ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2024

முக்காலத்தையும் அறியும் சக்தி கொடுக்கின்றோம்

முக்காலத்தையும் அறியும் சக்தி கொடுக்கின்றோம்

 

காட்டுப் பகுதிகளுக்குள் குருநாதர் அழைத்துச் செல்லப்படும் பொழுது அங்கே மனிதனும் மிருகங்களும் சந்தர்ப்பத்தால் மடிந்த நிலையில் அந்தச் சடலங்கள் மண்ணிலே பதிந்து கிடக்கும் போது
1.அந்த அழுகிய உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து கொள்வதும்
2.மற்ற தாவர இனங்களில் வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்வதும்
3.இன்னொரு விஷச் செடியின் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்வதும்
4.அதே சமயத்தில் முதலில் சொன்ன தாவர இனத்தின் மணம் அழுகிய மணத்தைக் கண்டு அஞ்சி ஓடி வரப்படும் பொழுது
5.மனித உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் விஷச் செடியின் மணத்திலே தாக்கிய பின் கிறு கிறு என்று சுழன்று
6.இது அனைத்தும் ஒன்றாக சேர்த்து மனித உடலில் உருவான உணர்ச்சிகளும் கலந்து “புது விதமான செடியாக” உருவாகின்றது.

அந்தச் செடிகளை மனிதன் தொட்டால் “கரண்ட் இழுப்பது போன்று” சில செயல்களைச் செயல்படுத்துகின்றது. இதையே மருந்தாக அரைத்துக் கொடுத்தால் பல பகைமை உணர்வுகளை நீக்கும் சக்தியும் வருகிறது.
1.அதனுடன் எந்தெந்த மருந்துகளைச் சேர்த்தால் எந்தெந்தத் தாவரங்களைச் சேர்த்தால்
2.மனித உடலில் விளைந்த தீமைகளை ஊடுருவி அந்த உணர்ச்சிகளை எப்படி மாற்றுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். ஆனால் அந்த இடத்திலே மிதித்த பின் கீழே ஒரு கொடி படர்ந்துள்ளது. கொடி மேல் என் கால் பட்ட பின் எனக்கு நினைவு இழந்து விட்டது. மறதிப் பூடு என்று சொல்வார்கள்…!

இந்த செடியினுடைய தன்மை என்ன…? ஏன் இப்படி வளர்ந்தது…? என்ற நிலைகளை குரு விளக்குகிறார்.
1.பல மனிதர்கள் உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் இரக்கமற்றுத் தாக்கி இரத்தக்கசிவுகளாகி இருந்தால்
2.இதைப் போன்ற சில பூடுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து அங்கே உருவானதால்
3.அங்கே தாக்கும் போது “அவர்கள் எப்படி நினைவிழந்தார்களோ” இதைப் போன்று
4.இந்தக் கொடியை மிதிப்பவர்களையும் நினைவிழக்கச் செய்கின்றது…?

ஆனால் மற்ற உயிரினங்களை நினைவிழக்கச் செய்வதில்லை.

மனிதர்கள் வரப்படும் பொழுது அவனுடைய உதிரம் அந்த உணர்வுகள் படர்ந்து இருப்பதனால் இந்த பூடுகள் எப்படி விளைகின்றது…? என்று தெளிவாக எனக்கு உணர்த்திக் காட்டுகின்றார்.

மனிதனாக நாம் வாழும் நிலையில் தாவர இனச் சத்தை நாம் நுகர்ந்த பின் அந்த உணர்வின் இயக்கங்கள் அது அணுக்களாக விளைவதும் அதன் வழி தான் பல கோடிச் சரீரங்களை மாற்றி வந்திருக்கின்றோம்.

ஒன்றுடன் ஒன்று… ஒன்றுடன் ஒன்று கலந்து… கலந்து… “வெங்காயச் சருகு போன்று அது தோடாக” (மேல் தோல்) எப்படி இருக்கின்றதோ நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் மற்ற மிருகங்களிலிருந்து நுகர்ந்த உணர்வுகள்
1.அணுக்களில் அடுக்கடுக்காக மாறி அது ஒரு முழுமை அடைந்து
2.அந்த உணர்வைப் போல எத்தனையோ கோடி அணுக்கள் சேர்த்துத் தான் மனிதனாக உருவாகக் காரணமானது.

மிருகத்திலிருந்து மனிதனாகத் தோன்றிய நிலையில் அந்த உணர்வு கொண்டு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தியும் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.நம்முடைய முப்பிறவிகளின் நிலையும் பார்க்கலாம்
2.இப்பிறவியின் வாழ்க்கையின் நிலையை அறியலாம்
3.அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையினையும் அறியலாம் என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

மனிதனாகப் பிறந்த நிலையில் இன்று இருக்கும் இந்த உடலில் இருந்தே நாம் பிறவியில்லா நிலை எப்படி அடைய வேண்டும்…? என்பதற்காகத்தான் இதை எல்லாம் குரு எனக்குக் (ஞானகுரு) காட்டினார்.