ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2024

வியாசகனும் கண்ணனும்

நீர் சக்தியை முதன்மைப்படுத்திடும் “கணபதி இராசாயணம்” என்பதே அகஸ்திய குரு முனிவரின் தொடர்பு பெற்றிட்ட பொழுது… தாகவிடாய் கொண்டு நீர் தேடி அலைந்த பொழுது
1.அகஸ்தியர் தொடர்பினால் பெற்றுக் கொண்ட அனுபவமே
2.“தருமபுத்திரனுக்கு… தர்ம தேவதை அருளிட்ட உபதேசங்கள்…!”

தாய்மையின் பேறு என்ற மாளப்பெரிய பூமியின் மாண்பு ஒலி காட்டும் வேகம் அறிவின் சமத்துவ பாவனை என்றே… பண்பின் வழி நாடும் ஆத்மாக்கள் உயர்வு கொண்டிட்ட எண்ணத்தால்… மனித ஜீவித வாழ்க்கையிலும் வேண்டுவது ஒன்று உண்டு.

அது… அரிதாகிய மானிடப் பிறவி… உயர் ஞானத்தால் தான் பிறவா நிலை பெறல் வேண்டும் என்பதே.

“காவிய ரிஷி” (வியாசர்) கண்டு தெளிந்த அனுபவ ஞானம். இமயத்தில் மெய் ஒலி கேட்கும் நிசப்த ஏகாந்தத்தில் அறிந்து கொண்டிட்டது என்ன…?
1.அரிதாகிய மானிடப் பிறவி
2.சுயநோக்கின் (சுயநலம்) செயல்வழிப் போக்கால் கடமை கொண்ட மனத்தின் பாங்கு…
3.தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் என்பதே,

விட்டில் பூச்சி எனத் தோன்றி மறையும் பிறப்பாக… அதைக் கௌரவர்களாகச் சுட்டிக்காட்டி… அதன் நோக்கில் மாமகான் பெற்றிட்ட அனுபவ ஞான அனுபவத்தை… இன்றும் இமயத்தின் சாரல் செல்வோர் கண்டு உணரலாம்.

மெய் ஞான விழிப்பிற்கே அது விருந்து (வியாசர் விருந்து).

மாலைப் பொழுதில் தோன்றிடும் ஏராளமான பனி லிங்கங்கள் புலர் காலைப் பொழுதிற்குள் மறைந்துவிடும் இயற்கையை… இயற்கையின் செயலில் உயர் ஞானத்தால் அன்று தெளிந்தான் வியாசக மாமகான்.

கண்ணனையும் கண்டான்…! கிருஷ்ணா என்ற ஜெபத்தைக் காட்டிடும் உருவை… (தான் கண்டதை) விண்டு கூறிடும் அனுபவத்தின் முன் உருவமாகக் காட்டி
1.மனத்தின் வளத்தை நன்னெறிப்படுத்த உயர் நோக்கால் அன்று காட்டியது…
2.இன்றோ உருவ வழிபாட்டின் வியாபாரக் கூடமாக்கியது… அது மனித மனத்தின் விந்தை.

“பச்சை வண்ண நீரமில சுவாச நாபிக் கொடியைப் பிண்டத்தில் கண்ட பொழுது…” ககன மார்க்க வழி செல்லும் வியாசக பகவான்… அண்டத்திலும் ஓர் இடத்தில்… நீர்க் கரையில் இயற்கையாகக் கண்ணன் உருக் கண்டு… அவ்வுருவைக் காட்டித் தத்துவ விளக்கங்கள் அளித்திட்ட செயலை அறிந்து கொண்டிட வேண்டும்.