ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2024

ஞானிகள் நமக்குக் கொடுத்ததெல்லாம் தப்பா…?

ஆண்டவன் பெயரைச் சொல்லி… சாமி பெயரைச் சொல்லி… நான் அதைச் செய்து தருகின்றேன்
1.ஆண்டவனயே என் கையில் வைத்திருக்கிறேன்… தெய்வத்தைக் கைவல்யப்படுத்தி வைத்திருக்கின்றேன்
2.உனக்குப் பல கோடி கிடைக்கும் என்று ஆசைகளை ஊட்டுவோர் வழியில் சிக்கி மனித ரூபத்தையே இன்று சிதறடித்துக் கொண்டுள்ளோம்.

ஏனென்றால் கடைசி நிலையாக இருக்கக்கூடிய நாம் இன்று எதைப் பெறுகின்றோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள். மனித உடலில் சகலத்தையும் உருவாக்க முடியும் என்று அரச நிலைகள் கொண்டு சாகாக்கலை ஆகின்றோம்.

ஆனால்
1.ஞானிகள் வேகாநிலை பெற்றவர்கள்.
2.மீண்டும் ஒரு உடலுக்குள் புகாது ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

வேகாக்கலை என்றால் நாம் தீயிலே குதித்தாலும் இந்த உயிர் அது வேகுவதில்லை. உணர்வுகள் கருகுகின்றது உணர்ச்சிகள் மாறுகின்றது உடல்கள் கருகுகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் அந்த கருகிய உணர்வை உயிர் எடுத்துக் கொண்டு அந்த உணர்வுக்குத் தக்கவாறு “எரி பூச்சியாக” அடுத்து உருவாக்கி விடுகிறது.

ஆனால் அதே சமயத்தில் இறக்கும் தறுவாயில் நண்பா..! நான் போகின்றேன்…! என்று பாசத்துடன் எண்ணப்படும் பொழுது அந்தப் பற்று கொண்ட உடலுக்குள் சென்று… எரிச்சல் தாங்காது நண்பனையும் கருக்கும் நிலைகளுக்கே கொண்டு சென்று விடுகிறது… தற்கொலை செய்யும்படி ஆகிவிடுகின்றது.

நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

இந்த வாழ்க்கையிலே நம்மால் தாங்க முடியவில்லை என்றால் உடனே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வருகின்றது செய்யும் போது நண்பன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தால் அந்த உடலுக்குள் சென்று அவனையும் தற்கொலை செய்யும்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

சில வீடுகளில் ஆக்ஸிடென்டுகள் ஆகட்டும்.
1.ஐயோ…! இப்படி ஆகிவிட்டதே… இறந்து விட்டாரே…! என்று சொல்லப்படும் பொழுது
2.விபத்தான அதே உணர்வுகளை எடுத்தால் மீண்டும் மீண்டும் விபத்துக்களை அங்கே உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.

என்ன வாழ்க்கை…? என்று தாங்க முடியாது தற்கொலை செய்து இருந்தால் அந்த உணர்வின் தன்மை வந்து குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வுகளும் விபத்துக்களும் வந்து கொண்டிருக்கும்.

இதெல்லாம் சில குடும்பங்களில் இன்று பார்க்கலாம் இதையெல்லாம் தடுப்பது யார்…? மந்திரம் தந்திரம் எந்திரம் செய்து மாற்றிவிடலாம் என்றால் முடியுமா…?

சம்பாதித்த காசை எல்லாம் அவனுக்கு கொடுத்து விட்டு “எல்லாவற்றையும் செய்தேன்… ஒன்றும் முடியவில்லை” என்ற உணர்வு கடைசி முடிவாகி தற்கொலைக்கு அழைத்துச் செல்கின்றது.

உயிரால் வளர்க்கப்பட்ட மனித உடலின் வளர்ச்சியைக் கொன்று விட்டு நாம் எங்கே தப்ப முடியும்…?

இந்த உணர்வின் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் உயிர் கடைசியில் ஆனபின் இதே உணர்வின் நிகழ்ச்சிகள் வரும். அடுத்து அதற்குத்தக்க அடுத்த உடலாக மாறும்.

பாம்புகளை எடுத்துக் கொண்டால் அதனின் கடைசிக் காலத்தில் “தாங்க முடியவில்லை” என்றால் தன் உடலில் தானே கொத்திக் கொண்டு மரணம் அடைகின்றது. அதாவது
1.விஷத்தின் ஆற்றலை அது உருவாக்கப்படும் பொழுது தன்னால் முடியவில்லை என்றால்
2.கடைசி நிமிடம் இந்த உடலிலே வேதனைப்படுவதற்கு மாறாக தன்னையே கொத்தித் தீண்டி விடும்
3.விஷங்கள் பட்டபின் மடிந்துவிடும்.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொண்டு உணர்வின் தன்மை அந்த விஷமே ஜீரணிக்க உதவினாலும்… உடலில் மேல் இந்த விஷத்தன்மை பட்டபின் அது விஷத்தன்மைகள் ஊடுருவி அந்தப் பாம்பும் மரணம் அடைகின்றது.

நல்ல பாம்பின் விஷத்தை நாம் சாப்பிட்டால் நம்மை ஒன்றும் செய்யாது அதே சமயத்தில் நம் உடல் மீது எங்காவது புண் இருந்து… அந்த விஷம் இதுலே லேசாகப்பட்டால் போதும்… ஊடுருவி நம்மைக் கொன்று விடும்.

இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்று ஞானிகள் கண்டுணர்ந்தனர். அதைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா...?

யாரும் தவறு செய்யவில்லை. அன்பு கொண்டு பரிவு கொண்டு பண்பு கொண்டு பாசம் கொண்டுதான் வாழுகின்றோம்.
1.அந்தப் பாசத்தால் பிறர்படும் துயரத்தை நுகர்ந்து அறிகின்றோம் நம் உயிரிலே படுகின்றது.
2.அவன் உணர்வு இரத்தத்தில் கருவாகி இந்திரலோகமாகின்றது
3.பின் இங்கே அதை உருவாக்கிவிடுகின்றது.

அவன் உடலில் விளைந்த விஷத்தின் உணர்வுகள் எல்லா அணுக்களிலும் ஊடுருவி இதன் உணர்வின் தன்மை கருவாக்கி நல்ல அணுக்கள் மாற்றமாகும் தன்மையே பெறுகின்றது.

இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

சர்வ தீமைகளையும் நஞ்சினையும் வென்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி பெற்ற பின்… அகஸ்தியன் என்றும் ஒளிச் சரீரமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அந்தத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி” - இன்றும் என்றும் பூமிக்குள் நமக்கு முன் வந்து கொண்டே உள்ளது.
2.அதைக் கவர்ந்து அந்த நம் உடலில் சேர்த்துக் கொண்டால்… இருளை அகற்றி நாம் ஏகாந்தமாக வாழ முடியும்

இந்த விஞ்ஞானிகள் பல மருந்துகளை மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு மனிதனை 1500 வருடங்கள் வாழ வைக்க முடியும் என்று சொல்கின்றார்கள்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.பல ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக வாழ முடியும்
2.இந்தச் சூரியன் அழிந்தாலும்… பிரபஞ்சமே காணாமல் போனாலும்
3.இந்தப் பிரபஞ்சத்திலிருந்து… அகண்ட அண்டத்தில் வரும் தூசிகளை நுகர்ந்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று விடுகின்றோம்
4.மனிதனான பின் அந்த வளர்ச்சிக்கு நாம் போக முடியும்