ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 23, 2024

உள் நின்று இயக்கும் “கடவுளின் செயல் எது…?” என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

மனிதனான நாம் இப்போது எல்லோருக்கும் பல நன்மைகள் செய்திருப்பினும் நன்மை செய்வதருடைய நிலைகள் கடைசியில் என்ன ஆகிறது…?

தன் குடும்பத்திலோ அல்லது ஒரு ஆயிரம் பேருக்கோ நன்மை செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்

அதிலே ஒருவர் மிகவும் வேதனைப்படுகின்றார் என்றால்
1.அந்த வேதனைப்படுவர் உணர்வுகளைச் சுவாசித்து அந்த உணர்வு கொண்டு அவருக்கு இரக்கப்பட்டு
2.பரிவுடன் அதிகமாக உதவி செய்ய நெருங்கும் போது அவருக்குள் விளைந்ததை இவர் நுகரப்படும் போது
3.அந்த வேதனை உணர்வுகள் இவருக்குள் ஊடுருவி… அவரின் நோயை இங்கே உருவாக்கி விடுகின்றது.

காரணம் கூர்மையாகப் பார்த்துத் தான் அந்த வேதனையை உணர்கின்றார்… உதவி செய்கின்றார். அப்படி உற்றுப் பார்த்து “அவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே…” என்று பக்தியில் கடவுளே… தெய்வமே… முருகனே… விநாயகனே…! என்று அந்த உணர்வின் தன்மை சொல்லி அங்கே நுகரப்படும் பொழுது இது உருப்பெற்று விடுகின்றது.

இது கூர்மை அவதாரமாக மாறி அவன் உடலில் உருவான தீமை இங்கே உருவாகி அதே நைந்திடும் உணர்வாக நோயாக இங்கே விளைந்து விடுகின்றது.

நாம் என்ன செய்வோம்…?
1.கஷ்டப்பட்டவருக்கு அனைத்து உதவியும் செய்தேனே…
2.கடவுளே…! எல்லோருக்கும் நான் நன்மை தானே செய்தேன்… எனக்கு இவ்வாறு நோய் வந்து விட்டதே…! என்று
3.அந்த வேதனையை நோக்கியே மீண்டு சென்று
4.எந்தத் தெய்வம் காக்கும் என்று எண்ணினோமோ “அவன் காப்பான்…” என்ற நோக்கத்திலேயே குறைகளை எல்லாம் சொல்லி
5.அது நிறைவேறும் என்ற நோக்கத்தில் (எதிர்பார்த்து) வேதனைகளை அதிகமாகஸ் சுவாசித்து
6.நிறைவுபெறும் எண்ணமே இல்லாது அழிந்திடும் உணர்வு கொண்டு அதையே நொந்திடும் உணர்வாக வளர்ந்துவிடுகிறது.

ஆனாலும்… நாம் இப்படி வேதனைப்படும் பொழுது… நமக்கும் இதே போன்று இன்னொருவர் உதவி செய்ய வருவார். “அடப்பாவமே…! இவர் எல்லோருக்கும் உதவி செய்தார்… இவருக்கு இப்படி ஒரு துன்பமா…?” என்று எண்ணும் போது… தன் கதைகளை எல்லாம் சொன்னால் அவர் கூர்ந்து கேட்டால்
1.ஆகா… நீயாவது எனக்கு இரக்கப்பட்டாயே…! என்று
2.கடைசியில் இறந்த பின் நம் ஆன்மா இவர் உடலுக்குள் தான் போகும்.

இப்படி இந்த உணர்வின் தன்மைகள் மாறி மாறி மீண்டும் பூமியின் தன்மைகளில் தேய்பிறைக்கே வந்து கொண்டுள்ளோம்.

பல கோடிச் சரீரங்களில் கூர்மையின் நிலையாக தன்னைக் காட்டிலும் வலிமையான நிலைகளைப் பெற்றுப் பெற்று
1.அதனின் உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் மாற்றமாகிப் பரிணாம வளர்ச்சி ஆகி மனிதனான பின்
2.இரக்கம் ஈகை பண்பு பரிவு என்ற நிலைகளில் எல்லோருக்கும் உதவி செய்யும் பண்புடன் வளரக்கூடியவன்
3.மற்றவருடைய நோய்களைக் கூர்மையாக எடுத்து உணர்வின் தன்மை அவருக்கு உதவி செய்தாலும்
4.புவியின் ஈர்ப்புக்குள்ளே தான் மீண்டும் சுழலும் நிலை வருகின்றது.

இதிலிருந்து மீளும் மார்க்கம்…?

இதற்குண்டான விளக்கங்களை யாம் இப்போது சொல்ல வந்தால்
1.”நன்மையே செய்யக்கூடாது” என்று நீங்கள் சொல்கின்றீர்களா…? என்ற இந்த வினாவில் தான் எல்லோரும் உட்கார்ந்து இருப்பீர்கள்…!
2.நன்மை செய்தவர் இப்படியானால் “எந்தக் கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்றப் போகிறார்…?” என்ற இந்த கேள்விக்குறியில் தான் இங்கே இருப்பீர்கள்.

அதனால் தான் இந்தப் பிள்ளை யார்…? (பிள்ளையார்) நீ சிந்தித்துப் பார்…! என்று விநாயகன் உருவமாகக் ஞானிகள் காட்டினார்கள்.

ஆதிமூலம் என்பது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றது. இந்த கணங்களுக்கெல்லாம் இந்தக் குணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர்… கணேசா…!

நாம் எதை எதையெல்லாம் சுவாசித்தோமோ மூஷிகவாகனா அதற்கொப்ப அடுத்தடுத்து உடல்கள் மாறி மாறி வந்தது. இந்த மனித வாழ்க்கையில் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்…?

மான் புலியை பார்த்து அதனுடைய கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து அந்த உணர்வுகளைத் தன் உடலுக்குள் விளைய வைத்து இந்த உடலை விட்டுப் பிரியும் போது கூர்மையாக அந்தப் புலியையே எண்ணி
1.புலியின் உணர்வைச் சுவாசித்த நிலைகள் கொண்டு மூஷிகவாகனா
2.அந்தப் புலியின் உணர்வே இதை வாகனமாக அழைத்துச் சென்று தன்னுடன் அணைத்து
3.இதனுடைய தசைகளை அது உணவாக எப்படி உட்கொண்டதோ அதைப் போல
4.புலியின் உணர்வை இந்த மான் அதிகமாகச் சுவாசிக்கப்படும் பொழுது தன் இனமான சத்தைத் தனக்குள் கவர்ந்து
5.மானின் உயிரான்மா இந்தப் புலியின் உணர்வின் துணை கொண்டு புலியாக உருவாக்கச் செய்து விடுகின்றது.

இது இயற்கையினுடைய சில நியதிகள்… கடவுளின் செயலும் இது தான் ஒன்றுக்குள் ஒன்று செல்லப்படும் பொழுது உணர்வின் செயலாக கடவுளாக உள் நின்று இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.