ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2024

இறைவன் தெய்வம் குரு

மகரிஷிகள் தன்னைத்தான் கண்டுணர்ந்த முறைப்படி
1.மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு உயர்வு பெற வேண்டும்…?
2.உயர்ந்த சக்திகளை எவ்வாறு பெற முடியும்…? என்ற நிலையை
3.தெளிவாக உணர்த்தி உள்ளார்கள் கடவுளின் அவதாரம் பத்து என்று.

அதே சமயம் சிவ தத்துவத்தின் பிரகாரம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வை நம் உயிர் ஓ…! என்று இயக்கி… நாம் எண்ணிய குணங்களை ம்…! என்று தன் உடலாக்கும் பொழுது சிவமாகின்றது.

நாம் எந்த குணத்தினை எண்ணுகின்றோமோ அந்த குணத்தின் தன்மை உடலுடன் இணைந்து இயக்கப்படும் போது “வினை என்றும்… விநாயகா என்றும்…” காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள் ஞானிகள்.

நாம் கடவுளாக வணங்குவது எல்லாமே…
1.ஒவ்வொரு இயக்கப் பொருள்களுக்கும் மகரிஷிகள் காரணப் பெயர்களை வைத்து
2.நாம் அறிந்து கொள்வதற்காகச் செயல்படுத்தப்பட்டது தான் அவை அனைத்துமே.
3.கடவுள் என்று தனிச் சக்தியாக எதுவும் இயங்கவில்லை.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உடலாகும் பொழுது சிவம் என்றும்… உடலுக்குள் அது இணைந்து செயல்பட்த் தொடங்கி விட்டால் வினை என்றும்… இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த குணமே கணங்களுக்கு அதிபதியாகின்றது கணபதி…!

ஒருவரைக் கோபிக்கிறோம் என்றால் அந்தக் கோப உணர்வை நாம் சுவாசிக்கப்படும் போது “ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். அந்தக் கோபத்தின் வழிதான் நாம் செயல்படுத்த வேண்டி வரும்.

கோப உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து விட்டால் கணங்களுக்கு அதிபதியாகி அதன் வழிகளில் இந்த உடலில் இயற்கையில் இருந்த நிலையைக் காட்டிலும் மாற்றமாகித் தேய்பிறையாக மாற்றுகின்றது.

கோப குணம் வளர்ச்சி அடைந்து… நல்ல குணங்களைத் தேய்பிறையாக மாற்றுகின்றது. ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்.

இந்த வாழ்க்கையில் எந்தக் குணங்களை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் உணர்வுப்படி கணங்களுக்கு அதிபதியாகி அதனுடைய செயலை இந்த உடலுக்குள் உருவாக்கும்.

நம் உயிர் ஈசனாக இருக்கும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்கள் உடலுக்குள் உணர்வாகி உணர்வின் அணுவாகி
2.உடலுடன் இணையப்படும் பொழுது இறை… “இறைவா…”
3.அந்த உணர்வின் சக்தி உடலுக்குள் இயங்கத் தொடங்கினால் “தெய்வம்”
4.அந்த உணர்வின் சக்தி இயங்கி மீண்டும் அதைத் திரும்ப எண்ணினால்
5.அந்த குணத்தின் செயலாக நம்மை இயக்கும் “குரு…” என்று இவ்வாறு காரணப் பெயர்களை வைத்து
6.நாம் இயங்க வேண்டிய முறைகள் எது…? நாம் எப்படி இயங்க வேண்டும்…? நம்மை எப்படி இயக்க வேண்டும்…? என்ற முறைகளை வகுத்து
7.ஞானிகள் நமக்கு அதைக் காவியங்களில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது இயற்கையின் உணர்வின் தன்மையைக் காவியமாக்கி… அந்தக் கருத்தினை எண்ணத்தால் எண்ணி அந்த உணர்வை நுகர்ந்தால்… நம் உயிர் அதை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை நுகர வேண்டும்…? எதை நாம் வழிப்படுத்த வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது நமது சாஸ்திரங்கள்.