ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 26, 2024

அன்றைய பச்சிலை வைத்திய முறைகள்

அன்றைய பச்சிலை வைத்திய முறைகள்

 

குருநாதர் காடு மேடல்லாம் அழைத்துச் சென்று மலைப்பகுதிகளில் எப்படி எல்லாம் தாவர இனங்கள் உருவாகின்றது என்பதனை எனக்குக் (ஞானகுரு) காட்டுகின்றார்.

சரியான உணவு எல்லாம் கிடையாது... அவருடன் சென்று கொண்டே இருக்க வேண்டும்… அவர் காண்பிக்கும் நிலை எல்லாம் அறிந்து கொண்டு அதனுடைய செயலாக்கங்களை பார்த்துக் கொண்டே வர வேண்டும். மலைப்பாங்குகளில் ஆரம்ப காலத்தில் என்னைக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பிக்கின்றார்.

ஏனென்றால் அங்கே மற்ற மிருகங்களோ மற்ற உயிரினங்களும் மடிந்தால் யாரும் புதைப்பதும் இல்லை… அப்படி அப்படியே தான் கிடக்கின்றது.
1.அந்த இறந்த உடலின் சத்துக்கள் தாவர இனங்களுடன் கலக்கப்பட்டு சில தாவரங்களுக்கு அது வீரிய சக்தியாகின்றது.
2.அந்த தாவர இனங்களுடன் சில உணவுர்கள் கலந்த பின் அது ஒரு புது வித்தாக மாறுகின்றது.

மறதிப் பூடு என்று ஒரு செடி உண்டு. அந்தச் செடியை வீட்டில் வளர்த்தால் அதில் மிதித்து விட்டால் உங்களுக்கு நினைவே இருக்காது.

மலைப் பகுதிகளில் வாழும் புலையர்கள் இதைத் தோண்டி எடுத்து சில மந்திர வேலைகளுக்குப் பயன்படுத்துவார்கள். இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வும் மனிதன் மடிந்து இருந்தால் அத்தகைய செடிகளில் இந்த உணர்வின் நிலைகளும் வரும்.

1.அந்தக் காலங்களில் மலைப்பகுதிகளில் எப்படி எல்லாம் தாவர இனங்கள் உருமாறியது…?
2.மனிதனோ உயிரினங்களோ மடிந்த பின் தசைகள் மண்ணுடன் கலக்கப்படும்போது அதனுடைய இன சேர்க்கை தாவர இனங்களிலே எப்படி வருகின்றது…?
3.அதற்கு வீரியத்தன்மை எப்படி வந்தது…? என்று காட்டினார் குரு.

அதை எடுத்து மருந்தாகப் பயன்படுத்தினால் மனித உடலில் வந்த தீமைகளைப் போக்கக்கூடிய சக்தியும் அத்தகைய தாவரங்களுக்கு உண்டு.

அதாவது மனிதன் மடியப்பட்டு…
1.அந்த மடிந்த நிலையில் கொண்டு அதன் உணர்வு தாவர இனத்தில் சேர்க்கப்பட்டிருந்தால்
2.அந்த்த் தாவர இனங்களில் இருந்து மணங்கள் வெளிப்பட்டு
3.இன்னொரு பக்கம் புலியோ அல்லது விஷத்தன்மை கொண்ட செடிகள் பதிந்திருந்து
4.அதிலிருந்து உறிஞ்சப்பட்ட உணர்வுகள் கலந்து வெளிப்படும் காற்றினைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
5.இந்த இரண்டும் மோதலாகி ஒரு வித்தாகி பூமிக்குள் பதிந்து விளைந்தால்
6.அந்தச் செடியில் இருந்து வரக்கூடிய மணத்தை மனிதன் நுகர்ந்தால் அல்லது உடலின் மேல் பாகத்தில் பூசினால்
7.உடலில் கேன்சர் நோய் இருந்தாலும் அந்த விஷத்தை இந்தச் செடி கரைத்து விடுகின்றது.

அன்று மனிதனுக்கு வந்த புற்று நோயை நீக்க இதைப் பயன்படுத்தினார்கள்.

இன்று மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் செய்கின்றார்கள் அல்லவா/ சில தாவர இனங்களின் அந்த பச்சிலையை மேலே பூசி விட்டால் அறுவை சிகிச்சை செய்தாலும் அந்த உணர்ச்சிகள் இவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை.

1.அன்று கண்ணுக்கு முன்னாடியே இப்படி அறுவை சிகிச்சை செய்வார்கள்… அறுத்த பாகங்களை இணைப்பதற்காக ஒரு பச்சிலை உண்டு.
2.இரண்டையும் சேர்த்து இணைத்து விட்டால் தசைகள் ஒட்டிக் கொள்ளும்.
3.உடலுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை எடுத்த பின் அந்தப் பச்சிலைகளை இணைத்தால் இரண்டு தசைகளும் ஒட்டிக் கொள்கின்றது.

அக்காலங்களில் மலைப் பகுதியில் உள்ள புலையர்கள் என்று சொல்பவர்கள் இதைப் பயன்படுத்தி வந்தார்கள்… இன்றும் உண்டு.
1.அன்று இருந்த நிலைகள் காலத்தால் அந்தச் சக்தி இல்லை.
2.இருந்தாலும் அந்தத் தாவர இனங்கள் பூராம் மடிந்து விட்டது.

இதை வைத்துச் சில உணர்வுகளைச் சொல்லால் சொல்லப்பட்டு அந்த உணர்வை ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் அந்த உணர்வைத் தனக்குள் கவர்ந்து சில நிலைகளைப் புதிதாக அன்று உருவாக்கினார்கள்.
1.சிலவற்றை மறைத்தே சொல்ல வேண்டி இருக்கின்றது…
2.சும்மா தொட்டுத் தான் காட்டுகின்றேன்.

காரணம் இதைத் தெரிந்து கொண்ட பின் பலர் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு நாம் போக வேண்டியது இல்லை. குருநாதர் அழைத்துச் சென்று எமக்குக் காட்டியதை உங்களுக்குள் இப்போது பதிவு செய்கின்றேன்.

இப்படித்தான் மலைப்பகுதிகளில் பல பல தாவரங்கள் உருமாறியது. அத்தையை தாவர இனங்கள் இன்று இல்லை. விழுதுடன் பறித்து அதனின் இன விருத்தியே மடியச் செய்து விட்டார்கள்.

அன்று ராஜ வைத்தியம் செய்வதற்காக்க் காட்டு விலங்குகளில் சில எடுத்துக் கொண்டு அதனுடன் இணை சேர்த்து சில தாவரங்களை அன்று உருவாக்கினார்கள் அரசர்கள்.

அந்தத் தாவரங்களை வைத்து அரசர்களுக்கு ராஜ வைத்தியம் செய்வதும் அறுவை சிகிச்சை செய்ததும் இன்று விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் அன்று தாவரங்களின் உணர்வை அறிந்து அப்படிச் செயல்படுத்தினார்கள். சில பகுதிகளில் இது உண்டு

அவர்கள் எடுத்துக் கொண்ட ஒலி பாஷை ஒன்றுடன் ஒன்று மோதிய உணர்வுகளும்… ஒரு செடிக்குள் ஓதி அந்த உணர்வுகளை மோதி மோதி அந்த சொல்களை ரெக்கார்ட் செய்வார்கள். அதாவது…
1.காட்டுவாசிகள் செடியை வளர்ப்பதற்காக தனக்குள் அதைக் கொண்டு வருவதற்காக
2.செடிக்குள் மனிதனின் சொல்களைச் சொல்லிச் சொல்லிப் பதிவு செய்வார்கள்.

அது பதிவாகி வளர்ந்த பின் பல பல மருந்து வேலைகளுக்கு ஆகின்றது அக்காலங்களில் இன்னொரு பச்சிலையும் வாய்க்குள் வைத்து அதை மென்று அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒலியை எழுப்பி இன்னொரு செடிக்குள் பதியச் செய்வான்.

இன்று விஞ்ஞான அறிவியல் எப்படிப் புதுப் புது தாவரங்களை உருவாக்குகின்றார்களோ அக்காலங்களில் இப்படிச் செயல்படுத்தினார்கள்.

ஏனென்றால் குருநாதர் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டியதை உங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.