ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2024

உயிரை யாரும் ஏமாற்ற முடியாது…! அவனிடமிருந்து தப்பவும் முடியாது…!

கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளை வைத்து அதில் எதன் அதிர்வோ அதை வைத்து மாற்றி அமைக்கும் பல வேலைகளை விஞ்ஞானி கொண்டு வருகின்றான்.

பாஷைகளை எழுதினால்… அல்லது பேசினால்…
1.எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலையில் அதனுடைய மோதல்களுக்கு ஒப்ப உணர்வின் அறிவாக எழுத்தின் ரூபத்தைக் கொடுத்து
2.ஒரே நிலையில் ஒரே அழுத்தத்தின் தன்மை கொண்டு தமிழ் இந்தி தெலுங்கு ஆங்கிலம் என்று
3.உலகில் உள்ள எத்தனையோ நூறு பாஷைகளில் அதை மொழி பெயர்த்து
4.அதனுடைய உருவத்தின் அமைப்பைக் கொடுக்கின்றான் கம்ப்யூட்டரின் துணை கொண்டு.

“அதிர்வின்” நிலைகள் கொண்டு தான் அதைஸ் செயல்படுத்துகின்றான். இதையெல்லாம் நாம் இன்று கண்கூடாகப் பார்க்கின்றோம் அல்லவா.

எதன் விஷத்தின் தன்மை அதிலே கலக்கின்றானோ அந்த உணர்வுக்கொப்ப அதில் இணைத்தால் இன்ன ரூபமாகும் என்று ஒரு நொடிக்குள் கொண்டு வருகின்றான்,

ஆனால் நாம் அந்த பாஷைகளை எல்லாம் கற்றுணர்ந்து மொழி பெயர்ப்பை எல்லாம் தெரிந்து அதை எழுத்து வடிவிற்கு நாம் கொண்டு வருவதற்கு முன்பு… அதிவேகமாக மொழி பெயர்க்கக் கூடிய சக்தி பெற்றிருக்கின்றான் விஞ்ஞானி.

இதே போன்றுதான்
1.அருள் உணர்வின் தன்மை பெற்று ஒரு நொடிக்குள் எதையும் ஒளியாக மாற்றிடும் திறன் நாம் பெற வேண்டும்.
2.அத்தகைய திறன் பெற்றவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவர்கள்… சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றனர்.

மனிதனானவன்… தன் இனமாக வாழப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உணர்வைப் பெற்று தன் முன்னோர்களை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

தாய் தந்தையர்… மூதாதையர்கள்… அவர்களின் குல வழியில் வந்தவர்கள் தான் நாம் அனைவருமே. அவர்கள் சப்தரிஷி மண்டலம் செல்லவில்லை என்றாலும்
1.அவர்கள் பெறத் தவறிய சக்திகளை நாம் பெற்று
2.அந்த ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும்… அல்லது செல்லவில்லை என்றாலும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலுக்குள் செலுத்தி… அந்த வலுவின் தன்மை கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்களின் உயிரான்மக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று அவர்களை உந்தித் தள்ளி… பிறவி இல்லாத நிலையை அடைய வைக்க முடியும்.

நம் மூதாதையர்கள் தங்களைக் காக்க எத்தனையோ வேதனைகள் பட்டனர். பரிவு கொண்டு நம்மையும் காத்தார்கள். நம்மை வளர்ப்பதற்காக எத்தனையோ வேதனைகளை அவர்கள் நுகர்ந்தார்கள்.

அவருடைய கிளை வழி விழுதுகள் நாம் அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க வேண்டும்.

ஆனால் இன்று பிள்ளை இல்லை என்றால் “எங்களுக்குக் கொள்ளி வைப்பதற்கு ஆள் இல்லை… அதனால் தத்துப் பிள்ளை எடுக்கின்றோம்…” என்று செயல்படுத்துகின்றார்கள். ஏனென்றால் “இவன்தான் கொள்ளி வைத்து என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவான்…” என்று எண்ணுவார்கள்.

முதலில் எனக்குப் பிள்ளை இல்லையே என்றிருப்பார்கள். ஆனால் வளர்த்துக் கொண்டு வரப்படும் போது… அந்தப் பிள்ளை சுகமாக வளர்ந்த பின் “அதைக் கெஞ்ச வேண்டும்…”

1.பிள்ளையை எண்ணி வேதனை உணர்வுகளை எடுத்து வளர வளர அவன் மீது இருக்கும் பற்றே அற்றுவிடும்
2.கடைசியில் நான் வளர்த்து ஆளாக்கினேன் எல்லாம் செய்தேனே என்று வேதனைப்பட்டு இறந்த பின்
3.அங்கே கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளை என்பதற்கு மாறாக அவன் உடலில் இந்த ஆன்மா புகுந்து அவன் நிலையே தான் ஆகும்.
4.மீண்டும் பிறவிக்குத் தான் வர முடியும்

நன்றாக யோசனை செய்து பாருங்கள். இதிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டுமாக இல்லையா…?

காற்று மண்டலமே இன்று நச்சுத்தன்மையாக உள்ளது. மனிதனுக்கு மனிதன் சிந்தனை இழந்த நிலையில் உள்ளான். தீவிரவாதம் என்றும் கொலை கொள்ளை என்றும் மனிதனை மனிதனே இரக்கமற்று அழித்திடும் நிலைதான் இருக்கின்றதே தவிர மனிதனைக் காக்கும் நிலை இல்லை.

1.மனிதர்களைக் காத்திடும் நல்ல உணர்வுகளைப் பெறுவதற்கு ஆலயங்களை ஞானிகள் உருவாக்கிக் கொடுத்திருந்தாலும்…
2.அதிலேயும் ஏமாற்றித் தன் பிழைப்புக்காக நல் வழி பெறக்கூடிய தகுதியை இழக்கச் செய்யும் நிலை தான் இன்று உள்ளது.

அல்லது ஆண்டவன் பெயரைச் சொல்லி நரபலி கொடுத்து அதிலே சக்தி பெற்று விடுவோம் என்று இப்படி மந்திர தந்திரங்களில் வருகின்றார்கள். ஏமாற்றித் தந்திரமாக அழைத்துச் சென்று “நரபலி கொடுத்தால்” மெச்சி தனக்கு அந்தத் தெய்வம் கொடுக்கும் என்று…!
1.ஆனால் அப்படி நரபலி கொடுத்தாலும் அந்த உடலை விட்டு பிரிந்த ஆவி
2.கொன்றவன் உடலுக்குள்ளே வரும் என்பதை மறந்து விட்டான்.

அதாவது… எவன் கொலை செய்கின்றானோ அவன் உடலுக்குள்ளே தான் அந்த ஆன்மா செல்லும். பின் அதே நிலைகளில் “அவனையும் ஆட்டிப் படைத்து வீழ்த்தும்…” என்பதை மறந்து விட்டான்.

ஏனென்றால் எந்தெந்த வழியில் இன்று உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.ஊரை ஏமாற்றலாம் உலகை ஏமாற்றலாம்
2.இந்த உயிரிடம் மட்டும் யாரும் ஏமாற்ற முடியாது… யாரும் இதை மறந்து விடக்கூடாது.
3.நான் அதைச் செய்வேன் யானையச் செய்வேன் பூனையைச் செய்வேன் என்று ஏமாற்றலாம்
4.ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவு எதுவோ… அதன் வழி நமக்குள் அணுவாக உருவாக்கி
5.உடலில் அதைச் சேர்த்து வளர்த்துக் கொண்டே இருப்பான் உயிர்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றயோ நீ அதுவாகின்றாய்…! பிறரைக் கொலை செய்ய வேண்டும் என்றால் அந்தக் கொலை செய்யும் உணர்வு வளர்ந்து மனிதனாக உருவாக்கிய அணுக்களை எல்லாம் அது கொன்று விடும்.

1.கொலை செய்து அவனைக் கொன்று போட்டேன் என்று எண்ணலாம்
2.ஆனால் அவன் வேறு எங்கும் போக மாட்டான்
3.கொலை செய்தவன் உடலுக்குள் வந்துவிடுவான்.

நுகர்ந்த கொன்றிடும் உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து பிரம்மம் ஆகின்றது. அதன் உணர்வு கொண்டு துரித நிலையில் கடைசி நேரத்தில் இந்த உடலிலே மாற்றங்கள் ஏற்படும். இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது…!

1.நானும் இப்பொழுது உபதேசிக்கின்றேன்
2.உபதேசித்து விட்டுத் தவறான வழியில் சென்றால் நானும் என் உயிரிடமிருந்து இருந்து தப்ப முடியாது.

ஆகவே… குரு இட்ட கட்டளைப்படி உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதிக்கின்றேன் உங்களை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறேன்.

நான் கொடுத்த சக்தியை அதற்குத் தான் பயன்படுத்த வேண்டும் என்று குருநாதர் இப்படித்தான் எனக்கு அதை உணர்த்தினார்.