ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2024

தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றும் அமிர்தங்கள் (அமிலங்கள்)

முருகனுக்குப் பல பழங்களைப் போட்டுப் பஞ்ச அபிஷேகம் செய்கின்றோம் ஐந்து கனிகளைப் போடும் பொழுது வெப்பம் காந்தம் விஷம்… இதெல்லாம் சேர்ந்து தான் சத்தின் தன்மை (பொருளை) எடுத்துக் கனியின் தன்மை அடைந்தது.

அதாவது எதன் பொருளை எடுத்துக் கவர்ந்து கொண்டதோ புலனறிவு ஐந்தாகின்றது.
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அங்கே முருகனுக்கு பஞ்சபிஷேகம் நடக்கிறது என்றால்
2.அதைப் போன்ற மணங்கள் பெற வேண்டும்… அந்தச் சுவையின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்ச்சிகளை நம் உயிரில் இணைத்து அபிஷேகம் செய்தால்
4.அது எப்படி ஐந்து விதமான சுவைகளை ஊட்டி அது பஞ்சாமிர்தமாக ஆனதோ
5.அந்த ஐந்து வகையான அமிர்தங்களாக நமக்குள் சுவை ஊட்டுகின்றது.

நம்முடைய ஐந்து புலனறிவினாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கொண்டால் இவை அனைத்தும் “பஞ்ச அமிர்தம்” என்று வருகின்றது. அது தான் காயத்ரி.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று அந்த எண்ணத்தை இயக்கினால் இதற்குப் பெயர் வசிஷ்டர்…! அந்த உணர்வின் தன்மை உயிரிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

உடலுக்குள் செல்லப்படும் போது…
1.அன்று அகஸ்தியன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதை எப்படி வென்றானோ
2.அந்த உணர்வின் ஆற்றல் நம் உடலில் சேர்கின்றது.

தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு… தீமைகளை வென்றிடும் சக்தி பிரம்மமாகிறது. அதனின் இயக்கமாக நம்மைத் தீமையிலிருந்து விடுபடச் செய்யும். அதன் சக்திக்கு அருந்ததி என்று காரணப் பெயர் வைக்கிறார்கள்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பத்தாவது நிலை அடையக்கூடிய மனித உடலில் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் எப்படி எல்லாம் சேருகின்றது என்று.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி உடலாக ஆனதோ… அதனுடன் இணைந்து வாழும் சக்தி என்று தெளிவாக்கப்படுகின்றது.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் - முருகு மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவன். எப்படி…?

கருணைக்கிழங்கு இருக்கிறது என்றால் வேக வைத்து அதில் உள்ள விஷத்தை நீக்குகின்றோம். புளி உப்பு காரம் என்று பல பொருட்களைச் சேர்த்து அதைச் சுவையாக உருவாக்குகின்றோம்.
1.சுவையாக அதை உணவாக உட்கொள்ளும்போது…
2.நம் உணர்ச்சிகள் அது பஞ்ச அபிஷேகமாக அந்த உணர்வுகள் நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அந்த உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அமிலங்களாக உருவாக்குகின்றது
4.அந்த அமிலங்கள் உமிழ் நீராக மாறுகின்றது.

உணவாக உட்கொள்ளும் சக்திக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது அது நம் இரத்த நாளங்களில் கலந்து அந்த அணுக்களின் மலமாகி நம் உடலில் நல்லதாகி… நம்மை ஆரோக்கியமாக்கும் நிலை வருகின்றது.

ஆகையினால்
1.ஆறாவது அறிவால் விஷம் அடக்கப்படுகின்றது… மகிழ்வாகனா (மயில்வாகனா)
2.மயில் தோகை விரித்து அது மகிழ்ச்சியாக ஆடுகின்றது… நஞ்சினை விழுங்குகின்றது
3.அது உடலில் உள்ள உறுப்புகள் அந்த நஞ்சை அடக்குகின்றது.

விஷத்தைக் காலடியில் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக “உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டி…” அதனுடைய இயக்கத் தொடர் பரிணாம வளர்ச்சியில் எப்படி எல்லாம் நாம் வளர்ந்து வந்தோம்…?

1.பல கோடிச் சரீரங்களில் ஒன்றன் பின் ஒன்றாகத் தீமைகளை நீக்கி நீக்கி
2.இன்று மனிதனாக வளரக் காரணமானது என்பதைக் காட்டுவதற்கு
3.மயிலின் காலடியில் பாம்பைப் போட்டு உணர்த்துகின்றார்கள்… இந்த உண்மையைக் கண்டுணர்ந்த ஞானிகள்.

நாம் இந்த உண்மைகளை உணர்ந்தறிவதற்காக வேண்டி எல்லாவற்றுக்கும் காரணப் பெயர்களை வைத்து
1.எது எதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.எதன் வழியில் நாம் எப்படி நல்லதாக உருவாக்க வேண்டும் என்று காட்டினார்கள்.

விஞ்ஞானி ஒரு பொருளைக் கண்டுபிடித்த பின் அவன் அதற்கென்று ஒரு காரணப் பெயரை வைத்து… அதில் இன்னென்ன பொருள்கள் கலக்கப்படும் பொழுது இன்னது இன்னது தான் செய்யும் என்று அனுபவ ரீதியிலே தெரிந்து அதைச் செயல்படுத்துகின்றான்.

இது இதற்குக் காரணம் ஆகும்…. இது மற்றதை இப்படி உருவாக்கும் என்று பல வகையிலும் அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகின்றான்

அதே போல் பல பல திரவ(க)ங்களை விஞ்ஞான அறிவில் புதிதாக உருவாக்குகின்றார்கள். சிறுநீரில் அதை இணைத்துக் காய்ச்சப்படும் பொழுது சிறுநீரில் உள்ள சர்க்கரைச் சத்தின் அளவைக் காட்டுகின்றது. அதே போன்று இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தையும் காட்டுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு இதையெல்லாம் காணுகின்றார்கள் அது போன்றுதான்
1.இயற்கையின் இயக்கத்தின் உண்மையின் உணர்வைச் சாதாரண மக்கள் அறிந்து உணர்வதற்காக
2.ஒவ்வொன்றுக்கும் ஞானிகள் காரணப் பெயரை வைத்து நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலையில் வாழும்படி வழி காட்டுகின்றார்கள்.