ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2024

அகஸ்தியனைப் (துருவன்) பற்றிய உண்மைகள் பலவாறு திரிபுகள் ஆகிவிட்டது

அகஸ்தியனைப் (துருவன்) பற்றிய உண்மைகள் பலவாறு திரிபுகள் ஆகிவிட்டது

 

அகஸ்தியன் என்று கூறும் அந்தச் சிசு தாய் கருவிலே இருக்கப்படும் போது… தாய் தந்தையர் அவர் உடலில் அரைத்துப் பூசிய நஞ்சினை வென்றிடும் பச்சிலை மூலிகைகள் தாவரங்கள் மணங்களின் அந்த முலாம்களை நுகர நேர்கின்றது.
1.நுகர்ந்த உணர்வுகள் அது கருவிலே இணைகின்றது
2.இணைந்து நஞ்சினை வென்றிடும் அணுக்களாகப் பெருகுகின்றது

இப்படிப் பத்து மாதங்களும் பெற்றுப் பிறந்த குழந்தைதான் பிறந்த பின் சூரியனை நேரடியாக உற்றுப் பார்க்கின்றது. சூரியனைப் பார்த்தால் நமக்கெல்லாம் கண் கூசுகின்றது
1.ஆனால் மோதலில் ஒளிப் பிளம்புகள் வெளி வருவதை இவன் உற்றுப் பார்த்து
2.அந்த உணர்வின் தன்மையைக் கண்டு சிரிக்கின்றான்… மகிழ்கின்றான்.

இந்தப் பிரபஞ்சத்தையும்… அதன் தொடர் அலைவரிசைகள் எங்கே செல்கின்றது என்பதை இளமைப் பருவத்தில் அவன் உணர்கின்றான் மகிழ்கின்றான்…! இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் நிலை இல்லை.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதும்… அதன் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரம் மோதுண்டு மத்தாப்பைப் போல் பொறியலைகள் மாறுவதும்… ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதும்… இதைப் போன்று வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்.

1.விஷத்தை அடக்கி அந்த உணர்வின் இயக்கமாக வரும் பொழுது
2.அவன் நுகரும் உணர்வுகள் அவனது உயிர் இதற்குள் அந்த ஞானத்தின் வழித் தொடராக உருவாக்குகிறது
3.ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்திற்குள் விளைகின்றது… வெளிப்படுத்தும் உணர்வு இல்லை.
4.ஆனால் நுகர்ந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காடுகளுக்குள் சென்றால் மற்ற உயிரினங்கள் மிருகங்கள் விஷ ஜந்துக்கள் எவையும் இவர்கள் அருகில் வருவதில்லை.

ஐந்து வயது வரப்படும் பொழுது தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதும்பி வருவதும்… இவனுக்குப் பின் வருவதும்… இப்படி காட்டுக்கே இவன் ஒரு அரசன் ஆகின்றான்.

அதே சமயத்தில் இவனைப் பின் தொடர்ந்து சென்றால் அங்கே மக்கள் அனைவரும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து காக்கும் பண்பும் பெறுகின்றனர்.

பிற்காலங்களில் துருவனை அரசன் என்று வைத்தார்கள் அதற்குப்பின் அவனுடைய சரித்திரம் வராது. அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்று இருக்கும்
1.ஆனால் அரசன் என்ற நிலைகள் கொண்டு தான் காட்டினார்களே தவிர
2.அந்தத் துருவன் எவ்வழியில் விண்ணுலகம் சென்றான்…? என்ற நிலைகள் இல்லை.

ஆகவே புலஸ்தியர் சொன்னார் என்ற காவியங்களில் எடுத்திக் கொண்டால்… ஓர் அரசனுக்கு இரண்டு மனைவிகள்… அவரவர்களுக்குக் குழந்தைகள் உண்டு. அரசனுடன் பழகி இருக்கும் குழந்தையை தன் மடி மீது வைத்து அந்தத் தாய் கொஞ்சுகின்றது. இன்னொரு தாயின் மகன் (துருவன்) தன் தந்தையிடம் வந்து அமர்ந்து கொஞ்ச வேண்டும் என்று வரப்படும் பொழுது இந்த்த் தாய் அவனைக் கொஞ்ச விடாது தடுக்கின்றது.

ஆகையினால் அவன் வெறுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான்… தவம் இருந்தான் என்று உண்மைக்கு மாறாக உண்மையின் இயக்கங்களை அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டிவிட்டார்கள்.

துருவனின் உண்மை நிலைகளை நாம் அறிந்திடாது அரசர்களுக்கு உகந்த நிலைகள் கொண்டு பல நிலைகளைச் சொல்லி காவியங்களைப் படைக்கச் செய்து அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்ற நிலைகளில் பல பல காவியங்களாக மாற்றி மகாபாரதம் இராமாயணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

கந்தபுராணம் சிவபுராணம் என்று வந்தாலும் விநாயகன் என்ற நிலைகள் அகஸ்தியன் வணங்கினான் அதனால் அவனுக்குச் சக்தி ஏற்பட்டது அவனிடம் எதுவும் எதிர்த்துச் செய்ய முடியாது என்று இப்படி அகஸ்தியன் கதைகளைச் சாற்றி அதனுடைய முழுமையைக் காட்டாதபடி விட்டுவிட்டார்கள்.

1.காவியத் தொகுப்புகளை ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தக்கவாறு வெளிப்படுத்தி
2.நூல்களை படித்தவர்கள் உண்மை நிலைகளை அறியாது தான் படித்ததை தனக்குத் தெரிந்ததைப் பெரிது என்று வாதித்துக் கொண்டிருப்பதும்
3.உண்மை நிலைகள் உணராதபடி இதனைச் சட்டமாக்கப்பட்டு மந்திரங்களாக ஜெபிக்கப்பட்டு
4.அதைக் கேட்டுப் பதிவான நிலைகள் கொண்டு அவர்கள் இறந்தால்… இறந்த பின் அதே மந்திர ஒலிகள் கொண்டு
5.அந்த ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யப்படுத்தும் நிலையாகத் தான் வருகின்றது.

அகஸ்தியனைப் பற்றிய உண்மைகள் காலத்தால் இப்படித் தான் திரிபுகள் ஆகிவிட்டது.