ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2024

பச்சை வண்ண நாடிகள்

“சிந்தனைச் சிற்பி” என்பவன் அறிவின் ஆற்றலை மனோ சக்தியாகக் கண்டு கைகொள்ளும் காரியார்த்த செயல் நிலைகளாகக் கருத்தோன்றி தெளிந்து... மற்ற உயிராத்மாக்கள்
1.குறிப்பாக மனித குலம் மெய் சக்தியாக வளர்ச்சியுற ஏதாகிலும் ஓர் வழியாக மனம் உவந்து ஈர்த்தளிட்ட உபதேசக் காவியங்களை
2.ஓதி உணர்வோர் அந்த நுண்பொருள் தத்துவங்களை நற்கனியின் சாறு போல் ஞான தாகத்தால் அருந்திடுவீர்.

ககன மார்க்கமாகச் சென்றிட “ககனமணி சூட்சுமம் கொண்டு” இச்சரீரம் கொண்டே உலகெங்கிலும் சென்று… இயற்கையின் படைப்பில் இயற்கையுடன் மனம் ஒன்றி உயிராத்ம வளர்ச்சிக்கே அவ்வனுபவங்கள் கொண்டு “என்றும் நிலைபெறும் பேறு பெற்றனரப்பா…”

ஆழ் கடலும் கண்டான்… அடர் வனமும் கண்டான்… பாலையின் தன்மைக்குப் பின் பனி மலைகளின் ஊடே வாழ்ந்தான்…! பூமியின் தன்மை நினைத்து “உள் சென்று” விண்ணின் உயர்வாம் வேத வேதாந்த ஒலி நாதப் பொருளும் கண்டான்.

கண்டு… பெற்ற… அந்த முயற்சி கடினமப்பா…!

இன்றோ…
1.சகல மகரிஷிகளின் அருளாசி எனும் அமுது உண்டு
2.அரண் எனும் இல்வாழ்க்கையில் தவ நெறி நின்று
3.இருந்த இடத்திலிருந்து சக்தியின் வலு கூட்டுகின்றாய்.

கடினம் என்று ஒன்றுமில்லை கடினமாம் மனநிலை என்றால் கடினத்தையும் எளிதாகக் கடந்து பேரருள் செல்வமாக வாழ்ந்திடலாம்.

கண்ணனுக்கு உருவைக் கொடுத்த காவிய ரிஷி கண்டது நீர்க்கரையின் பசும்கொடி மலரையப்பா. மலர் என்றால் எளிதாக எண்ணி விடாதே.

“சீதை வனம்” உண்மை என ஸ்வரூபங்கள் கூறுகின்றன. சத்தியத்தின் சக்திக்கு என்றும் அழகுண்டு மணமுண்டு பண்புண்டு… “நன்னெறி வழிகாட்டும் வழியுமுண்டு…”

ஆதவனை மேகம் மறைத்து விட்டதாக எண்ணிவிடாதே. கரங்கள் கொண்டு கண்களைப் பொத்தி விட்டால் ஜோதிச் சுடர் மறைந்து விடுமா…? ஒளியின் வெள்ளத்திற்கு அணையிடவும் முடிந்திடுமா…?

இயற்கையின் சிருஷ்டிகளில் அனைத்திலும் “ஈஸ்வரனைப் பார்…”

வியாசக பகவான் அன்று கண்ட அற்புதம் “அவ்வனத்தில் இன்றும் உண்டு…” கண்ணனின் உருவைப் பசும்கொடு மலர் மேல் கண்டான். பச்சை வண்ணக் கொடியும் அந்தக் கொடியில் பச்சை வண்ண மலரும் அந்த மலரின் மகரந்தம் கண்ணனின் உருவாக வளர்ச்சியுற்று… ஒரு பாதம் வளைத்துப் புல்லாங்குழல் ஊதும் பாவனையாகப் பச்சை வண்ணப் பட்டுடுத்தி… பவளநிற உதடுகளும் கரிய நிற கண்களும் பொன் நிற வேய்குழலும் கொண்டு மலரும் அற்புதத்தை…
1.அண்டத்தில் கண்டதைப் பிண்டத்திலும் கண்டு
2.அந்தக் கண்ணனின் உருவைத் தன்னுள் உணர்ந்திட்ட மாயம்தான் அந்த “மாயக்கண்ணன்…”

வனத்தின் பாங்குக்கு விளக்கமும் வேண்டுமா…? தங்கத்தைச் சுத்தி செய்து அணிகலன்கள் ஆக்குவது போல் எண்ணத்தின் செயலும் உயர்வு கொண்டிடல் வேண்டும்.

பஞ்சபூதங்களைத் தன்னுள் உணர்ந்தது அதுவும் “ஓர் மலர்” காட்டிய விந்தை. செந்நிறம் கலந்த கரிய நிறமும் ஐந்து தலைகளுடன் படமெடுத்தாடி பாம்புடன் இணைந்து ஈரடி நீளமாக வால் பகுதி பூமியை நோக்கி நின்று காற்றினில் ஆடிடும் பொழுது தூரத்தில் காண்பவர் கடின சித்தமும் கலங்குமப்பா.
1.அச்சர்ப்பக் கொடி மலரில் சிவலிங்கமும் உண்டு…
2.சித்தன் கண்டிட்ட அனுபவங்கள் அளவிட முடிந்திடாது.