ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2024

நோய் நீக்கும் தாவர இனங்கள் காடுகளில் எப்படி உருவாகிறது…?

நோய் நீக்கும் தாவர இனங்கள் காடுகளில் எப்படி உருவாகிறது…?

 

காட்டிற்குள் “அட்டை” என்று சொல்வார்கள். மனிதன் இறந்திருந்தால் மனித உடலில் இருந்து அந்த அணுக்கள் பெற்றிருந்தால் மனிதன் சும்மா நடந்து சென்றாலே போதும்.

அந்த மணத்தின் தன்மை கொண்டு வில்லைப் போல பாய்ந்து மனித உடலில் அந்த அட்டைகள் ஒட்டிக் கொள்ளும். ஆனால் ஒட்டுவது நமக்குத் தெரிவதில்லை.

இரத்தத்தை உறிஞ்சும். அது எவ்வளவு உறிய முடியுமோ அதற்குப் பின் கீழே விழுந்து விடும்… நமக்குத் தெரியாது.
1.மனிதன் மடிந்த பின் இறந்த உடலிலிருந்து அந்த அணுக்களின் தன்மை அடைந்த பின்
2.மனிதனுக்குள்ளேயே இந்த இரத்தத்தைக் குடித்துச் செயல்படும் தன்மை வருகின்றது.

அட்டைகள் மடிந்த பின் இதே உணர்வின் தன்மை மற்ற தாவர இனங்களுக்குள் கலக்கப்பட்டு புதிதாக உருபெற்றால் அதை உணவாக உட்கொண்டால் ஒரு இரத்தத்திற்குள் சென்றால் இரத்தத்தை உருமாற்றும் நிலையாக அடைகின்றது “அந்தத் தாவர இனங்களுக்கு…”

காட்டிற்குள் குருநாதர் எம்மை அழைத்துச் செல்லப்படும் பொழுது
1.அங்கே உருவாகும் அணுக்களும் அது மடிந்த பின் மற்ற தாவர இனங்களுக்குச் செல்வதும்
2.அவைகள் மனிதனுக்கு நல்ல நிலைகளை உருவாக்கும் நிலையும் காட்டுகின்றார்.

அதாவது மனிதன் மடிந்த பின் அந்த மனித உடலிலிருந்த அணுக்கள் வெளிப்பட்டு… தாவர இனத்தை அது உணவாக உட்கொண்டு அது மடிந்து அதன் உணர்வுகளில் வரப்படும் பொழுது அந்தத் தாவரங்கள் மனித உடலுக்குள் ஆனபின்
1.அப்படின் உருவான அந்த தாவர இனத்தை உணவாக உட்கொண்டால்
2.மனிதனுக்குள் இருக்கும் சர்க்கரை நோயை முறிக்கும் தன்மை வருகின்றது
3.இரத்தக் கொதிப்பையும் முறிக்கும் தன்மை வருகின்றது.

ஒவ்வொரு நிலைகளிலும் மனிதனுக்குள் விளைந்து உணவாக உட்கொண்டு அணுவின் தன்மை அடைந்த பின் மீண்டும் அது படர்ந்த பின் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு “அது மடிந்தால்”
1.அதனின் உரங்கள் மற்ற தாவர இனங்களில் சேர்க்கப்பட்டு
2.அது உயர்ந்த மருத்துவ குணம் கொண்ட (மருந்து) தாவர இனங்களாக விளைகின்றது.

காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது இத்தனை வித்தியாசங்களையும்… இயற்கையின் நிலைகள் மனிதனான பின் உணர்வு மற்றதுடன் சேர்ந்து “அது எந்தெந்த நிலைகள் அடைகிறது…?” என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு சமயம் என்னை ஒரு பக்கம் உட்காரும்படி சொன்னார். அவர் வேறு ஒரு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். உட்கார்ந்த பின் அந்தத் தரையில் இனம் புரியாத “ஒரு ஈர்ப்பு” வருகின்றது.

காரணம்…
1.மண்ணிற்குள் மறைந்த அந்தத் தாவர இன வித்துகள்
2.மனிதனின் உடல் பட்ட பின் அந்த உணர்வை நுகர்ந்து அது செடியாக வளரத் தொடங்குகிறது.
3.அரிப்பின் தன்மை வரப்படும் பொழுது ஈர்ப்புடன் ஏங்கி வருகின்றது.

இப்படிப் பல நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

தொட்டால் வாடி என்றும் தொட்டால் சிணுங்கி என்றும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது சில செடிகளைத் தொட்டால் அதிலிருந்து கண்ணீர் (நீர்) வடியும். சில செடிகளைத் தொட்டவுடன் அப்படியே சுருங்கி… வாடிவிடும். மனிதனின் உணர்வின் நிலை பெற்று உருவான செடிகள் தான் அவைகள்.

மனிதன் இறந்த பின் அவன் உடலில் இருந்து எந்தெந்த குணங்கள் பெற்றுச் சென்றானோ… அதாவது சோர்வடைந்து இருப்பான் பல விஷத்தன்மை கொண்டு…!
1.இது போன்ற உணர்வுகள் செடிகளில் சேர்க்கப்பட்ட பின்
2.மனிதனுக்குண்டான ஜீவனைப் போல அது வாடுகின்றது… சிணுங்குகிறது.

சிலருக்கு மூட்டு வாதங்கள் இருக்கும். இரத்தத்தில் உப்புத் தன்மைகள் அடைந்து உறையும் தன்மையாக வரும்… சீழாகவும் மாற்றும். அதனால் அத்தகைய நோய் உருவாகும்.

மிளகையும் தொட்டால் வாடி என்ற செடியையும் பதப்படுத்தி அரைத்து மூட்டு வாதம் உள்ள இட்த்தில் சேர்த்தால்
1.அந்தக் கார உணர்ச்சிகள் ஊடுருவிச் செல்லும் பொழுது
2.மூட்டு வாதத்திற்கு உண்டான அணுக்களை வாடச் செய்யும் வாத்த்தை அகற்றிவிடும்.

இயற்கையின் நிலைகளில் மனிதனுக்குகந்த சில நிலைகள் எப்படி வருகின்றது…? என்று காட்டிற்குள் அழைத்துச் சென்று குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள் தான் மேலே சொன்ன தாவர இனங்கள் அனைத்தும்.