ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 15, 2024

நட்சத்திரங்களுக்குண்டான “ஜொலிப்பு”

நட்சத்திரங்களுக்குண்டான “ஜொலிப்பு”

 

வானவியல் இயக்கத்தின் அடிப்படையில் நமது சூரிய குடும்பத்திற்குப் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடியதை எல்லாம் 27 நட்சத்திரங்கள் கவர்கிறது.

அதைக் கவர்வதற்காகப் பால்வெளி மண்டலமாக அமைத்து நூலாம்படை போல வலையை விரித்து விடுகின்றது.
1.பிற மண்டலங்களின் உருவான அணுக்கள் இதிலே பட்டபின்
2.அதனுடைய உணர்வைத் தனக்குள் எடுக்கும் பொழுது ஒளியின் மின்கதிர்களாக மாறுகின்றது
3.அதனால் தான் நட்சத்திரங்களுக்கு அவ்வளவு ஜொலிப்பு…!

அணு விசைகள் (அணு ஆயுதங்கள்) வெடித்த பின் அதனுடைய ஓளிக் கதிர்கள் நம் கண்ணை எப்படிப் பறிக்கின்றதோ… ஊடுருவிப் பாய்கின்றதோ… அதே போல் நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்… அதாவது
1.ஒரு பொருளுடன் ஒரு பொருள் நட்சத்திரங்களின் அணுக்கள் (ஒன்றுடன் ஒன்று) மோதப்படும்போது
2.பளீர்… என்று மின்னலாக மிகக் கடுமையாக ஊடுருவிப் பாய்கின்றது.

அந்த மின்னலின் கதிரியக்கங்கள் புவியின் ஈர்ப்புக்குள் வந்தால் பூமியின் நடு மையத்திற்கே வேகமாக ஊடுருவிச் செல்கின்றது. பூமியைப் பார்த்தால் கல் (பூமியின் நிலப்பகுதி) மூடி இருப்பது போன்று இருக்கும். ஆனால்
1.ஒவ்வொரு கல்லுக்குள்ளும் பாறைக்குள்ளும் அந்த நட்சத்திரங்களின் கதிரியக்கப் பொறிகள் உண்டு
2.அதன் வழி பட்டபின் அதனுடைய தொடர் வரிசையில் நம் பூமியின் நடுவிட்டம் சென்றடைந்து
3.பூமியின் சுழற்சியில் தேங்கும் இடமான மையத்தில் தேங்கி விடுகின்றது.

இது அனைத்தும் சேமிக்கப்பட்டு கொதிகலனாக மாறி வெளியே இருப்பது அனைத்தையும் கூழாகக் கரைத்து விடுகின்றது. அதிகமான அமிலங்களாக மாறி விட்டால் அப்போது பூமியிலே நில நடுக்கம் தோன்றும். நிலங்கள் அப்படியே கீழே சரிந்து உள்ளே போவதை நாம் பார்க்கலாம்

நட்சத்திரங்கள் இது போன்று வெளிப்படுத்தும் கதிரியக்கப் பொறிகள் நம் பூமிக்குள் ஊடுருவி பூமியின் ஈர்ப்புக்குள்ளே சென்று விட்டால் சிறுகச் சிறுகச் சேமிக்கப்பட்டுத் தன் அருகில் உள்ள அனைத்தையும் கரைக்கப்படும் பொழுது மேல் பாகம் அப்படியே அமிழ்ந்து விடும் (பூகம்பம்).

எந்தப் பகுதியில் இதனுடைய அமிலங்களாக உருகப்படுகின்றதோ மேல் பாகம் எடை தாங்காது அப்படியே கீழே இறங்கும்.
1.விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் கண்டு கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல
2.எப்பொழுது எதைச் செய்யும்…? எப்படி ஆகும் என்று…!

இதைப் போன்ற எம்முடைய (ஞானகுரு) உபதேசங்கள் சில நேரங்களில் மிகவும் நுட்பமாக வெளி வரும். மற்றவர்கள் அதைத் தவறான வழிகளில் எடுத்துச் செல்வதும் உண்டு.

அத்தகையவர் கைகளில் சிக்கக் கூடாது என்பதற்காகத் தான் சில நேரங்களில் அதிவேகமாக யாம் சொல்வது. ஆனால் அதே சமயத்தில்
1.உணர்வின் ஈர்ப்புடன் பதிவு செய்ய வேண்டும்…
2/நல்ல வழியில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு உரமாக ஏற்றி
3.மீண்டும் நினைவு கொள்ளும் போது அந்த மெய் வழியினைப் பெறும் தகுதியும் அவர்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

இதிலே எத்தனையோ வழிகள் உண்டு…!

தீமையை விளைவிப்போர் நன்மையைத் தீமையாக மாற்றி விடுவார்கள்… அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அதிலே சிக்கிவிடக் கூடாது.

யார் உண்மையிலேயே இந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றர்களோ அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் ஒவ்வொரு நிலைகள் உபதேசிக்கப்பட்டு
1.சில உண்மைகளை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்வதும்
2.மெய் உணர்வின் உணர்வுகளை உங்களுக்குள் சில நேரங்களில் சிறிது வேகமாகப் பேசுவது உண்டு.

சாமி இலேசாகப் பேசிக் கொண்டிருந்தார் திடீரென்று இப்போது வேகமாகப் பேசுகிறார் என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

உங்கள் ஈர்ப்புக்குள்… உங்கள் உணர்வின் குணங்களுக்குள் அதைச் சீராக நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இப்படி எல்லாம் செய்வது.