ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2024

நல் நிலை வருவதெல்லாம் “நிதானமாகத்தான்…!” ஆனால் என்றுமே நிலைத்து நிற்கும்

நல் நிலை வருவதெல்லாம் “நிதானமாகத்தான்…!” ஆனால் என்றுமே நிலைத்து நிற்கும்

 

நல் நினைவையும் நல் பாட்டையும் நல் சொல்லையும் மிஞ்சிவிடும் தீயோரின் எண்ணமும் செயலும் சொல்லும்.
1.நல் வழியில் வருவதெல்லாம் மிக நிதானத்தில் தன் உணர்வில்
2.தன்னுள்ளேயே அமைதியுடன் தான் வந்திருக்கும் “நிலை நிற்கும்…”

தீய எண்ணங்களும் தீய சொல்லும் செயலும் உலக நிலையையே மிஞ்சிவிடும். நல்லவருக்குக் காலமில்லை… அவன் எப்படி வாழ்கின்றான் பார்…! என்ற எண்ணம் தான் மனிதனுக்குள்ளே…!

1.நல் நினைவின் தன்மை எல்லாம் நமதுள்ளே இருக்கட்டும்…
2.பிறரின் புகழ் உரைகளுக்காகவோ பிறரின் போற்றுதலுக்காகவோ அல்ல நல் நினைவு.

எந்த இடத்திலும் நல்லதையும் அடக்கி விடும் தீயது. அதற்காக மனம் கலங்கவோ மன அடக்கம் இல்லாமல் (உணர்ச்சிகளை) வெளியிட வேண்டியதோ இல்லை.

தீயது வளரத்தான் செய்யும்…
1.வளர வளர அதன் நிலை அழிந்துவிடும். பெரும் அழிவாக அழிந்துவிடும்.
2.பெரும் நிலையை அடைந்தவன் உலக நிலையைக் கண்டவன் உலகை ஆள்பவன் எல்லாமே பெரும் அழிவு நிலையில் தான் அழிகின்றான்.
3.நல் நிலையில் உள்ளவனின் நிலை தான் நிலைத்திருக்கும் காலம் காலமாக…!

பார்ப்பவரின் பார்வைக்குப் பிறர் பார்ப்பதற்கல்ல இவை எல்லாம். சொல்லும் பாடம் புரிகின்றதா…?

சொல்வாக்கு செல்வாக்கு ஆசை மனம் செயல் எல்லாப் பாடங்களையும் சிறுகச் சிறுக தந்து அருளியுள்ளேன். ஒவ்வொரு பாடத்தின் தன்மையையும் நீ புரிந்து விட்டால் உன் வழியில் அப்பாடத்தின் தொடர் நிலைகள் எல்லாம் புரிந்துவிடும்.

மனிதன் எண்ணம் உலகத்தில் உள்ள எல்லா சக்திகளையும் விட மிகவும் துரிதமானது என்று சொன்னேன்.

காற்று மழை ஒலி ஒளி மனிதனாக செய்த விஞ்ஞானம் எல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய எண்ணத்தையே உன்னுள் அடக்கி உள்ளாய்.
1.இவ்வெண்ணத்தின் தன்மையில் இருந்து தான் பாய்கின்றது உலகத்தன்மை எல்லாம்.
2.எண்ணத்தின் பாடத்தைப் பகர்ந்து விட்டால் உன் எண்ணமெல்லாம் பாட நிலையிலே இருந்துவிடும்.

உன் எண்ணத்தை வைத்து வந்து விடப்பா… பெரும் ஞான நிலைக்கே என்று பகர்கின்றேன். பாடத்தின் வழியை எப்படிச் சொன்னாலும் “உன் நிலையை உயர்த்திடவே பகர்கின்றேன் பல நாட்களாக…!”

என்னப்பா…! புரிகின்றதா இந்த நிலை…?

சிவன் சக்தி வடிவத்தை அர்த்தநாரீஸ்வரர் என்று சொல்லி சரி பாதி சிவனையும் மறு பாதி சக்தியையும் உருவத்தைச் சித்தரித்தார்கள் சித்தர்கள். இந்நிலை எதற்கப்பா…?

உன் நினைவில் வந்ததா…? கடவுளின் ரூபத்தைக் கருத்துடன் புகுத்தி விட்டேன் உன் எண்ணத்தில். பெண் ஆண் என்பதெல்லாம் பிரிந்திடாமல் வருவதற்காக அளித்த சொல்லப்பா சிவசக்தி வடிவம்.

சிவ சக்தியின் வடிவத்தை உன் எண்ணத்தில் இட்டுள்ளேன். உன் எண்ணத்தின் வேகத்தில் பல பல உண்மைகளை அறிந்திடப் பாடம் மட்டும் புகட்டிவிட்டால் பாட நிலையிலேயே இருந்திடுவாய்.

பெரும் பரீட்சை ஒன்று உனக்குள்ளே வைத்துள்ளேன்…!
1.உன் எண்ணத்தின் மையத்தில் வைத்திடுவாய் சிவ சக்தியின் பிம்பத்தை
2.வைத்துள்ளேன் இன்று உனக்கு அந்நிலையில் உன்னுள்ளே.

இன்றைய தியானத்தை உன் நிலையை ஒருநிலைப்படுத்தி சக்தி சிவன் சொரூபத்தை உன்னுள்ளே கண்டு அந்நிலையின் தத்துவத்தை எனக்கு அருள்வாயா…?.

1.உன் நிலையை… தியான நிலையில் கண்டு பார்த்தால் கண்டிடுவாய்.
2.சிவ சக்தியின் வடிவத்தை நீ பெற்ற மக்களின் தன்மையில் கொண்டு வந்தால்… அந்நிலை புரியும்.

சிவன் தனியாக உள்ளாரா…? சக்தி தனியாக உள்ளாரா…? என்பதெல்லாம்… ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை என்றாய் அல்லவா…! நான் பகர்ந்து விட்டால் புரிந்து கொள்வாய் சில நொடியில்… பெற்ற “தியானத்தின் தன்மையிலே கண்டிடப்பா…!”

அணுவின் தன்மையில் பல கோடி நிலைகளை… கோடி கோடி நிலைகளைப் பகர்ந்துள்ளேன்.

1.ஆவியின் நிலையிலே பெண் இல்லை ஆண் இல்லை.
2.இறந்த பின்னால் ஆவியின் நிலை எல்லாம் பெண்ணல்ல ஆண் அல்ல

சஞ்சலம் உள்ள ஆவிகள்… தன் நிலையை முடித்து விட எண்ணுகின்றது உடலில் இருந்த பொழுது செய்த பலனை ஏற்றுக் கொண்டு சில ஆவிகள் இருக்கின்றன… சில ஆவிகள் பழி தீர்க்கும் நிலையிலும் இருக்கின்றன.

1.மனித உடலில் நல்லவர் கெட்டவர் என்பதைப் போல் என்பதைப் போல்
2.ஆவியின் உலகிலும் இரு நிலை ஆவிகளும் சுற்றுகின்றன.
3.அவ்வாவிகளின் செயல்களினால் நடக்கின்றன பெரும் விபத்துகளும் கொலைகளும் தற்கொலைகளும் எல்லாமே.

நல்ல நிலையில் உள்ள ஆவி… தான் பிரிந்து சென்ற குடும்பத்தின் பற்றை எல்லாம் மறந்திடாமல் அந்நிலையில் இருந்து கொண்டே நடத்திவிடும் குடும்ப நிலைகளை எல்லாம்.

பிறந்தவுடன் இறக்கின்றான்… இறந்தவுடன் பிறக்கின்றான்… என்றால் சில ஆவிகளின் நிலை மட்டும்தான் இந்நிலை.

சில ஆவிகள் உடலை விட்டுப் பிரிந்தும் எங்கும் செல்வதில்லை. அக்குடும்பத்தில் உள்ள பற்றையும் பாசத்தையும் ஒரு நிலை நிறுத்தித் தன் செயலில் நிறைவு கண்ட பிறகே மறு ஜென்மம் எடுக்கிறது.

சில ஆவிகள் உடலில் இருந்து பிரியும் பொழுது தனக்குண்டான ஆசைகளையும்… தான் வாழ்ந்த காலத்தில் அடைய முடியாத நிலையில் விட்டுச் சென்ற ஆசைகளையும் அடைவதற்காக… அவ்வாவி எந்த இடத்தில் அதை எல்லாம் அடைய முடியுமோ அந்நிலைக்குச் சென்று பிறக்கின்றது.

சில ஆவிகள் நிலை தான் பெரும் மோசக்கார ஆவிகளாக நிலைத்து நிற்கின்றது. அவ்வாவிகள் எல்லாம் கொலையாகவோ தற்கொலையாகவோ… இவ்விரண்டில் வரும் ஆவிகள் தான் மறு ஜென்மம் எடுக்காமல் அழிகின்றன அழிக்கின்றன.
1.ஆண்டவனின் தன்மையையே அழிக்கப் பார்க்கின்றன
2.அதனால் தான் ஆவியின் நிலையில் நடக்கின்றது பல வீடுகளில் நன்மை தீமை எல்லாமே…!