ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 24, 2024

இயற்கை என்பது… உருவாகின்றதா…? உருவாக்கப்படுகின்றதா…?

 

ஐம்பூதத் தத்துவங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல்கிப் பெருகிடும் செயல் நிலைகள்… வளர்ப்பின் செயலாக்கம் வளர்ச்சியின் முதிர்வாக… மறைபொருள் சக்தி உறை பொருள் உருக்கோலம் கொள்ளும் வளர்ப்பாக… உறை பொருளின் பரிணாம முதிர்வு வினை செயலுருவது…
1.விடா சிந்தனை (முயற்சி) என்றே கதியுற்றுச் செயலுருங்கால்…
2.மதி என்ற தோன்றா நின்ற அறிவை ஞானத்தின் ஆக்கமாக…
3.எண்ணத்தின் வழி நாதத்தை உண்டு பண்ணி…
4.வினை செயல் அறிவுறுத்தும் அறிவு எதுவோ அந்த அறிவால் நிலை நின்று
5.முன்… பின்… நடு… என்றே கால நியமனங்களைக் கருத்தில் காட்டும்
6.சாயுஜ்யப் (தெய்வத்துள் புகும் நிலை) பெரு நிலையை… அறிவை அறிவால் அறிவர் ஞானியர்.

“ஊழ்” என்று முன் கடந்த வினைப் பயன்…
1.செய்யப்பட்ட வினையாக “எது பதிவின் நிலையோ”
2.அப்பதிவைச் செயல் நடத்தும் தொடருக்கு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிட்ட மனித உடல் இயக்க கதியில்…
3.செய்த வினையாகின்ற வளர்ச்சியின் வளர்ப்பில் காந்தம் செயலுருங்கால்
4.வீரிய மின் சக்தியாக இயற்கையின் சக்தியே வெளிப்படும் வேகமாகச் செயல்படுகின்ற செயல்பாட்டில்
5.சரீரத்தின் எலும்பினுள் ஊண் “செய்யப்பட்ட வினையாகச் செயல்படும் சூட்சுமம்” உண்டு.

“புதிதாக” உதிக்கின்ற உயிரணு, ஜீவன் கொண்ட உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்தபின்… “செய்யப்பட்ட வினை இதில் எது…?” என்ற வினா எழும்பலாம்.

ஆகாயம் நீர் காற்று நெருப்பு நிலம் என்றே உரைத்திடும் ஐம்பூதங்கள் ஒன்றினில் ஒன்று பொருந்தி… ஆகாயமாய் வியாபித்துள்ள மறைபொருள் செயல்பாட்டின் தன்மைகள் செயல்படுங்கால்… பிரதிவித் (பூமி-உலகம்) தத்துவம்… ஆக்கம் தத்துவம்… அதே தன்மையாக ஜீவன் உருக் கோலம் கொள்ளும் செயலிலும் உண்டு.

கோடானு கோடி நிறங்கள் கோடான கோடி மணங்கள் கோடான கோடி குணங்கள் நீரமில சக்தியுடன் கலந்து…
1.பிறிதொன்றை உருவாக்கும் காந்தமாக உள் நிறைந்தே உதிக்கும் உயிரணுவின் செயலில்
2.உருப்பெறுவது எண்ணம் கொண்ட ஆத்மா என்றே உரைத்து வந்தோம்.

இங்கு எண்ணம் எதுவப்பா…?

செயல்பாட்டின் மூல சக்தியே… தனக்கொத்ததை வளர்க்கும் ஈர்ப்பில் “உறை பொருள் ஆக்கும் செயலுக்கே” செயல்படும் செயலை ஊன்றிப் பார்.

எண்ணியது எண்ணியாங்கு நடைபெறும் செயலில்… ஜீவன் கொள்ளும் கருத்து நடைமுறைச் செயலில… நாம் ஏற்படுத்திக் கொண்ட சுற்றுச்சூழலில் அப்படியே நடைபெறும் நிகழ்வுகளுக்கு எது காரணம்…?

எண்ணம் என்பாய்.

முழுவதும் விளக்கி விட்டால் அறிவின் சுடர் பிரகாசிக்க அதுவே தூண்டுகோலாகுமப்பா.