ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 8, 2024

துருவ நட்சத்திரத்தின் பற்றை அதிகரித்துப் புவியின் பற்றைத் தகர்க்க வேண்டும்

நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காதபடி தடுக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை துரிதமாக எடுத்து உடலுக்குள் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்க உதவும்.

இதை எல்லாம் அதிகாலையில் நாம் அதிகமாகப் பெருக்கி வர வேண்டும்
1.அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் அதிகரிக்கிறது.
2.இந்தப் புவியின் பற்றை நாம் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கின்றது.

இந்த உயிர் உடலில் சேர்த்த தீமையின் உணர்வுகளை… துருவ நட்சத்திரத்தின் அருகில் இந்தத் தீமைகள் செல்லப்படும் பொழுது
1.உடலில் பெற்ற தீமையின் உணர்வுகளைக் கருக்கிவிட்டு இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது
2.எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அது மாற்றி விடுகின்றது.

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக உட்கொண்டாலும்… அந்த விஷம் அதற்குள் மீண்டும் சேமிக்கப்பட்டு நாகரத்தினமாக மாறுகின்றது.

அது போல் நமது வாழ்நாளில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க… நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

மிருகங்கள் தான் வாழ தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது அந்த உணர்வை வளர்த்து… அந்த உடலுக்குப் பின் மாற்று உடலாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.

மனிதரான நாம் அன்பும் பரிவும் கொண்டிருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அந்த நோயின் வலிமை மிக சக்தி வாய்ந்தது… விஷம் கலந்தது.

அதை நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது… பின் அந்த நல்ல குணங்களையும் வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அந்த அணுக்கள் மடியத் தொடங்கும்… உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.

குறைந்த உணர்வின் தன்மை இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது உயிர் உடலை விட்டுச் செல்லும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும்.

ஆனால்
1.அருள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலை விட்டுச் செல்லும் ஆன்மா
2.எதன் வலுக் கொண்டதோ அதன் அருகில் அழைத்துச் செல்லும்.
3.அங்கே வெளிப்படும் தீமைகளைக் கருக்கிடும் உணர்வுகள் பட்ட பின்
4.இந்த மனித வாழ்க்கையில் நம் ஆன்மாவில் பட்ட தீமைகளைக் கருக்கி விட்டு
5.உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால் சென்று… பேரருள் பேரொளியாக அழியாத ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.

இந்த உயிர் தோன்றி மனிதனாக ஆன பின் தான் உயிர் முழுமை அடைகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றது. ஆகவே
1,நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
2.அந்த மகரிஷிகள் பெற்ற அழியா ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.

வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்று நீங்கள் வாழப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).