ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2024

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

 

அகஸ்தியன் குழந்தைப் பருவமாக இருக்கப்படும் பொழுது நடந்த நிகழ்ச்சிகள் இது.
1.வானை நோக்கித் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது சூரியனைப் பார்ப்பதும்
2.அதைக் கண்டு சிரிப்பதும் அதில் நடக்கும் மோதல்களைக் காணுவதும் மற்ற பிரபஞ்சங்கள் தெரிவதையும்
3.அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் உற்றுப் பார்க்கின்றான்

நமது குருநாதர் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது அகஸ்தியன் வாழ்ந்த காலங்களில் அவன் இருந்த இடங்களில் இந்த உணர்வலைகள் எப்படிப் பதிந்துள்ளது…? என்று எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.

அந்த உணர்வுகளை நுகர்ந்தால்
1.அவன் கண்டதை நாமும் பார்க்கலாம் என்ற நிலைக்காக அந்த உணர்வை நுகரும்படி செய்கின்றார்.
2.வான்வீதியில் நடக்கும் அதிசயங்களை நீ பார்…! என்கின்றார்.

ஏனென்றால் அகஸ்தியன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்… அவன் உணர்வுகள் பூமியில் படர்ந்துள்ளது. சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துள்ளது.

அதை நுகர்ந்து காவியமாகச் சொல்லி கதையாகச் சொல்லி நடந்த நிகழ்ச்சிகளை
1.இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லச் சொல்ல அதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் எனக்குள் வருகின்றது.
2.குருவின் வலு கொண்டு அவர் நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் வரப்படும் பொழுது அதை நான் அறியும் பருவமும் வருகின்றது.

அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை குருநாதர் இப்படித்தான் எனக்குத் தெளிவாகக் கூறினார்.

நாளடைவில்… குழந்தையாக இருக்கும் அகஸ்தியனைக் கையிலே தூக்கிச் சென்றால் கொடூர மிருகங்களிடமிருந்து தாய் தந்தையைக் காக்கும் நிலை வருகின்றது… மற்ற உயிரினங்களும் இவர்களைத் தாக்குவதில்லை.

ஐந்தாவது வயது ஆகும் பொழுது அந்தக் காட்டிற்கே அரசன் ஆகின்றான் புலி சிங்கம் மற்ற மிருகங்கள் ஒடுங்கி விடுகின்றது விஷத்தன்மைகளை ஒடுக்கும் சக்தி வரும் பொழுது
1.அவன் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும்
2.கோபம் கொண்டோர் கொதித்தெழும் உணர்வு கொண்டோர் நிலைகளும் அங்கே ஒடுங்கி விடுகின்றது.
3.போர் முறை என்ற நிலையே மாறி விடுகின்றது.

ஏனென்றால் அன்று வாழ்ந்தவர்கள் ஒரு எல்லைக்கு எல்லை மாறி வரும் போது மனிதனுக்கு மனிதன் தாக்கிடும் நிலையே வருகின்றது. அந்த நிலையில் அகஸ்தியன் அதைத் தடுத்து அங்கு இருப்போரைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

இளமைப் பருவத்தில் அவன் அறிந்த உணர்வின் தன்மை வானை நோக்கி உற்றுப் பார்த்து துருவத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்ட பின் அந்த்த் துருவத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றான்.

அதனால் தான் அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் வந்தது. அவனுக்குள் மேலும் மேலும் வலுகொண்ட நிலையாகி எதையுமே அறியும் ஆற்றலாக அறிவின் தன்மை அதிகரிக்கின்றது.

அவன் வானை நோக்கிப் பார்க்கும் பொழுது நமது சூரியநுக்கு 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரும் விஷத்தன்மையை எப்படி கவர்கின்றது என்று அறிகின்றான்.

அதிலே சூரியன் வெளிப்படுத்தும் உணர்வுகள் கவர்ந்து வரும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது மின்னல்களாக மாறுவதும்… இந்தப் பொறிகள் பல பாகங்கள் பரவி ஒளி அலைகளாக மாறுவதும்… மற்ற கோள்களில் இருந்து வரக்கூடியது இதற்குள் கலந்த பின் அணுக்கள் மாற்றப்பட்டு… ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு அது எப்படி மாறுகின்றது…? என்பதையும் இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகின்றது…? என்பதையும் அவன் காணுகின்றான்.

பிரபஞ்சத்திற்குள் சூரியனின் இயக்கத்தன்மை ஏற்பட்டு பூமிக்குள் உருப்பெற்ற மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினை அவன் அறிகின்றான்.

இப்படி அறிந்தவன் தனது 16வது வயதில் திருமணமான பின்… தான் இளமைப் பருவத்தில் இருந்து எதை எதையெல்லாம் அறிந்தானோ அவை அனைத்தையும் மனைவிக்குப் போதிக்கின்றான்.

1.மனைவி அதைச் செவி வழி கேட்டுப் பதிவாக்கி அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.அதையெல்லாம் காண வேண்டும் என்று விரும்பி அந்த உணர்வுகளைத் தனக்குள் நுகர்கின்றது.
3.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று வளர்த்துக் கொள்கின்றனர்.

இரு உணர்வும் சேர்த்து நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வின் அணுவாக உருவாக்கும் தன்மையும்… “ஒளியின் சிகரமாக” உருப்பெறும் அணுவாக ஆகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வரும் நஞ்சின் தன்மையை அவர்கள் கண்டாலும்
1.இருவரும் அதைப் பெற வேண்டும் என்று தங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.மின்னல் வரும் பொழுது எப்படி ஒளிக்கதிர்களாகப் படர்கின்றதோ
3.இந்த உணர்வின் தன்மையைச் சேர்த்து அந்த ஒளிக்கதிர்களை உருவாக்கும் நிலையும்
4.அது எப்படி மின்னும் பொழுது இருளை மறைக்கின்றதோ நஞ்சினை அடக்குகின்றதோ
5.அதைப்போல ஒளியின் உணர்வாக இருவரது உணர்வுகளிலும் இந்த அணுவின் தன்மை உருவாகின்றது.

அப்படி உருப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்

அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் சக்திகளைத் தான் உங்களைப் பெறச் செய்து கொண்டே வருகின்றேன் குருநாதர் காட்டிய வழியில்.