ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2024

அந்தணன்

வான்மீகியார் இராமனாக நாம ஜெபம் உபதேசிக்க…
1.அதைத் தன்னுள் ஏற்றுக் கொண்டிட்ட… பூரண முழுமையை உபதேசிக்கத் தகுந்த நிலை பெற்றிடும் விஸ்வாமித்திரன்
2.தனித்துவ தன்மையை உலகினுக்கு உணர்த்தி வழி காட்டவே
3.விஸ்வாமித்திரன் வான் தொடர்பாக பூமியின் ஈர்ப்பில் “அபூர்வ தனித்துவ குணத்தன்மைகள் பெற்றிடவே”
4.நடந்திட்ட யாகத்தை வில்லேந்தும் செம்மல் எண்ணத்தின் பலமே…
5.நற்சுவாச நல்நோக்கு செயல்படும் காலத்தில்
6.எண்ணத்தின் பாங்கே ஆங்கு சக்கர வியூகமாகக் காத்திடும் செயலை உபதேசித்து அருளி
7.நல்வழி செயல் நடத்திடும் மெய் யாகத்தின் தன்மைகள் அன்று மறைபொருள் ஆக்கப்பட்டது.

இன்று உம்மையே (இதைப் படிப்பவர்கள்) அச்செயல் நடத்திடும் பாத்திரப் படைப்பாக்கினேன்.

“அக்னி அஸ்திரம்” என்ற எரி அம்பு பாதுகாவலாக… இராமனாக… வான்மீகியால் விசுவாமித்திரர் பெற்று உயர்ந்திட… யாகம் காக்கப் பெற… அதிலும் “ஓர் சூட்சுமம்” மறைபொருள் காட்டும்.

மூர்க்க குணத்தன்மைகளை வென்று காட்டிய “வான்மீகி” வனவேடு குலத்தினனாக அந்தணர்களும் சத்திரியர்களும் ஒருவரை ஒருவர் அழித்திட முனைந்த செயலை நீக்கிட்டுக் கர்வ சம்ஹார மூர்த்தியாகக் கீர்த்தி பெற்றிட்டதே அவரின் ஆக்கம்.

அந்தணன் என்பவன் யார்…? என்று வழி அமைத்திட்ட வழக்கங்களைப் பழக்கத்தில் கொண்டிட முனைந்தனரா…?

அக்கால நாகரீக மேம்பாட்டிலே அந்தணருக்கு என்று சிறப்பு இடம் உண்டு. அதைத் துஷ்பிரயோக செயல்கள் நடத்திட்டு… பெற்றிட்ட கீர்த்தியை மாய்த்திட்ட நிலைகளும் உண்டு.

1.தனக்கென வாழாதவனும்… பிறருக்காக வாழ்பவனும்… இந்த இரண்டு சொற்களின் கருத்துக்களை கடைப்பிடிப்பவனே அந்தணன்… பிறப்பினாலன்று…!
2.சகல ஜீவர்களுக்கும் தவம் கொண்டு உயர் ஞான சித்தில் திளைத்து
2.சித்தன் நிலையாகப் பெறும் பேறு காந்தப்புல இயற்கையின் சக்தியை சக்தியுறச் செய்திடும் செயலுக்கு
3.இவ்வுலகிற்கு வழிகாட்டுபவன் யாராக இருந்தாலும் அவன் அந்தணனே…!

பிறப்பில் வேடுவன்… செயலில் அவன் அந்தணன்…!
1.விஸ்வாமித்திரர் தான் வெற்றி பெற்றிட்ட சக்தியின் வலிவு கொண்டு அந்தணன் சம்ஹாரச் செயல் நடத்திட முனைந்த போது வான்மீகியால் தடுத்து ஆட்கொண்ட செயலும்…
2.பிறப்பில் அந்தணன்… பரசுராமர் சத்திரிய சம்ஹாரம் செய்திடுவேன் என்று கொண்ட எண்ணத்தின் வஞ்சத்தை மாற்றி அமைத்து
3.சாந்த குணசீலனாக்கிய… வஞ்சம் தவிர்த்த வேடனை வழி நடத்திய அந்தணன்
4.இராம காவியம் இன்று நிலை உலகின் கண் பல இடங்களில் பரப்பிட்ட விஸ்வாமித்திரன் உத்வேக செயலுக்கு வழி நடத்திட்ட மாமகான் – வான்மீகி.

மனிதன் தெய்வநிலை பெற்றிடும் சூட்சம இரகசியங்கள் நாற்பூத புரவிகள் ஐம்பூத சக்தியாகச் செயலுறும்… இயற்கையின் தத்துவ சாரங்களை அனைவரும் பெற்றிடவே… காட்டிட்ட அனுபவ ஞான வழிகள் பல உண்டு.

பாடத்தின் கடினம்... விண்டு உரைப்பதில் தாமதம் ஆகின்றது.