ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 17, 2024

முன்னோர்களின் ஆன்மாக்களை “மிருக உடலின் ஈர்ப்புக்குள்” நாம் செல்ல விடக்கூடாது

சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் நாம் தியானித்து இந்த உடலில் வலுப்பெற்ற பின்
1.எந்த மூதாதைகளின் குல உணர்வுகள் நமக்குள் இருக்கின்றதோ
2.உடலை விட்டு பிரிந்து சென்ற அந்தச் சூட்சம சரீரம் ஆனவர்களை உந்தித் தள்ளி
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றி உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து எப்படி ஒளியின் சரீரம் ஆனார்களோ… அதே போன்று மூதாதையர்களை அங்கு அனுப்பப்படும் பொழுது அந்த உயிராத்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்வதும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாறி வாழத் தொடங்கும்.

விண்ணிலே அந்த உயிரான்மாக்களைச் செலுத்தப்படும் பொழுது அவர்கள் உணர்வின் அறிவே நமக்குள் உண்டு. நாம் எண்ணும் போதெல்லாம் அந்த விண்ணின் ஆற்றலை எளிதில் பெற்று… வாழ்க்கையில் வரும் துன்பங்களை நாம் அகற்றிக் கொள்ள முடியும்.

முதலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாக்கி அதன் துணை கொண்டு மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

நம் முன்னோர்கள் எத்தனையோ துயரப்பட்டுத் தான் நம்மை வளர்த்தார்கள். அவர்களின் உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்கப்படும் பொழுது உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றார்கள்… வேகாநிலை…!

உணற்வின் தன்மைகள் சாகாக்கலையாக இயக்கினால் அந்த விஷத்திற்குத்தக்க மீண்டும் உடலை அமைத்துவிடும். ஆகவே இதை மாற்றி விண் செலுத்த வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் மூதாதையர்களைச் செலுத்தவும்… ஞானிகள் உணர்வுகளை வலுவாக்கி… தியானத்தின் வலுவின் துணையால்
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை
2.நம் பூமியின் துருவத்தின் எல்லை ஓரத்தில் இருந்து சுழன்று கொண்டிருக்கும்
3.துருவ நட்சத்திரத்துடன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய ஏதுவாக இருக்கும்.

அதன் வழியில் இணைத்து விட்டால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது. அவர்களும் சப்தரிஷிகளாக ஆகிவிடுகின்றார்கள்.

அவர் உயிர் பெற்று உணர்வின் தன்மை உடல் பெற்ற பின் அவர்களும் உயிருடன் ஒன்றிய உணர்வு ஒளியாக்கப்படும் பொழுது இந்த உணர்வினை நாம் எளிதில் பெற்று வாழ்க்கையில் வரும் துன்பங்களை நாம் அகற்ற முடியும்.

அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டத்தான் இதிலே பல அனுபவங்களையும்…
1.உயிரான்மாக்களை எப்படி விண் செலுத்துவது…? என்று அனுபவ ரீதியிலே கொண்டு வந்ததனால்
2.உங்களில் இந்த உணர்வைக் கூட்டி… “ஆயிரக்கணக்கோர் இந்த உணர்வுடன் துணை கொள்ளும் பொழுது” எளிதில் விண் செலுத்த முடியும்.

ஆனால் இதற்கு முன் அதைச் செய்யத் தவறிவிட்டோம் இப்பொழுது இங்கே சொல்லும் முறைப்படி முன்னோர்களை விண் செலுத்தலாம்.

1.இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அங்கே ஆவியாகத்தான் இருக்கும்
2.அந்த உடல் மடிந்த பின் அந்த உடலைக் கடந்து வெளியே வந்தால் மிருக உடலைப் பெற்று விடும்
3.மிருக உடல் பெற்றால் அவர்களை நாம் யாரும் மாற்ற முடியாது.

ஒரு உடலுக்குள் ஆவியின் நிலையாக இருக்கும் போது நாம் விண் செலுத்துவதற்காகப் பாய்ச்சும் உணர்வுகள் அவர்கள் சுவாசிக்கும் உணர்வுடன் கலக்கின்றது. (ஏனென்றால் சுவாசத்தில் கலந்து தான் அந்த ஆவியின் இயக்கமும் வருகிறது).

சுவாசித்த உணர்வு அவர்களுக்குள் செல்லப்படும் பொழுது இன்னொரு உடலுக்குள் ஆவியாக இருக்கும் முன்னோரின் ஆத்மாவிற்குள் இது சேர்க்கப்பட்டு உடல் பெறும் உணர்வை மாற்றி அமைக்கும் அமைப்புகள் வருகின்றது.

1.இப்படி அமைத்த பின் உடலை விட்டு அந்த ஆன்மா வெளியே வந்தால்
2.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தினுடைய வலுவை நாம் சேர்த்துக் கொண்டு
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்தினால்
4.அந்த ஆன்மாக்களை நாம் எளிதில் பிறவி இல்லா நிலை அடையச் செய்ய முடியும் (மிருக உடல் பெறுவதை மாற்றி அமைக்க முடியும்).

ஆனால் செய்யத் தவறினால் என்ன ஆகும்…?

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பட்ட துயரமும் அவருடைய உணர்வின் எண்ணங்களும் நமக்குள் பதிவாகி இருக்கும். அவருடைய நினைவாற்றலும் நமக்கு அடிக்கடி வரும்… அவர் வாழ்ந்த காலத்தையும் நாம் எண்ணுவோம்.

1.அப்போது அவர் பட்ட வேதனை நமக்குள் உருவாகும்… பரம்பரை நோயாக உருவாகி விடும்.
2.நமக்குப் பின் வரும் சந்ததிகளுக்கும் இதே உணர்வு வந்துவிடும்.
3.ஆக… குல வழியில் ஒரு பக்கம் கெட்டது என்றால் அந்த கெட்ட உணர்வின் தன்மையே நமக்குள் வளர்த்து விடும்

இது போன்ற நிலையில் இருந்து எல்லாம் விடுபடுவதற்கு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மூதாதையர்களை விண் செலுத்த முயற்சி எடுங்கள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தோறும் அதற்காகத்தான் இதை உபதேசிக்கப்பட்டு எல்லோருடைய உணர்வுகளையும் அங்கே குவிக்கச் செய்து உங்களுக்குள் வலு சேர்க்கின்றோம்.

அந்த உணர்வினைக் கொண்டு தியானித்து சப்தரிஷி மண்டல உணர்வுகளை ஏங்கிப் பெற்று “முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள்…”