ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2024

விண்ணின் ஆற்றலைப் பெற… அகஸ்தியன் மனைவி “அவனுக்கு(ள்) உறுதுணையாக இருந்த நிலை”

விண்ணின் ஆற்றலைப் பெற… அகஸ்தியன் மனைவி “அவனுக்கு(ள்) உறுதுணையாக இருந்த நிலை”

 

“வான இயல்” தத்துவம் தான் கோள்கள் நட்சத்திரங்கள் சூரியன் உருவாவதற்கே காரணம் ஆகின்றது. ஆக… வான இயல் தத்துவத்தின் பிரகாரம் பிரபஞ்சத்திற்குள் மாற்றமாகும் போது ஒன்றுடன் ஒன்று கலவையாகி கோள்களின் ரூபங்களும் மாறுகிறது.

அதே போன்று தான் “புவிஇயலின்” வாழ்க்கையும்…
1.ஒன்றுடன் ஒன்று பல கலவையாகி தாவர இனங்கள் உருமாறுவதும்
2.இதை உணவாக உட்கொள்ளும் உயிரணுக்கள் அது நுகர்ந்தறிந்த உணர்வுகளும் உணவாக உட்கொண்ட உணர்வுகளும்
3.இதனின் உணர்வணுக்கள் இணை சேர்த்து “உயிரியல்” மாற்றங்கள் வருகின்றது

உயிரியல் மாற்றங்கள் வந்த நிலைகள் கொண்டு நம் பூமியில் வளர்ச்சி பெற்று வந்தவன் தான் அகஸ்தியன்.

ஏனென்றால் வான இயல் தத்துவம் அனைத்தும் புவியியலாக மாறி… புவியில் விளைந்த தாவர இனங்கள் அதனின் குணம் உணர்வு சுவை இவை எல்லாம் கலவைகளாகி…
1.மணங்களும் ஞானங்களும் வளரப்பட்டு
2.உயிரினங்களில் ரூபங்கள் மாற்றப்பட்டு
3.இவை அனைத்தும் கடந்து மனிதனாக வந்தோம் என்பதை அறிந்து கொண்ட முதல் மெய் ஞானி அகஸ்தியன்…!

அக்காலங்களில் அகஸ்தியனும் அவன் மனைவியும் இணை சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால் காவியங்களில் இவர்கள் தனித்து பிரித்துக் காட்டுகின்றார்கள். இது முறையல்ல… முறையற்ற நிலை…!

கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்த உணர்வுகள் கருவுற்று…
1.கருவின் நிலையில் கொண்டு விண்ணுலக ஆற்றலை இவர் கவர்ந்து
2.தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட இருவரின் உணர்வும்
3.இதனுடைய உணர்வின் சேர்க்கைகள் வளரப்படும் பொழுது தான்
4.விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அகஸ்தியன் பெறுகின்றான்.

அதே சமயத்தில் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் பொழுது இடைமறித்து “அகஸ்தியனின் மனைவி மடிந்து விடுகின்றது…”
1.உயிரான்மா பிரிந்தாலும் எதனின் நோக்கத்தில் கணவன் மேல் பற்று கொண்டதோ
2.அந்த ஆன்மா அகஸ்தியன் உடலுக்குள் சென்ற பின் அகஸ்தியனுக்கு உறுதுணையாக
3.உள் நின்றே உணர்வின் தன்மை பெறும் நிலையும்
4.கருவின் நிலைகள் இணை சேர்த்து… இரு கருக்களும் (உயிரும்) ஒன்றாக்கும் நிலையும்
5.விண்ணின் ஆற்றலைத் தன் அணுக்களில் மாற்றும் தன்மையும் அங்கே உருப்பெறச் செய்தது.

இது இயற்கையின் உண்மை…! குருநாதர் இதை எனக்குத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் அவனின் உணர்வுகளை கணவனும் மனைவியும் ஒன்றிய நிலையில் கவர்ந்தவர்கள் அனைவரும்
1.வசிஷ்டரும் அருந்ததி போன்ற வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்து
2.சாவித்திரி போன்று இணை சேர்த்த உணர்வுகள் கொண்டு வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து
3.தீமைகளைத் தன்னுள் நாடாது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
4.ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக சப்தரிஷி…! சிருஷ்டித்துக் கொண்ட நிலையாக
5.இன்றும் விண்ணுலகில் வாழ்த்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் சென்றடைய வேண்டிய எல்லை அது தான்…!