றுப் பார்த்து
3.நம் சொல்லைக் கேட்கப்படும் பொழுது அவர்களும் சோர்வடைகின்றார்கள்.
4.அப்போது நம்முடைய எண்ணமே பார்க்க வந்தவர்கள் உணர்வினை இயக்கி…
5.பேச்சுத் தொடரில் சோர்வின் தன்மை அடையச் செய்து திருமணம் நடைபெறாது தடையாகி விடுகின்றது.
6.நல்லது எண்ணுவதை அந்த இடத்தில் நாம் விட்டு விடுகின்றோம்.

அதை எல்லாம் மாற்றி அமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால்… நம் பெண் எங்கே திருமணம் ஆகிச் சென்றாலும் அந்தக் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும்… அந்தக் குடும்பத்தில் தொழில் வளம் பெருக வேண்டும்…
1.அந்தச் சக்தி என் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் என்ற அடிக்கடி எண்ணினால்…
2.அந்தத் திருமணமாக வேண்டிய பெண்ணும் இப்படி எண்ணினால்…
3.துரிதமாக அதற்கு நல்ல வரன் கிடைக்கும்.
4.எதிர்காலம் நல்ல வாழ்க்கையாகவும் அமையும்
5.அதனுடைய பேச்சும் மூச்சும் அந்தக் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும்… மகிழ்ச்சியை உண்டாக்கச் செய்யும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டு அதற்குப் பின் வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியங்களையும் செயல்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி… ஒரு ஐந்து நிமிடம் உடலுக்குள் செலுத்திய பின்… எந்தக் காரியத்திற்குச் செல்கின்றீர்களோ அவை அனைத்தும் காரிய சித்தி ஆக வேண்டும்… எங்கள் சொல் அவர்களை நல்லதாக்க வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும்… என்று “இப்படித்தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்…”

வாழ்க்கையில் வரக்கூடிய எந்த நிலையாக இருந்தாலும் நல்லதாக வேண்டும் என்று இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து செயல்படுத்த வேண்டும்.

ஆகையினால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றீர்கள்… அப்போதெல்லாம் அதை வலுக் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

அதிகாலையில் எப்பொழுது விழிப்பு வருகின்றதோ அப்பொழுதெல்லாம் மகரிஷிகளை எண்ணி விட்டு இந்த முறைப்படி அந்தந்த காரியங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி எத்தனையோ மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் உள்ளார்கள்

ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் அந்த அருள் சக்திகளை எடுத்து உங்கள் உடலுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
1.உடலுக்குள் சோர்வடைந்த நிலையில் எதுவாக இருந்தாலும் நல்ல மன பலம் பெற்று மன வளம் பெறுவீர்கள்.
2.சிந்தித்துச் செயல்படும் அருள் ஞான சக்தியாக வரும்…
3.உங்கள் காரியங்கள் “அனைத்தும் வெற்றியாகும்…”

செய்து பாருங்கள்…! (ஞானகுரு)