ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2024

சந்தர்ப்பவசமும் சாப விமோசனமும்

ஒன்றினுள் இயங்குகின்ற இயக்கம்… அந்த இயக்கமாகச் செயலுறும் சக்தி… உயிர்த் தொகைகள் எதுவாயினும்… பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட மனிதனாகினும் சரி… “சந்தர்ப்பவசம் என்பது”
1.உயிரணுக்கள் உதித்திட
2.இணைந்து கொண்டிடும் உருவாக்கச் செயல் நிகழ்வுகள் ஒன்றினுள் மற்றொன்று ஒன்றி…
3.தத்தமது குண இயல்பு நீங்கப் பெற்றுப் புதிதென உருக்கொள்ளும் செயல் கூறுகள்.

வான் தொடர்பின் சூட்சமங்களை… ஞானம் பெற விழையும் ஞானச் செல்வங்கள் தாம் பெற்று உயர்ந்து கொண்டிட… தம்முள் விளங்கிக் கொள்வதே சந்தர்ப்பவசம்.

உலகோதய நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களின் “வித்தியாசங்களைக் காட்டவல்லவையப்பா சந்தர்ப்பவசம்...!”

பால்வெளியில் கலந்து இயங்கும் இயக்க கதிகள்… செயல்படுநிலையை படைப்பின் படைப்பாக வளர்ச்சியுறும் ஆக்கமும்… அந்த ஆக்கமே மறைபொருளாகின் இவ்வாழ்க்கை சாகரத்தில் ஜீவன் கொண்ட உயிர் நிலைகள்…
1.சரீர நிலை விடுத்த இயக்கத்தில் ஓடி (இறப்பு)
2.தமக்கொத்த எண்ணத் தொடர்பு கொண்டிட்ட சரீர இயக்க கதி ஜீவனுடன் ஒன்றி விடுவது
3.புவி ஈர்ப்பில் செயலுறும் உயிர்த்தொகைகளின் மறைபொருள் இயக்க சந்தர்ப்பவசம்.

வான் இயக்கம் புவி இயக்கம் இந்த இரண்டு தொடர்களில்… புவி ஈர்ப்பின் இயக்க வான் தொடர்பு… சந்தர்ப்பவசம் ஆக்கும் உயிர் நிலைகாட்டும்.

மாமகரிஷிகள் இந்நிலையை விளக்குவதே “சாப விமோசனம்…”

தாய்மை என்ற அன்பு குணம் வளர்க்கும் மனத்தின் திறன் கொள்ளும் ஜெபம் எதுவோ “அதுவே மந்திரம்…” சகலத்திற்கும் மனத்தின் திறன் விளக்கிக் கொள்ளவே அனுபவ ஞான உதய மெய்ஞான விழிப்பால் வளர்வது.. சுடர்தல் எனும் ஆத்ம பலம் பெற்றிடும் ஒளி நிலையப்பா.

இராம காவியத்தில் நடைமுறை சந்தர்ப்பவச சாபங்கள் என்று
1.இராவணன் பெற்றுக் கொண்டிட்ட சாபம்
2.தசரதன் பெற்றிட்ட சாபம்
3.வாலி பெற்றிட்ட சாபம்
4.கந்தர்வன் பெற்றிட்ட சாபம் என்று
5.பல இடங்கள் சந்தர்ப்பவசம் நிகழ்த்தும் முன் வினைத் தொடர் என்று உணர்த்தினாலும்
6.விமோசனம் என்பதன் பொருள் காண வேண்டுமப்பா.