ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2024

எதையுமே பஸ்பமாக்கிடும் சக்தி

வான்மீகி மாமகரிஷியின் வாழ்வின் ஞான அனுபவ நடைமுறைகள் வரலாற்று சரிதமாக உரைத்திடும் முன்… அவர் காட்டிய அனுபவ தத்துவ உண்மை நிலைகளை அறிந்து கொண்டால் நல்லது.

1.நாராயணன் கையில் கோதண்டம்… ஆஞ்சநேயன் கையில் கோதண்டம் என்பது
2.மனோ சக்தியின் வலிமை கொண்டிட்ட ஆற்றல்… பீஷ்டம் (வேண்டியதை அடையும்) என்ற நிறைவு நிலையாக… செயல் சக்தி பிரவிகிக்க (பொங்கி வர)
3.துர்க்குண சம்காரமும்… நற்குணங்களைக் காக்கும் “நிலைக்களன்” எனும் உபதேசிக தத்துவ முழுமையே - “கோதண்டம்”
4.அதுவே உஷ்ண நாதம்… காக்கும் விஷ்ணு… அதுவே நம் பூமியின் சுழல் சக்தியில் ஏற்படும் உராய்வின் வெப்பம்.

பால்வெளியிலிருந்து புவி ஈர்ப்பிற்குள் நுழையும் தீய நிலை அமில அணுக்கள் கூட்டம்… உருக் கோலம் கொண்ட திடப்பொருள் (மிதக்கும்) சக்திகள்… பஸ்பமாய்த் தம்மை மாற்று நிலை பெற்றிட்டு… மீண்டும் பால்வெளியில் மூல அலோக அமிலங்களாக ஓடிக்கொண்டே உள்ளன.

1.கோதண்ட சூட்சும ரகசியங்கள்
2.மகரிஷிகள் காட்டிட்ட மெய்ஞான விழிப்பாக
3.உயர் நன் நிலை பெற்றிட வேண்டுமப்பா.

அவ்விடத்தின் உபதேசிகன் யார்…? என்று உரைத்திட எந்த மாமகான்கள் ஆனாலும் “அவர்கள் அனுமதி தேவையப்பா…” ஏகாந்த ரகசிய உண்மை நிலைகளே ஆயினும்… “தெய்வீக இரகசியங்கள்” கடைபிடிக்கப்படும் செயலில் தான் உண்மைகள் அடக்கம் பெறுகின்றன.

இன்றைய குரான் எனப்படும் இஸ்லாமிய மறைநூலில் கலிமா என்றே “ஐந்து கட்டளைகளை” கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் என்று கூறப்பட்டுள்ளது.

ஹஜ் எனப்படும் புனித யாத்திரை சென்றிடும் போது… “அல்லாஹ் ஹும்ம லப்பை…” என்றே இறை நாமத்தை முழக்கங்கள் இட்டாலும்… ஹராபத் எனப்படும் பாலைவெளியில் தொழுகை எனப்படும் இறை நோன்பு செய்யினும்… மனநிலை மாறு கொண்டிடாதபடி ஒருமை நிலை என்ற சமத்துவ சகோதரத்துவ சகிப்புத்தன்மை கொண்டு புனித ஜம் ஜம் நீரூற்று அருந்திடுவோர் யாராகினும்… பற்பல வாயில்கள் கொண்ட மக்கா எனும் இடத்தில் முகமது நபியின் ஒலி அலைகள் பதிவு நிலை பெற்றிட்ட அந்த இடத்தில் ஓதப்படும் நிலையில் ஏற்கப்பட்டன.

இறைவனின் கருணைக்கதிர்கள் அவர் மீது இறங்கின என்ற சூட்சுமத்தில் அந்த உண்மைகளை அறிந்தோர் உண்டா…?

1.வான்மீகி ஆகாயத்தை நோக்கினான்…! அப்போது…
2.வானில் இருந்து “க்ஷண நேரத்தில் உயர் மின்காந்த உயர் நுண் அலைகள் பாயப்பெற்றன…” என்பதில்
3.அதற்கு முன் ஆட்கொண்ட கனமான சுவாசத்தின் அலைகள் நீக்கம் பெற்று
4.மின்னலென உருவாகிய மனத்தின் திட சித்தம் கொண்டு… தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டிட
5.ஒளி கொண்ட உயிரணுக்கள்… ஆங்கு நிலை கொண்டு அவருக்குள் வளர்ந்ததப்பா.

குரானிலும் மறைபொருளாக… சக்திகளை ஈர்த்துக் கொண்டிட்டு உயர்நிலை பெற்றிடும் முறைகள் காட்டப்பட்டுள்ளது… கடைப்பிடிப்போர் அந்த உயர்வால் உயர்வை எய்துவர்.

மரணத்தின் வேதனைகளை வென்றிடும் பக்குவம்… தியானத்தில் ஈர்ப்பலையின் வளர்ச்சியில்… நாதத்தால் விந்து கலையாக்கிடும் தன்மைகள் கூட்டிக் கொண்டிருப்பினும்… மகரிஷிகளால் உவந்து ஊட்டப்பட்டு இருப்பினும்…
1.ஒளி காந்த உயர் அணுக்களை… எண்ணம் கொண்ட சக்தி வளர்ப்பில் வளர்த்துக் கொண்டிட…
2.எதிர் நிகழ்வுகள் தொடர்ந்து இருப்பின்… ஞானச் செல்வங்கள் அறிந்து கொண்டிட “சிறு கோடிட்டுக் காட்டுகின்றோம்…”

எப்படி எரிமலைகள் குமுறிக் கொந்தளிக்கும் முன் பூமியின் சுவாச சமைப்பு நுண் அதிர்வலைகள் ஒத்த எண்ண நிலை கொண்டு எதிர் நிலைகள் நேர்கோடாக தியான வழிதனில் அறிந்து கொண்டிடும் ஆற்றல் நிலை உமக்கு முந்தைய பாட நிலைகளில் உரைத்திட்ட அதே நிலைகளின் தொடரில் மற்றும் ஓர் சூட்சுமம் உரைக்கின்றோம்.

கருவிழியில் உள் அமைப்பில் “பாப்பா” என்று அழைக்கப்படும் அதனுள் சுரந்திடும் அமிலக் கூறுகளால் கருவிழியே பளபளப்புற்று எண்ணெய் பூசிய தன்மையாக… சூரிய ஒளியைக் காண விழி அஞ்சும்.

மூன்று நாட்கள் தொடர்ந்து இருப்பின் அதுவே அவன் கொண்டிட்ட வினையின் முடிவு…!
1.வென்று காட்டுவதெல்லாம் நாம் சுட்டிக் காட்டிடும் இந்த எளிய தியானத்தின் மூலம்தான்..
2.உத்தரவு பெற்று வெளியிட வேண்டும்…!