ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2024

சித்தர்கள் வெளிப்படும் காலம் இது...!

சித்தர்கள் வெளிப்படும் காலம் இது...!

 

ஏழு ஜென்மங்கள் என்றேன் அல்லவா… உலகம் தோன்றிய நாட்கள் எந்தக் கணக்கிலும் வரவில்லையப்பா. உலகம் தோன்றி நிலையில் வந்தவர்கள் எல்லாம் இன்றும் உள்ளார்கள் என்றால் எப்படி…? என்று எண்ணி இருப்பாய்…!
1.”மனித உடலில் உள்ள காலம்” ஆயிரத்தில் ஒரு மடங்கு இல்லை அப்பா இந்த ஏழு ஜென்மத்திலும்.
2.காலமெல்லாம் சுற்றுவதெல்லாம் அவ்வாவிகள் ஆவி உலகத்தினூடே தான்…!

என்னப்பா…? புரிகின்றதா பாட நிலை…!

இந்நிலையில் இருந்தெல்லாம் ஜெயிப்பவனுக்கு வருகிறது பெரும் சூட்சும உலகம். அவ்வுலகத்திற்குச் சென்றால் எவ்வுலகையும் காணலாம் என்று சொன்னேன். பெரும் பொக்கிஷம் பெற்றவர்கள் தான் அவ்வுலகத்திற்குச் சென்றவர்கள்.

இவ்வுடலில் உள்ள பொழுது சேர்க்கும் பணமும் சொத்துமல்ல பொக்கிஷம் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றிடுங்கள் கல்கிக்குச் செல்வதற்கு…!

1.கல்கியில் வந்திடுவான் சித்தனெல்லாம் என்று பகர்ந்திட்டான் உன்னிடம் இச்சித்தன் (சாமி – ஞானகுரு).
2.எப்படி வந்திடுவான்…? என்று சொன்னானா…!

கல்கியில் வந்து பிறந்திடுவானா…?

இல்லையப்பா…!

கல்கியில் இன்று வாழும் நிலையில் இக்கலி யுகத்தில் கடைசியில் நல் நிலை பெற்றோர் உணர்வில் வந்துவிடும். பிறந்து விடும் பூக்களிலும்…! பூக்கள் என்பது பிறக்கும் மழலைகளைத்தான் சொல்கின்றேன். அந்நிலையில் வருகின்றார் ஒவ்வொரு சித்தனாக…!

சித்தன் வெளிப்படுவான் என்று சொன்ன சிததனைக் கேட்டாயா…! என்ன நிலையில் வெளிப்படுவார் என்று…?

எவ்வுடலையும் ஏற்றுக்கொள்வார் அச்சித்தனெல்லாம்.
1.எவ்வுடலையும் என்று சொல்வதெல்லாம்
2.பெரும் பூர்வ புண்ணியப் பலனடைந்த உடலைத்தான் அச்சித்தன் ஏற்றுக் கொள்கின்றான்.

பிறக்கும் மழலைகளைப் பரிந்துரைத்தேன். கலியியில் பார்த்திருப்பாய் சில மழலைகளின் சொல்லையும் செயலையும்..!

வந்திடுவார்… வந்திடுவார் பெரும் சித்தனும் யோகியும் எல்லாமே கல்கிக்கு வந்திடுவார்கள். வரும் நிலையைப் புகட்டி உள்ளேன்.

முதன் முதலில் இந்நிலையில் தான் என் சிஷ்யனுக்கே வாயடைத்தேன். பகர்ந்து விட்டேன் நான் உனக்கு.

பரிபக்குவமான நிலையில் மன அடக்கத்துடன் இருங்கள்…!

எண்ணிக் கொள் எண்ணிக்கொள்… எண்ணின் வடிவத்தில் எண்ணிக்கொள்… எண்ணத்தில் எண்ணிக்கொள்…! காலங்கள் குறுகியது… குறுகியது… என்று பகர்கின்றேன்.

2000 ஆண்டுகள் என்று சொல்கின்றார்கள். 2000வது ஆண்டில் இவ்வுலக மக்கள் எல்லோருக்கும் ஆரம்பமாகி விட்டது “அழிவின் நிலை எல்லாம்…”
1.அவன் செய்யும் அணுவும் அணு அணுவாக அழியும் தன்மை வந்து விட்டது
2.அவனே வியக்கும் வண்ணம் சக்தியைப் பார்த்திடுவான் சக்தியையே…!

சக்தி நிலையைத் தெரிந்து கொள்ளாமல் அணு ஆராய்ச்சி செய்கின்றானாம்…! சக்தி நிலையில் ஊதி விட்டால் அவன் செய்யும் அழிவின் தன்மை எல்லாம் என்னவாகும்…?

கொதிக்கும் நிலையில் உள்ளதப்பா இவ்வுலக நிலை…! எல்லாம் பார்த்திடுங்கள் பார்த்திடுங்கள்… நான் பகர்ந்ததையெல்லாம் பார்த்திடுங்கள் வெடிக்கும் நிலையையும் பார்த்திடுங்கள்.

என் நிலையில் நீ இருந்தால் உலகத் தன்மையையே பார்த்திடலாம். குறுகிய காலம் தான் உள்ளதப்பா…! கூட்டி விடு உன் நிலையினை சமமான நிலையைத் தெரிந்து கொண்டாய்…
1.படர விடு இந்தப் பாட நிலையை நிலை நிறுத்திப் படரவிடு ஒரு நிலையில்
2.கல்கி என்ற விடிவிளக்கின் ஆரம்பத்தில் வந்துள்ளாய்.