ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 6, 2024

தலைப்பென்ன தலைப்பு…! தலைவனையே தலைப்பாக்கு…! தந்திடுவான் சகலத்தையுமே…!

தலைப்பென்ன தலைப்பு…! தலைவனையே தலைப்பாக்கு…! தந்திடுவான் சகலத்தையுமே…!

 

“உரைக்கும் உரை எல்லாம் உனதாக இருந்திடவே” என்பது யாரைப் பார்த்துப் பாடுகின்றார்…?

“உரைத்து விடு ஈஸ்வரா… உரைக்கும் உரை எல்லாம் உரைத்து விடு ஈஸ்வரா…!” எப்பாடளைப் பாடினாலும்
1.முதல் அடியை அவனுக்கு அருளிவிடு
2.தந்திடுவான் அப்பாடலின் தத்துவத்தையே.

உண்ணும் உணவெல்லாம் உனதாகும்
உறங்கும் உறக்கம் எல்லாம் உனதாகும்
உணர்வில் உணர்வாக ஊன்றி விடு…
உலகாண்ட ஈஸ்வரனே…!

உலகை என்னும் பொழுது இந்த ஒரு உலகை மட்டும்தான் குறிக்கும். “உலகாண்ட ஈஸ்வரனே” என்னும் பொழுது அதன் அர்த்தமே வேறு.

இப்பாட்டின் தன்மையில் தான் உலகத்தன்மை எல்லாம் உள்ளது. பாடலை ஆடிக் கொண்டே பாடிவிட்டார்… உணர்வையும் மாற்றிவிட்டார்… தனதாக எண்ணிவிட்டார்… “தந்தேனா என் பாடலை…?”

உனதல்ல எனதல்ல இவ்வுலகம் என்பதன் பொருளும் இதுவே தான். தன் உதயத்துக்கு வந்தது என்று எண்ணிப் பாட்டை பாடி வந்தான்.
1.தலைப்பென்ன தலைப்பு…!
2.தலைவனையே தலைப்பாக்கு…!
3.தந்திடுவான் தனிக்கவிதைகளை.

உன் சஞ்சலத்திற்கு விடையளிக்கின்றேன்…!

மனமான சஞ்சலத்தை வளர விடாமல் மனதில் உள்ள எண்ணத்தைப் பெரும் சஞ்சலம் ஆக்கி விடாமல் “அவனிடம் (ஈசனிடம்) சமர்ப்பித்தால் அவன் அளிப்பான் அதன் விடையை…!”

சித்தர் என்பவர் யார்…? எந்த நிலையில் அவர்கள் உள்ளார்கள்…? என்னும் சஞ்சலம் ஏன் உள்ளது…? சித்தரும் ஞானியும் எப்படி உள்ளார்கள்…? என்ற எண்ணச் சஞ்சலத்தின் உள்ளே தவிக்கின்றாய்.

மனிதனால்… மனிதனால் என்னும் பொழுதெல்லாம் எண்ணுகின்றாய். ஆண் வர்க்கத்தையே. “ஆண்… பெண்” என்னும் மாற்று நிலை எனக்கில்லை (ஈஸ்வரபட்டர்).

உன் சஞ்சலம்…
1.உடலுடன் உள்ள போகர் எப்படி உள்ளார்…?
2.அவரின் உறக்க நிலை என்ன…?
3.உண்ணும் நிலை என்ன…? உடலின் நிலை என்ன…?
4.உடலுடன் உள்ள போகர் அந்நிலையில் என்ன செய்வார்…? என்று எண்ணுகின்றாய்.

“ஈஸ்வரபட்டரான… என் நிலையை எண்ணிப்பார்…” உடலை விட்டு நான் பிரிந்து சென்று விட்டேன் என்ற உண்மையைச் சாமி (ஞானகுரு) சொன்னதை எடுத்துக் கொண்டுள்ளீர்கள்.

போகரின் நிலையில் அவர் எந்த நிலையில் உள்ளார் என்று ஒருவரும் சொல்லாததினால் நீங்களாக அறிந்திட்ட நிலையில் மனச்சஞ்சலம் கொண்டுள்ளீர்கள்.

எந்நிலையில் தெரிந்து கொண்டீர்கள் அவர் நிலையை…? அந்நிலையிலேயே தெரிந்து கொள்ளுங்கள்.
1.அவர் உயிருடன்… உடலுடன்… உலகமுடன் உள்ளார்.
2.அந்த உடலிலிருந்து அவன் ஆன்மா எந்நிலைக்குச் சென்றாலும் அந்த ஆத்மா திரும்பவும் அவர் உடலுக்கே வருகின்றது.
3.அவர் ஆத்மாவுக்கு எடுக்கும் உணவையே அவர் உடலுக்கும் அளிக்கின்றார்.
4.அவர் உடலுக்கு உணவு வேண்டாம் உணர்வும் வேண்டாம்
5.அந்த உடல் எந்நிலையிலும் எந்த நேரத்திலும் அது அமர்ந்த நிலையிலேயே தான் உள்ளது
6.உடலில் உள்ள ஆத்மா தான் எந்த நிலைக்கும் வருகிறது.

அவர் உடலைப் பாதுகாக்கும் தன்மை எல்லாம் “அவரின் தியான நிலையிலேயே” உள்ளது.
1.உடலில் உள்ள ஆத்மாவை எங்கும் பறக்க விடுகிறார். பழனியில் மட்டும் அவரின் ஆத்மா சுற்றவில்லை.
2.பழமுதிர்சோலையிலும் சுற்றுகிறது. பழனியப்பன் எங்கெல்லாம் உள்ளானோ அங்கெல்லாம் செல்கிறது.
3.முருகா…! என்னும் நாமம் எந்த உள்ளத்தில் இருந்து அபயமாக அழைக்கின்றதோ அங்கெல்லாம் செல்கிறது.

“சித்தர்கள் எல்லாம் சோம்பேறி… ஞானிகள் வேலை இல்லாதவர்கள்… என்ற எண்ணம் தான் மனிதருக்குள்ளே…” போகர் அவர் இருந்த நிலையிலேயே அவ்ஆன்மா அழைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று அருள் பாலிக்கின்றார்.

உலகையே சுற்றுகின்றார்… முருகா…! என்னும் இடமெல்லாம் சுற்றுகின்றார்… இன்றும் உள்ளார்… உலகுடனே கலந்துள்ளார்.

நான் பிறந்த பயனையும் தான் பெற்ற உடலையும் தன் ஆத்மாவையும் உலகுடனே ஒன்றச் செய்துள்ளார். உலகம் அழிந்தாலும் அவர் நிலை அழியாது.

இந்நிலையைப் புகட்டவே உன் நினைவில் கனவைத் தந்தேன் உலகெல்லாம் அழியும் நிலை உள்ள போது மலை மீதுள்ள கோவில் மட்டுமே சிலர் அங்கே இருந்து காட்டியதன் பொருள் இதுதான்.

1.போகரின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
2.ஒவ்வொரு ஞானியின் நிலையும் எண்ணத்தில் வரும்.

ஒவ்வொரு ஞானிக்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது. அவரவர் பூஜித்த முறையிலும் அவரவர் தியானத்தின் தன்மையிலும் அருளியுள்ளார்கள். அப்பரமேஸ்வரனின் அருள் எல்லாம்… “உங்கள் நிலை என்ன…?” என்பதை நீங்களே எண்ணிக் கொண்டு உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள்.

அவர் அருள்வார் நல் ஆசிகளை. இன்றைய பாட நிலை புரிந்ததா…?

இரத்தினகிரி பிறந்திடுவார் பெரும் புலவனாகப் பாடிடுவார் அவர் புகழை…! அவன் அருளில் பிறந்தவன் நீ.

பகர்ந்திடுவாய் பகர்ந்திடுவாய் பரமேஸ்வரனே
பாரெல்லாம் பாடிடவே பகர்ந்திடுவாய் பரமேஸ்வரனே
பஞ்சம் பஞ்சம் என்கிறார்கள் பாமரர்கள்
பாற்கடல் அளவு தந்தாலும் பஞ்சம் தான்
பஞ்சம் என்னும் பசியைப் போக்கிவிட்டு
பரஞ்சோதியானவனை வணங்கிடவே
பகர்ந்துவிடு பரமேஸ்வரா...!