ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2024

வான்மீகி மகரிஷி உணர்த்தும் வானியல் தத்துவம்

1.வானம் தொடர்பாக பூமியில் சிருஷ்டிப்பு நிலைபெற்றிடும் உயிரணுக்கள்… ஆவியாக அமிலங்களாக உருக்கொண்டு உருவாகி
2.சூரியக் குடும்பக் கோள்களின் ஈர்ப்பின் சமைப்பு அலைகள் பர வெளியில் வீசிடும் நிலை கொண்டு…
3.சூரியன் வெப்ப சமைப்பு நிலை தொடர்பு கொண்டிட்டு
4.தனக்கொத்த தன்மைகளை ஈர்த்துக் கொண்டே
5.எண்ணம் கொண்ட சுழற்சியாக
6.சுழற்சியின் உராய்வினால் சமைக்கும் சக்தி கொண்ட வெப்பமாக
7.ஒளியின் தொடர்பு கொண்டிட்ட ஒலி நாதமாக உருக் கொண்டு
8.அதே நிலையின் தொடர்ச்சி கோடான கோடி அணுக்கள் ஈர்ப்பினால் சமைக்கப்பட்டு… தனக்குள் பிறிதொன்றை உருவாக்கி
9.அதே தொடரில் உருக் கொள்ளும் குண நிலைகள்… கோடானு கோடியாக…
10.மறைபொருள் - விளைபொருளாக… பின் விளைபொருளின் முதிர்வு - உறைபொருளாகும் தன்மையில்… “ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டிட்டு”
11.கன பரிமாணம் கொண்ட திட அமிலம் உருவாக்கிடும் பூதியில்…
12.பல பல வளர்ச்சி கொண்டு புதிய புதிய கோளங்கள் உருக் கொள்வதும்
13.ஈர்ப்பின் சுழல் வேக சக்தி நிலையின் ஈர்ப்பாம்… அந்த அமில நிலை எதனை வேகம் கொண்டு அதனின் ஈர்ப்பின் திறம் வலுப்பெற்றதோ
14.அதற்கொத்த சமைப்பு நிலையின் வேகம் வலுக்கொண்டிடும்
15.ஜீவித வளர்ச்சி நிலை பெற்றிடும் உயிரணுக்களின் ஓர்மித்த கூட்டமைப்பாம்
16.சுழற்சி வேகம் “சுழற்சியே” சக்தியாகப் பரிணமிக்க…
17.பால்வெளியின் ஈர்ப்பின் செயல்… “சமைப்பினால் சுவாசமும்… சுவாசம் கொண்ட சுழற்சியில் வெப்பமும்” (பால்வெளியில் உராயும் பொழுது)
18.ஈர்ப்பின் அமில குணங்களும்… சமைப்பின் அமில குணங்களும்…
19.சுவாசம் கொண்ட சுழற்சியின் எதிர் மோதல் சந்திப்பில்
20.சூரியக் கோள்கள் உருக்கொள்ளும் செயல் முன்
21.பால்வெளியில் சங்கிலித் தொடர் போல் நிறம் மணம் குணம்…
22.எங்கும் எதிலும் படர்ந்துள்ள சகலத்திலும் வியாபித்துள்ள காந்தத்தின் சூட்சுமம் செயற்கொள்ளும் முன்
23.சகலமும் அதுவாக நின்ற… புதிர்களை விளக்குவோம்.

விண்ணின் சக்திகள் சிருஷ்டியின் விளையாட்டில்… உயர்நுண் ஒளி காந்த அணுக்கள் நீலவண்ண ஒளியாக ஆத்ம பதிவு நிலையாகத் தன்னுள் இட்டு தன்னை வளர்ச்சி நிலைப்படுத்திக் கொண்ட மாமகான்கள்… உலகினுக்குப் போதனை எனும் பாங்கில்… புவியியல் உயிரியல் வானியல் என்று தம் தம் அனுபவ ஞான சிருஷ்டிகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஒளி அலைகளாகக் காற்றில் ஓடிக்கொண்டிருக்கும் அவைகளை ஈர்த்திடும் செயலில்… உத்வேக சக்தி பெற்றிடும் அதி உன்னத சூட்சும நிலை என்றே… பல வழிகளாக வகுத்து ஊட்ட வந்த “அந்த அமுத சுரபிகளை” உமக்கு ஊட்டுகின்றோமப்பா…!
1.எடுக்க எடுக்கக் குறைவு படாத அமுதம்…! ஞானமாம் அந்த அமுதத்தைச் சுரக்கின்ற சுரபி போல்…
2.“ஞானச் செல்வங்களின் நினைவு… உயர்ந்து நிற்றல் வேண்டும்…”

ஞானப் பசி தீர்க்கும் மாமகரிஷிகள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்தப் பாக்கியத்தை யார் பெற்றிடுவர்…?

அனைவரும் அதைப் பெறவே அன்பு கொண்டு அழைக்கின்றோம்.

வானியலை வகுத்துத் தந்த வான்மீகி மாமகரிஷி… அவர் கொண்டிட்ட அனுபவ உயர் ஞானச் செயல் ஆக்கத்தன்மைகளைக் கற்போரும் பெற்றிடவே… உணர்ந்தோருக்கும் ஊட்டிடவே… இங்கே உபதேச வாயிலாக உரைக்கின்றோம்.

அதைப் பெற்றுத் உயர் ஞானச் சித்தாகத் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்திக் கொள்ளும் ஆன்மாக்களை… எமது சித்தத்தில் மகிழ்கின்றோம்.

காட்டரசன் ஆனவன் நாட்டரசனாக உயர்ந்து ஓதும் ஆன்மாக்களின் எண்ணத்தில் குடி கொண்ட ராஜிய பரிபாலன… சக்தி ஈர்த்து… சக்தி அளித்து…
1.சக்தியாக உருமாறும் காரண காரியங்கள் முறைகள் நிறைவாக அறிவோம்
2.வான்மீகி மாமகரிஷியின் அருளாசியை வேண்டிப் பெறுங்கள்…!