ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2024

நம் கண்களை ஞானக் கண்களாக மாற்ற வேண்டும்

நம் கண்களை ஞானக் கண்களாக மாற்ற வேண்டும்

 

உதாரணமாக புழுவிற்குக் கண்ணில்லாத போது… அது தன் எண்ணங்கள் கொண்டு ஊர்ந்து சென்றாலும்… உணவுக்காக ஆசைப்பட்டுத் தேடிச் சென்றாலும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிரிகளிடம் சிக்கும் பொழுதெல்லாம்…
1.தான் படும் வேதனைகளைத் தாங்காது
2.எது தன்னைத் தாக்குகின்றதோ அதைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

இப்படிப் பல சரீரங்களில் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றித் தோன்றித் தோன்றி… அடுத்த உடல் பெறும் பொழுது “பல நிலைகளைக் குவித்துக் கண்களாக உருப்பெறுகின்றது…”

முதலிலே எண்ணங்கள் தான் உருவானது. எண்ணத்தின் துணை கொண்டு பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை ஒவ்வொரு உயிரினமும் (தன் எதிரிகள்) தன்னைத் தாக்கப்படும் பொழுது அந்தச் சரீரத்தைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை உந்தி உந்தி… பல சரீரங்களில் அதை எடுக்கின்றது.

1.அதாவது இரண்டு நாட்களுக்கு அந்த உடலில் உயிர் இருக்கும் அடுத்த நாள் மடிந்துவிடும் ஆரம்ப நிலைகளில்
2.இப்படி நூறு சரீரங்களைக் கடந்து “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு வளர்ந்து வளர்ந்து
3.கண்களாக உடலில் உருப்பெறும் தன்மை வருகின்றது,

ஆதே சமயத்தில் ஒளி வீசி (வெயில்) மற்ற பொருளைக் காட்டும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே இருக்கின்றது. புழுவின் உயிரின் துடிப்போ… தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வரும் பொழுது
1.மணத்தால் அறிந்தாலும் தன் உணர்வால் அறிய வேண்டும்
2.பார்வையால் பார்க்க வேண்டும் என்று உணர்வுகள் தோன்றுகின்றது (தோற்றுவிக்கின்றது).

இப்படித் தோன்றிய நிலைகள் தான் கண்களாக உருவாகிறது. இதைத் தான் துவாரகா யுகத்தில் நாரயணன்… “சூரியன் கண்ணனாகத் தோன்றுகின்றான்…” என்று சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

சூரியனின் ஒளிக்கதிர்கள் நம் உடலுக்குள் ஒளிக் கதிராகக் கண்கள் காணும் நிலை வருகிறது. அதாவது
1.சூரியனிலிருந்து பாதரசங்கள் வீசப்படும் பொழுது
2.அது மற்றொன்றுடன் மோதி ஒலியின் ஒளிக் கதிர்களாக எப்படி ஆகின்றதோ
3.இதைப் போன்ற நிலைகள் அங்கே பெறுகின்றது.

இந்த உணர்வை நுகர்ந்து கொண்ட பின் தன் உடலில் பெற்ற பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் கண்களாக உருவாகி
1.இந்த உணர்வின் நினைவாற்றல் அங்கே தாக்கப்படும் பொழுது
2.எதனின் உணர்வோ அந்த ரூபத்தினை அறியும் வல்லமை பெறுகின்றது – “கண்களுக்கு அந்த ஆற்றல்…”

உதாரணமாக ஒருவர் கோபமாக இருக்கிறார்… நாம் அவரைப் பார்க்கிறோம் என்றால் அதைப் பார்த்த பின் உணர்வுகள் மோதுண்டு உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது
1.அப்போது நமக்கு கோபம் வருகிறது…
2.கோபம் வந்த பின் இருள் சூழ்கிறது… சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகிறது.

ஆனால் ஆடு மாடுகளோ மற்ற காட்டில் வாழும் மிருகங்களோ தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சி அந்த உணர்வுகள் கண்ணின் வழி வெளிப்படும் பொழுது
1.அதிலே வரும் அலைகள் மோதி குறித்த தூரத்தில்
2.கண்ணின் உணர்வலைகள் விசை உந்துதலின் தன்மை எவ்வளவு ஏற்படுகிறதோ
3.அந்த வட்டத்திற்கு ஒளியாகத் தெரியும்.
4.(மனிதனுக்கு இது போன்று தெரிவதில்லை)

இரவிலே பாம்பு பூச்சிகள் தேள் மற்ற மிருகங்களுக்கும் கண் பார்வையால் மோதுண்டு அதன் ஒளிகள் அதற்குத் தெரியும் மனிதனுக்குத் தெரிவதில்லை காரணம்…
1.மனித உடலில் விஷத்தின் தன்மை வடிகட்டப்பட்டுக் குறைத்து விட்டதனால்
2.மோதலால் ஏற்படும் ஒளித்தன்மை நமக்குள் இழக்கப்படுகிறது.

அதே சமயத்தில்… பிறர் படும் உணர்வின் தன்மை நமக்குள் மோதப்படும் பொழுது… உணர்ச்சிகள் எழுந்து அறியும் தன்மையாக… அறியும் ஆற்றல் நமக்குள் பெறுகின்றது.

ஒரு எண்ணம் நமக்குள் மோதினால் அதனின் உணர்வின் தன்மை கொண்டு
1.அவன் என்ன செய்கின்றான்…?
2.குற்றம் செய்கின்றான்… அல்லது குற்றமற்றதாக இருக்கின்றது… என்ற உணர்வின் செயலாக்கங்களை நாம் உணர முடிகிறது.

ஆகவே மனிதன் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன்…!

பல கோடிச் சரீரங்களில் தான் கூர்மையாகப் பார்த்துத் தன் எதிரிடமிருந்து தப்பித்துக் கொள்ள… எத்தனையோ உணர்வுகளைச் சுவாசித்து… சுவாசித்து… தான் எதை எதை எல்லாம் கூர்மையாகப் பார்த்ததோ அதனின் வலிமையைச் சேர்த்துச் சேர்த்து… இப்படித் தீமைகளை அகற்றிடும் உடல அமைப்பினை உயிர் உருவாக்குகிறது.

அதாவது தீமைகளைப் பிளந்திடும் அணுக்கள் உருபெற்று அதற்குண்டான உறுப்புகள் உருவாகி மனிதனாக உருவாக்குகிறது… பரசுராம்…! இயற்கை நிலைகள் எது விளைந்தாலும் அதனைச் சமப்படுத்தி உணவாக உட்கொள்ளும் நிலை பெறுகின்றோம்.

இப்படிப் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரை இந்த உயிர்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள மரண பயங்களை ஏகி
2.அந்த மரண பயத்தால் நான் நுகர்ந்த உணர்வுகள் வலுவாகி
3.இந்த உணர்வின் தன்மை கொண்டு உடல் மடிந்தாலும்
4.வலுவான உணர்வுகளைச் சேர்த்து… பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக இன்று வந்துள்ளோம்.

மனிதனான பின் பல தீமைகளை அறிந்தாலும் பலராம்…! எல்லாவற்றையும் அறியக்கூடிய ஆற்றல் பெறுகின்றோம்.

அதாவது சமப்படுத்தும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது தீங்கு செய்கிறான் என்றால் அதை நுகர்ந்த பின்
1.அந்த தீங்கு தனக்குள் வராதபடி சமப்படுத்த முடிகின்றது…
2.கண்டிப்பாகச் சமப்படுத்த வேண்டும்… அதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.