ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2024

நமக்கு வேண்டிய பாதுகாப்புக் கவசம்

நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களும் விஷத்தன்மையான செயல்களையும் நாம் நுகரப்படும் பொழுது… நமது ஆன்மாவை… இந்த உடலுக்குப் பாதுகாப்பாக இருப்பதை… சுத்தமாக அதை வலு இழக்கச் செய்து விடுகின்றது.

காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்திகள் என்று உண்டு. அந்த எதிர்ப்பு சக்தி கொண்ட அணுக்களை… அந்த அமிலத்தின் தன்மைகளைக் குறைந்து விடுகின்றது. ஆக…
1.எதிர்ப்பு சக்தி இல்லாததனால் தீமை செய்யும் உணர்வுகள் ஒரு நொடிக்குள் ஊடுருவி
2.உடலில் சீக்கிரம் நோய் வருவதும்… பல தொல்லைகள் கொடுப்பதுமாக வந்துவிடுகிறது.

இன்று உலகெங்கிலும் நடக்கும் மத பேதம், இன பேதம் மொழி பேதம் இது போன்ற அசுர உணர்வுகளால்… சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்ததனால்… நாம் கண் கொண்டு பார்த்து அவைகள் நமக்குள் பதிந்த பின் என்ன நடக்கிறது…?

விஷத் தன்மை கொண்ட கதிரியக்கங்கள் பரவி பூமியில் எப்படி ஓசான் திரை கிழிந்ததோ… இது போன்று மனித உடலுக்குள் நம்மைக் காக்கும் நமது ஆன்மா பாதுகாப்பான நிலைகளிலிருந்து அதுவும் பிளக்கப்பட்டுவிடுகிறது.

அதனால் மனிதனுடைய நல்ல சிந்தனைகளைச் சீர்குலைக்கச் செய்துவிடுகிறது. மனிதன் உறுதியான உடல் பெற்று இருந்தாலும்
1.தீமைகளை எதிர்க்கும் அந்த சக்தி கொண்ட அந்த அமிலங்கள் குறைத்து விட்டதனால்
2.நம் உடலில் உள்ள பாதுக்காப்புக் கவசத்தை அது மறைந்து விடுகிறது.

அதை எல்லாம் மாற்றிட கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றச் செய்து… அதிலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை ஏங்கிப் பெற்று நமக்குள் சேர்த்துக் கொண்டால் “நம் ஆன்மாவை… அந்தப் பாதுகாப்பு கவசத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்…” தீமைகள் புகாது ஆன்மாவை வலுவாக்கிக் கொள்ளலாம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் விதமாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை ஆங்காங்கு இந்த ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது
1.எல்லோருக்கும் “அவருடைய உயர்ந்த சக்தி” கிடைக்க ஏதுவாகின்றது.
2.ஒன்று சேர்க்கும் உணர்வுகள் வருகின்றது
3.பகைமை உணர்வுகள் மாற்றப்பட்டு அன்பு கொண்டு அரவணைத்து வாழும் நிலைகள் வருகின்றது.
4.உயிரைக் கடவுளாக மதிக்கச் செய்கின்றது… உடலைக் கோவிலாக மதிக்கச் செய்கிறது
5.மனிதனுக்குள் உள்ள பண்பு கொண்ட உணர்வுகளைத் தெய்வமாக மதிக்கும் தன்மை வருகிறது
6.இன பேதம் அகற்றப்படுகின்றது… மன பேதம் அகற்றப்படுகிறது…
7.வெறுப்பு வேதனை போன்றவைகள் நமக்குள் நெருங்காது தடுக்க முடிகிறது.
8.அருள் உணர்வுகளை வளர்த்து நாளடைவில் பகைமை உணர்ச்சிகளை அறவே அழித்திடும் சக்தியாக நமக்குள் வளர்கின்றது.