ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2024

நமக்குச் சரியான வழிகாட்டி துருவ நட்சத்திரம் தான்

திட்டியவர்களைப் பற்றியோ வேதனைப்படுவோரைப் பற்றியோ உங்களுக்குள் பதிவானால்
1.அவர்களை நினைக்கும் போது கோபம் வருகின்றது
2.அதே சமயத்தில் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று கோபத்துடன் வெறுப்புடன் எண்ணினால் அங்கே புரை ஓடுகின்றது
3.நன்மை செய்தவனைப் பற்றி உயர்வாக எண்ணினால் அங்கே விக்கலாகி அவனுக்கு நன்மை ஆகின்றது… நமக்கும் நல்லதாகிறது.

பாசத்தால் தன் குழந்தையை எண்ணுகின்றோம். அவன் வெளிநாட்டில் இருக்கின்றானே… அவன் என்ன செய்கின்றான்..? என்று பதட்டத்துடன் குழந்தையைத் தாய் வேதனையான நிலையில் எண்ணிப் பார்க்கப்படும் பொழுது
1.கெட்டிக்காரனாக இருந்தாலும் அங்கே அவன் சிந்திக்கும் திறன் இழந்து அவன் தோல்வியைத் தழுவும் நிலை வந்து விடுகிறது.
2.தாய் வேதனையுடன் எண்ணும்போது இந்த உணர்வு தாக்கப்பட்டு அவன் நடந்து சென்று கொண்டிருந்தால் எதிரில் வரும் வாகனங்களை அறியாதபடி விபத்துகள் ஏற்பட்டுவிடும்
3.அல்லது வாகனத்தை ஓட்டிச் சென்றால் தாய் வேதனையாக எண்ணிய உணர்வுகள் குறுக்காட்டி… எதிரில் வரும் வாகனத்துடன் மோதி விபத்தாகிவிடும்.

இப்படி… மனிதனுக்கு மனிதன் நாம் தொடர்பு கொண்டு தான் வாழுகின்றோம். அதிலே நம்மை அறியாது வரும் தீமைகளிலிருந்து மீள வேண்டும் அல்லவா. அதற்குண்டான சிந்தனையாக உங்களுக்கு விட்டு விடுகின்றேன்.

“குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எம்மை (ஞனாகுரு) எப்படிப் பெறச் செய்தாரோ” அதே போல் அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி உங்களைக் காத்திடும் சக்தியாக அது வளர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன். இந்தப் பதிவை நீங்கள் நினைவாக்கினால் உங்கள் உணர்வே உங்களைக் காக்கும்.

அகஸ்தியன் தீமைகளை வென்று இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து நம் பூமியின் துருவ எல்லையில் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றனர்.

அதிலிருந்து வெளி வரும் ஒளிக்கற்றைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதை அலைகளாக மாற்றுவதும்… நம் பூமியின் துருவப் பகுதி வழியாக நாம் வாழும் பகுதிக்குள் கொண்டு வருவதும்… அதை நாம் இப்போது நுகர்வதும் ஓர் நல்ல சந்தர்ப்பம் தான்.

கடலுக்குள் செல்வோர்…
1.இரவாகி விட்டால் இந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பார்த்துத் தான் பாதைகளை அறிந்து செல்வார்கள்
2.துருவ நட்சத்திரம் எந்தத் திசையில் தோன்றுகிறதோ வடக்கு தெற்கு கிழக்கு என்ற நிலைகள் என்று திசைகளை அறிந்து செல்வார்கள்.

நிலப்பகுதியில் உள்ளது போன்று அங்கே ரோடு இல்லை… வழி காட்டி இல்லை. துருவ நட்சத்திரத்தைப் பார்த்துத் தான் அவர்கள் போக வேண்டிய திசைகளில் செல்வார்கள். நாம் எந்த ஊரிலிருந்து வந்தோம்…? எங்கே செல்ல வேண்டும்…? என்பதைக் கப்பலில் செல்வர் அனைவரும் இதை வைத்துதான் செயல்படுத்துகின்றனர்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு வடக்கு தெற்கு என்ற நிலையில் பாதரசத்தை வைத்து ஈர்க்கும் சக்தி கொண்டு தெற்கு வடக்கு என்ற நிலையில் இயந்திரத் துணை கொண்டு காணுகின்றார்கள்.

ஆனால் அன்று இயந்திரத் துணை இல்லாத பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை உற்று நோக்கி
2.அதையே எல்லையாக வைத்து வாழ்ந்தவர்கள் தான் பலர்
3.துருவ நட்சத்திரம் தான் அன்று அவர்களுக்கு வழிகாட்டி…!

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ வினாக்கள் தோன்றுவதை… அதற்குண்டான விடைகள் கிடைக்க வேண்டும்… எதிர்படும் தீமைளிலிருந்து விடுபட்டு உங்களுடைய சிந்தனைகள் தெரிந்து தெளிவாக செயல்பட வேண்டும்… தெளிந்த மனதாக மாற்றிப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத் தான் இதைக் காட்டுவது.

தீமை என்ற உணர்வுகள் மோதி அதனின் இயக்கமாக நீங்கள் மாறிடாது உங்கள் உணர்வை உங்களை இயக்கும். உங்களில் அது வளரும் அந்த தன்மை பெற வேண்டும் இனி வரும் எத்தகைய தீமையில் இருந்தும் உங்களை மீட்டிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவாக்குவது

வானை நோக்கி நீங்கள் உற்றுப் பார்க்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் போது… அவன் நஞ்சினை ஒடுக்கி அதை எப்படி ஒளியாக மாற்றினானோ
1.அவன் கண்டறிந்த அறிவுகள் அனைத்தையும் நாம் பெற முடியும்
2.கற்று அல்ல… இந்தப் பதிவின் மூலமாக…!
3.அதற்குண்டான சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது உருவாக்குகின்றோம்.

முதல் மனிதன் அகஸ்தியன் அடைந்த அந்த எல்லையை நாமும் அடைய வேண்டும்.